புதுடில்லி இலங்கை தூதரகத்தை தாக்கியவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை

03srilankanhighcommissioninde.jpgபுதுடில்லி யிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்துக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டதுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் இலங்கை தூதரகத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்று முன்தினம் பகல் சுமார் 2.30 மணியளவில் புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரலாயத்தின் முன்னாள் சுமார் 40, 50 பேர் கூடி நின்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறி ‘இலங்கையே கச்சதீவை விட்டு வெளியேறு, தமிழ்நாடு மீனவர்களை படுகொலை செய்யாதே’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுள் சுமார் 10 பேர் பாதுகாப்பையும் மீறி தூதரக வளவுக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்த முற்பட்டனர்.

உள்ளே நுழைந்தவர்கள் தூதரக நுழைவாயிலுக்கருகே வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சிலவற்றை நிலத்தில் அடித்து நொருக்கியுள்ளதுடன் தூதரகத்திற்கும் சிறு சேதங்களை விளைவித்துள்ளனர். உடனடியாக பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்வது அவர்களது ஜனநாயக உரிமை. எனினும் அத்துமீறி தூதரக வளவுக்குள் பிரவேசிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இது தொடர்பாக இந்திய அரசுக்கும், பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதரகத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்னா தெரிவித்தார்.

இச்சம்பவத்தை அடுத்து புதுடில்லி உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் வந்து தூதரகத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • appu hammy
    appu hammy

    Same happened in Norway also. That we can understand. But in India ???

    some body is trying hard to make a problem between sri lankan and india. But Attacks on Sri Lankan high comission all over the world is condemnable. Why are vandals targetting a peaceful nation I wonder

    anyway, what about the culprits who attacked British High Commission throwing stones and burning the National flag of the UK a few months ago? That’s oK

    Reply