உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

‘மனநல மேம்பாடு’ தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்கு ஆசியப் பிராந்திய நான்கு நாள் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள பதினொரு நாடுகளிலிருந்து சுமார் 150 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்குபற்றியுள்ளனர்.

ஆன்மீகவாதிகள், சமூகவியலாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள், உளவள மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் என சகல மட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இம்மாநாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இம்மாநாட்டை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *