எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இந்திய உயர்ஸ்தானிகர் இன்று யாழ். விஜயம்

இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அருசாக் காந்தாவும் அவரது குழுவினரும் இன்று யாழ். மாநகர சபைக்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா

sarathfonseka.jpgஎதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  ஜெ வி பி கூறியுள்ளது. ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.  அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.

பட்டதாரிகள் வேலைவாய்ப்பு வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆகக் கூடிய வய தெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டு ள்ளதென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான வயதெல்லை 35 ஆகும். இதனை அதிகரிப்பதற்கான வேண்டு கோளை அமைச்சர் முரளிதரன் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தார் இதற்கமைய இந்த வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்

commander.jpgமுன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் படைத்தளபதியான தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
 
சரத் பொன்சேகா, பதவியில் இருந்த போது அவருக்கு சுமார் 750 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் அந்த பாதுகாப்பு தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், அவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள், பெண்கள் உட்பட 21 பேர் பிலிப்பைன்ஸில் படுகொலை தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்றவேளை சம்பவம்

பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.

கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.

அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.

நோர்வே தமிழர் அவையில் அரை அவியல்கள் : குலன்

Aravinthan_Ki_PiBallotsBox_VKR1976சந்திரனுக்கு நாய், குரங்குகளை அனுப்பிப் பரிசோதிப்பது போல் ஈழத்தமிழர் பிரச்சனைகள் நோர்வேயில் தான் பரீட்சிக்கப்படுகின்றன. காலாவதியான வட்டுக்கோட்டையைக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு மக்களை ஏமாற்றி மாறிமாறி ஓடப்போகிறீர்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டுதிரிந்த கி.பி அரவிந்தனே அதை கிழித்து பிரித்து எறிந்துவிட்டாராம். இதற்கு அவையினரின் அவியல் என்னவென்றால் கிபியை யாரோ வாங்கிவிட்டார்கள் என்பதுதான். புலியின் காலத்தில் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களைத் துரோகிகள் என்றார்கள். இன்று விலைபோனவர்கள் என்கிறார்கள். இப்படிக் காலத்திற்குக் காலம் கடைவிரித்து நன்றாகவே புலிவியாபாரம் செய்கிறார்கள். இறுதியில் புலம்(ன்)பெயர்ந்தவர்கள் புலிகளையே வித்துவிட்டார்கள்.

நோர்வேயில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கதாசிரியர்கள் என்று பலர் இருந்தபோதிலும் சென்ற 15.11.2009 நடைபெற்ற சுத்தமாத்துத் தேர்தலை மக்கள் மத்தியில் போட்டுக் கிழிப்பதற்கு ஒருவரும் முன்வராதது வேதனைக்குரியது. ஆயுதக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த பின்பும் மௌனமாக இருக்கும் நோர்வே எழுத்தாளர்களே! உங்கள் வாய்களையும் கைகளையும் உணவுண்ண மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நாளை உங்கள் கதவுகள் தட்டப்படும், பின் உடைக்கப்படும். அப்போதும் பேசாமல் இருங்கள்.

ஈழத் தீர்மானத்தை எடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரே சிந்தனை வாதங்கள் ஜதார்த்தத்துக்கு உதவாது என்று அதைக் கைவிட்டு வேறு பல தீர்மானங்களுக்கும், ஒப்பந்தங்களுக்கும் உடன்பட்டார்கள். திம்புகூட அப்படியாக உருவான ஒன்றுதான். தமிழீழம்தான் முடிந்தமுடிவு என்று நின்ற புலிகளே திம்புத் தீர்மானத்துக்கு ஒத்துவருகிறோம் என்றார்கள். இறுதியில் தமிழர்களுக்கு தருவதைத் தாருங்கள் என்று நின்றார்கள். இதுகூடத் தெரியாமல் புலமும் புலனும் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிவாலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்களே. தமிழீழத்துக்காக ஜனநாயகவழியில் போராடிய கூட்டணியினரோ புலிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். இதன்பின் புலத்தில் என்ன புதிதாக ஜனநாயகம் வேண்டி இருக்கிறது? ஜனநாயக, ஆயத போராட்டங்கள் இரண்டுமே தோல்வியில் முடிந்த ஜதார்த்தங்கள். இதைக்கூட புரிந்துகொள்ள அறிவில்லாதவர்களை புலன்பெயர்ந்தவர்கள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. அவர்களுக்கு எதற்கு அரசியல். அரை அவியலைத்தான் தின்னப்போகிறோம் என்று அடம்பிடித்தால் நீங்கள் வாழும் நாடுகளில் ஈழம்கேளுங்கள். வன்னி மக்களை விட்டுவிடுங்கள் வன்னிப்போருக்கு என்றும் வன்னிமக்களுக்கு என்றும் திரட்டிய பணங்கள் எங்கே. அதைக் கொண்டு வாருங்கள் முதலில். அன்பின்பு பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசலாம்.

நோர்வேயில் நடைபெற்ற அரை அவியல்களின் மந்தைகளுக்கு தேசியப்பட்டியல் பிராந்தியப்பட்டியல் என்று பட்டிகட்டி விட்டார்கள். அதற்குள் நின்று சிலர் பா பா என்று கத்தினார்கள். இவர்கள்தான் தேசியபட்டியல்காரர்கள். தேசமே இல்லாத மோசமான தேசியவாதிகள். பிறதேச பிரஜாவுரிமை கொண்டவர்கள்.

NorwayElection_NCET_National_List(Photos: TamilNet)இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியதுமான தகவல்கள் தேசத்திலோ வேறு இணைத்தளங்களிலோ தொடர்ந்தும் வரலாம். இவர்கள்தானாம் நோர்வேயின் பிராந்தியக் கட்டுப்பாட்டாளர்கள். முஸ்லீம்களையும், சிங்களவரையும் வடக்கு கிழக்கில் இருந்து கலைத்துவிட்டு தமிழீழம் கேட்டு நந்திக்கடலில் குதித்தோரின் வாரிசுகள். நோர்வேயிய மக்களை கலைத்துவிட்டு நோர்வேயில் ஈழம் அமைக்கப்போகிறார்களா? நோர்வே மக்களுக்கு இனி வாழ்க்கை நோ வேதான் (No-way). இந்த நோர்வே அவையின் கூத்துக்களை நோவேயிய அரசுக்கும் நோர்வே மக்களுக்கும் சரியாக எடுத்துக் கூற ஒரு சரியான ஆள் நோர்வேயில் இல்லையா? பிரிவினைவாதிகளால் நோர்வே சட்டத்தை அனுசரித்துப் போக முடியாதாம்; மக்களிடையே ஒற்றுமை பேணவேண்டும் என்கிறதாம் சட்டம். அவையின் திட்டம் அதுவல்லவே.

இந்தத் தேர்தலை வைத்து எந்தப் பாராளுமன்றத்துக்குப் போகப்போகிறார்களோ தெரியவில்லை. இங்குள்ள மக்களையோ ஈழத்திலுள்ள தமிழர்களையோ பிரதிநிதித்துவப் படுத்த நீங்கள் யார்? இந்தச் சர்வாதிகார உரிமையை தந்தது யார்? இவர்கள் கிட்லரை விட மோசமான நாசிகள் என்பதை ஏன் நோர்வேவாழ் தமிழ் தங்கங்களால் சொல்ல முடியவில்லை. அங்குள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து அவர்களுக்காகப் போராட அங்கே மக்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் அங்கேயே உருவாகுவார்கள். பிரபாகன் என்ற தமிழ்இனஅழிப்பாளனும், கொலை வெறியனும், உங்கள் பிரதிநிதிகளும் அங்கே அம்மக்களிடையே தான் உருவானார்கள். புலம்பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழ் தொழிலாளர்களை போர், விடுதலை என்று சுரண்டி தம்மை வளர்த்த புலிகளையும், பிரபாகரனையும் அழித்ததோடு நின்றுவிடாமல் இன்று நோர்வே நாட்டு மக்களுக்குப் படங்காட்டவும் நோர்வே நாட்டை நாசம் செய்யவும் தலைமை, பிரதிநித்துவம் என்று கொடி கொண்டு கோலோச்சத் திரிகிறார்கள் இந்தக் கொடியவர்கள். இவர்களுக்குக் கொம்பு சீவுபவர்கள் இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழைதான். இவர்களின் உண்மை முகங்களை அறிந்தும் இவர்களுக்கு தூபங் காட்டுபவர்களை என்ன என்று சொல்வது? கெடப்போகிறேன் பிடி பந்தயம் என்றால் யார் இவர்களைத் தடுக்க முடியும்?

பியோனார் முக்ஸ்னெஸ்: இவர் ஒரு நோவேயியர் சிவப்புச் சட்டைக்காரர். பெரும்பாலும் இவர் சார்ந்தகட்சி கட்டுக்காசை இழந்தே வந்திருக்கிறதாம். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பிறப்பில் தமிழராகவோ, தமிழர்களுக்குப் பிறந்தவர்களாகவோ அல்லது தமிழர்களைத் திருமணம் செய்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதுதான் அவையின் அரையவியல் சட்டம். தாம் உருவாக்கிய யாப்பையே மீறி ஒரு நோவேயியரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது அரை குறை அவை. இந்த முக்ஸ்னெஸ் என்பவர் எந்தத் தமிழிச்சியையும் திருமணம் செய்ததாகத் தெரியவில்லை. காந்தர்வமணங்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டா. வாக்களிக்கவே தகுதியற்றவர் எப்படி தேர்தலில் நிற்கமுடியும்? இதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அரையவியல்கள் தேர்தல் நடத்தினார்களாம். இனி அவையின் காட்டில் பணமழைதான்.

இந்த முக்ஸ்னெஸக்குத்தான் அதிகவாக்குக்கள் (1864) பதிவாகியிருந்தன. தமிழே தெரியாத ஒருவன் தமிழர்களுக்கு தலைமை தாங்கப்போகிறானாம். இவருக்கு எம்பிரச்சனைகளைச் சொல்ல மொழிபெயர்பாளர்களை அல்லவா கொண்டு திரியவேணும். இங்கேயும் அதிகார வெறியைப் பாருங்கள்; நோர்வே மொழி தெரிந்த தமிழர்கள்தான் பிரச்சனையை கூறலாம் என்ற நிலை வந்துள்ளதா இல்லையா? இதில் இருந்து என்ன தெரிகிறது. வல்லமையுள்ளது தான் வாழவேண்டும் என்ற புலிக்குணம் தெரியவில்லையா? எம்மை ஆழ்வதற்கு வெள்ளையன் ஒருத்தன்தான் சரியானவன் என்பது தெரியவில்லையா? 500 வருடங்களுக்கு மேல் வெள்ளையர்களுக்கு கீழ் அடிமையாக இருந்து அடிமை உணர்வில் ஊறிப்போய் வெள்ளையனுக்கு அடிமையாகியே நாறிப்போன சமூகத்தின் வேடிக்கைகளை உலகமக்களே பாருங்கள். இவர்களுக்கு சுதந்திரம் விடுதலை ஒரு கேடா. சுயமாகவே தன்னுள் விடுதலையடைய முடியாதவர்களுக்கு எதற்கு விடுதலை, சுதந்திரம். இச்சொற்களையே உச்சரிக்க அருகதையற்றவர்கள் இவர்கள்.

ஆதித்தன்: இவரோ ஒரு சுதந்திரமாகத் திரியும் சுத்துமாத்து. தமிழ்முரசம் எனும் புலிகளின் பிரச்சாரப்பீரங்கில் இப்படியொரு வெடிவைத்தாராம். ”தான் போராளியும், முதன் முதலில் சயனைட் உண்டு உயிர்நீர்த்த உரும்பிராய் சிவகுமாரனின் நண்பராம்”. இந்த ஆதியெனும் பொய்யன் பிறந்தது 1967ல். சிவகுமாரன் இறந்ததோ 1974ல். சிவகுமாரன் இறக்கும்போது இவருக்கு 7வயது. சிவகுமாரன் இவருக்கு சிலவேளை தூக்கி வைத்துப் பால் குடுத்திருக்கலாம். சிவகுமாரன்தான் தனது தந்தை என்று கூறியிருந்தால் கூட நம்பியிருக்கலாம். பெயருக்கும் புகழுக்குமாக மாற்றுக்கருத்தாளிடம் இருந்து மாறிப்போன ஆதி போன்றவர்களின் பொய்களை நம்பும் மக்கள் இருக்கும் வரையும் அவர்கள் காட்டில் மழைதான். அரசியல் அறிவிலும் ஆதிக்குப் பாதியில் வந்ததால் எல்லாமே பாதிதானாம். அரசியல் என்று வந்தபின் சபையில் சொல்லும் பொய்களை அவையில் போட்டு உடைப்பது கடமையல்லவா.

ரமணன்; தர்மசீலன்: இவர்களுக்கு ஏன் வோட்டுப் போட்டார்கள் என்று பார்த்தால் அவன் டொக்டர் இவன் இஞ்சினியராம். இஞ்சினியர் டாக்குத்தர்களுக்குத்தான் எல்லாம் உண்டு என்று அவர்களுக்கு மட்டும் தான் பெண்குடுக்கும் கலாச்சார வாரிசுகள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான். இனி டாக்குத்தருக்கும் இஞ்சினியருக்கும்தான் அரசியலும் தமிழ்ஈழமும்.

