வவுனியா நகர அபிவிருத்தி திட்ட வரைவு ஏகமனதாக ஏற்பு

வவுனியாவைப் புதிய நகரமாக மாற்றி அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை தயாரித்துள்ள திட்ட நகல் வரைவு அரச அதிகாரிகளாலும் மக்கள் பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸின் வேண்டு கோளுக்கிணங்கவும், ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக் குச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமை யவும் நகர அபிவிருத்தி அதிகார சபை புதிய நகரத்திற்கான திட்ட நகல் வரைவைத் தயாரித்து வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளையும் நகர சபை பிரதிநிதிகளையும் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு அழைத்து

விளக்கமளித்தார். இதனையடுத்து திட்ட நகல் வரைவை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் சிறிய நகரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூவரசங்குளம், நெலுக்குளம், செட்டிக்குளம், நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரவில் ஒரு பகுதி, ஓமந்தை, மாமடு உள்ளிட்ட பகுதிகள் சிறிய நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படுமென அரச அதிபர் தெரிவித்தார். அவ்வப் பகுதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய நகரில் வசதிகள் ஏற்படுத்தப்படுமென அவர் கூறினார்.

வவுனியா நகரில் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் அரச திணைக்களங்களை ஒன்றிணைத்து தாண்டிக்குளத்தில் அரச திணைக்களங்களின் கட்டடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. அரச விடுதிகளை ஒன்றிணைத்து பூந்தோட்டத்தில் விடுதித் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படும்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகள், உல்லாசத் துறை உள்ளிட்ட துறைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வவுனியா குளத்தைப் புனரமைப்புச் செய்வதுடன் உல்லாச விடுதிகளின் வசதிகளும் மேம்படுத்தப்படுமென அரச அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *