எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு

071009venkatraman-ramakrishnan.jpgதமிழகத்தில் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள அவருக்கு வேதியல் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரிபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் அவர் செய்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மற்றோரு அமெரிக்க விஞ்ஞானிக்கும், இஸ்ரேலிய விஞ்ஞானிக்கும் இதே பிரிவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படும் சாத்தியம் – தேர்தல் ஆணையாளர்

071009ec-com.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் இரு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களிற்காக ஒட்டப்பட்ட பிரசுரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவை அகற்றப்படாவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இரு பகுதிகளிற்குமான முடிவுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் இதன் போது எச்சரித்துள்ளார். 

மௌலவி ஆசிரியர் நியமனம் நவம்பரில்! கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தகவல்

210909ramzan.jpgமௌலவி ஆசிரியர் நியமனம் எதிர்வரும்  நவம்பர் மாதம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
 
காலி ஆளுநர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  இந்நியமனங்களை வழங்குவதற்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் தென்மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதால் இந்நியமனத்தை உடனடியாக வழங்க முடியாதுள்ளது. இத்தேர்தல் முடிவடைந்ததும் இந்நியமனங்கள் வழங்கப்படும்.

மௌலவி ஆசிரியர் நியமனமனத்தை கடந்த 20 ஆண்டு காலமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வழங்க மறுத்து வந்துள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அதனை வழங்க முன்வந்துள்ளது. இதனால் இந்நாட்டு முஸ்லிம்கள் நன்றியுடன் செயற்பட வேண்டும்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டினர் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்த போது விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாவாலசிரியை ஹிலாரி மேன்டலுக்கு புக்கர் பரிசு

booker.jpgபுக்கர் பரிசை இங்கிலாந்தை சேர்ந்த நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் பெற்றுக்கொண்டார்.57 வயதான இவருக்கு 16வது நூற்றாண்டைச் சேர்ந்த கதையான உல்ப் ஹால் நூலுக்காக இந்த பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. 1520களில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் உல்ப் ஹால் நூல் ஆகும்.லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசை அவர் பெற்றுக் கொண்டார்.

புக்கர் பரிசை இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் ஆகியோர் முன்பு பெற்றுள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

இலங்கை முகாம்களில் உள்ள அகதிகளை உடனடியாக மீள்குடியமர்த்த முடியாது – இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கூறுகிறார்

krushnak.jpgஇலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார் இலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலட்சம் பேர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் படி இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம். இலங்கையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதனை உடனடியாக செயற்படுத்த முடியாது..

இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் பருவ மழை பெய்து வருகின்றது.மேலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் மீண்டும் குடி யேறலாம் என்று திருப்தி தெரிவிக்கும் பட்சத்திலேயே அவர்களின் குடியேற்றம் சாத்தியமாகும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை – அமைச்சரவை தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத் திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எம்பிலிப்பிட்டியவில் நேற்றுக் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். முதல் மூன்று மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையாகவே இது இருக்குமெனவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப் படவிருந்தது ஆயினும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் முடிவடைவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. 

தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவையே தந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

duglas.jpgகடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவைத் தான் பெற்றுத் தந்துள்ளது என்பதனை இன்று அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. ஆகவே மக்களின் விமோசனத்திற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றும் அரசியல் தலைமைகளை இனங்கண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்

யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் 11 ஆவது ஆண்டு விழா யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் திரு.செல்வராஜா தலைமையில் இன்று (06) நண்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

முன்பள்ளி ஆசிரியர்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குள் மேற்கொள்வேன். முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும்

மாகாண சபைக்கு ஊடாகவும் மாகாணக் கல்வியமைச்சின் மூலமாகவும் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் ஊடாகவும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அடுத்து வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருப்பதினால் உங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான திறவுகோல் உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. சரியான ஜனநாயகத் தலைமைக்கு வாக்களிப்பதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

வரப்போகும் காலங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் அதனால் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என்றார்

முன்பள்ளி ஆசிரியர்களில் சேவை மூப்பு அடிப்படையில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்

க.பொ.த. சா/த பரீட்சை: நிவாரண கிராமம்: 20ஆம் திகதிக்கு முன் விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

021009-dep-of-edu.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் முகாம் கல்வி இணைப்பாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களது புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றிலிருந்து இம்முறை சுமார் 6,300 பேரளவில் க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் அல்லாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பப் படிவங்களுடன் பரீட்சைக்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. இவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமலேயே பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் நான்கு விதமாக வழங்கப்பட்டுள்ளன.

1. புதிய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்குரிய விண்ணப்பப்படிவம்.

2. பழைய பாடத் திட்டத்தின் கீழான பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவம்.

3. பழைய பாடத்திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப்பப்படிவம்.

4. புதிய பாடத் திட்டத்தின் கீழான தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப் பப்படிவம் என்பனவாகும்.

அத்துடன் இன்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி வவுனியா மாவட்டத்தில் உறவினர்களுடன் தங்கியிருக்கும் மாணவர்களும் தாம் இணைகின்ற பாடசாலையின் ஊடாக க.பொ.த. சா/த பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் வவுனியா வலய கல்வி பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

வவுனியா காமினி வித்தியாலயம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், பம்பை மடு புனர்வாழ்வு முகாம், வைரவ புளியங் குளம் முகாம் உட்பட அனைத்து நிவாரணக் கிராமங்களிலிருந்தும் சுமார் 6,300 பேரளவில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

‘மனநல மேம்பாடு’ தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்கு ஆசியப் பிராந்திய நான்கு நாள் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள பதினொரு நாடுகளிலிருந்து சுமார் 150 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்குபற்றியுள்ளனர்.

ஆன்மீகவாதிகள், சமூகவியலாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள், உளவள மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் என சகல மட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இம்மாநாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இம்மாநாட்டை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இலங்கை – இந்திய கடற்படை கப்பல்கள் நேற்றுமுதல் கூட்டுப் பயிற்சி

07indo-lanka.jpgஇந்திய மற்றும் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் நேற்று (06) இலங்கை கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக கடற்படை பதில் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார். இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐ. என். எஸ். சாதுல் மற்றும் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படைக் கப்பலான ‘வருண’ என்பன நேற்று முன்தினம் (5) இலங்கையை வந்தடைந் ததாகவும் இவற்றுடன் 250 கடற்படை வீரர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கடற்படை படகுகளுடன் இல ங்கை கடற்படை கப்பல்களான ‘சயுர’ மற்றும் ‘சாகர’ என்பனவும் அதிவேக தாக்குதல் கப்பல்களும் விசேட படகுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இவை நேற்று (6) முதல் 72 மணி நேர கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்திய கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டே இங்கு வந்துள்ளதோடு இலங்கை கடற்படையின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சியையும் அனுபவத்தையும் வழங்கும் வகையிலேயே கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். சுமார் 100 பயிற்சிபெறும் கடற்படை வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.