புக்கர் பரிசை இங்கிலாந்தை சேர்ந்த நாவலாசிரியை ஹிலாரி மேன்டல் பெற்றுக்கொண்டார்.57 வயதான இவருக்கு 16வது நூற்றாண்டைச் சேர்ந்த கதையான உல்ப் ஹால் நூலுக்காக இந்த பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. 1520களில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் உல்ப் ஹால் நூல் ஆகும்.லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசை அவர் பெற்றுக் கொண்டார்.
புக்கர் பரிசை இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் ஆகியோர் முன்பு பெற்றுள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது.