அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத் திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் நேற்றுக் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். முதல் மூன்று மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையாகவே இது இருக்குமெனவும் அவர் கூறினார்.
வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப் படவிருந்தது ஆயினும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் முடிவடைவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.