இதுபோலவே ஏதோ தேர்தல் எண்டார்கள் போட்டோம்: என்ன புள்ளடிதானே போட்டால்போச்சு: அவர் எனக்கு நல்லபழக்கம், இவர் வரச்சென்னார் போய் போட்டனான்: தமிழ் மக்களுக்காக பேசப்போகிறோம் என்றார்கள் அதனாலை போட்டனான்: எனக்கு ஒரே குழப்பமாய்தான் இருந்தது. அவை எங்களோடை நல்லமாதிரி அதனாலை போனனாங்கள் என்பது போன்ற காரணங்களுக்காகவும் வோட்டு வேட்டு வைத்தார்கள். எதற்கு வோட்டுப் போடுகிறறோம் என்று தெரியாமலே வோட்டுப் போட்டவர்களை மந்தை என்று வர்ணிக்காமல் வேறு எப்படி அழைக்கமுடியும். முக்கியமாக ஜெயசிறீ என்பவரைத்தவிர அரசியல் அனுபவமுள்ளவர்கள் இப்பட்டியலில் யாரும் இல்லை என்கிறார்கள்.

அரையவியல்களின் அவை யாப்பின்படி 50 சதவீதமானவர்கள் வோட்டுப் போட்டால் மட்டுமே இந்த தேர்தல் செல்லுபடியாகும் என்றார்கள். அவையின் அவியல்படியே 18வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் சிங்களவருடன் 8772 என்பதாகும். நோர்வே அரசின் புதுப்பிக்கப்படாத கணக்குப்படி 8582 என்பது அரச அறிக்கை. புதுப்பிக்கப்பட்டால் இது 10000தைத் தாண்டும் என்பது வேறுகணக்கு. நோர்வேக்கு தமிழர்கள் வரத்தொடங்கியதே 1960ல். தொழிலுக்கு என்றும், பாடசாலை பல்கலைக்கழகம் பின் அகதி என்று தமிழர்கள் காலம் காலமாய் நோர்வேயில் கொட்டுண்டார்கள். நோர்வேயில் ஈழத்தில் பிறந்த 18வயதுக்கு மேற்பட்ட தமிழர்கள் விசா இன்றி சட்டவிரோதமாக இருப்பவர்களே 3000 மேல் என்கிறது பொலிஸ் அறிக்கை. இவர்கள் மட்டுமே வோட்டுப்போட்டிருந்தால் அவைக்கு அவித்தவர்களை விட வோட்டுக்கள் கூட விழுந்திருக்கும்.

அவையின் கணக்குப்படியே நாம் கணக்கெடுத்தாலும் 50சதவீதத்தை எட்டாது. புதுப்பிக்கப்படாத கணக்குப்படி இலங்கைத் தமிழர்கள் ஆண்கள் 4491 பெண்கள் 4101. மொத்தம் 8582. அவைக்கு வந்த வோட்டுக்கள் அவையின் கணக்குப்படியே 2767. வீதாசாரப்படி 32.2 வீதம். அவையின் அவியல்களைப் பாருங்கள் கீழே.

NorwayElection_NCET_Eastern_Region(Photos: TamilNet)இவர்கள்தான் நோர்வேயின் பிராந்திய பருந்துகள். இந்த அரசியல் சூனியங்கள்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகிறார்களாம். பணருசி கண்ட பூனைகள் சும்மாவா இருக்கப் போகின்றன. நோர்வே தமிழ்தங்கங்களே பணங்களை எடுத்துத் தயாராக வைத்திருங்கள் மாவீரர் தினத்துக்கு குலுக்கிக்கொண்டு வருவார்கள். எல்லா நாட்டிலும் குலுக்கத் தொடங்கி விட்டார்கள்.

மேலுள்ளவர்களுக்கான அவையின் பட்டியல்:
Votes polled: 2076
• Sivaganesh Vadivelu (1600)
• Rajendhrum Ponnuthurai (1597)
• Sivarajah Vallipuram (1546)
• Kannan Nagendram (1523)
• Mary Florida Judin Francis (1470)
• Rajaratnam Veluppillai (1465)

கணிதம் தெரிந்த சிறுவர்களிடம் இந்தக் தொகையைக் கூட்டச்சொல்லுங்கள் 2076 வருகிறதா என்று பார்ப்போம். ஒருவருக்கு 5 வோட்டு என்றால் சுமார் 10380வோட்டுக்கள். சரி 7 வோட்டு என்றால் 14532 வோட்டுக்கள். இங்கே களிவுகள் வந்ததாகத் தெரியவில்லை. களிவுகளுக்கு எப்படிக் கழிவு வரும் என்று கேட்கக்கூடாது. இவர்கள் பிணங்களை எண்ணி எண்ணியே கணக்குப் போடப் புலிகளால் பழக்கப்பட்டவர்கள் இப்படித்தான் போடுவார்கள். அவை சொல்வதை அப்படியே நீங்கள் கேட்க வேண்டியதுதான். ஏன் எதற்கு என்று தெரியாமல் வோட்டுகளையும் போடவேண்டியதுதான். இதுதான் புதிய ஜனநாயகம். இத்தேர்தலிலுள் பெரிய தில்லுமுல்லு என்னவென்றால் ஒருவர் பிராந்தியதுக்கு 7 வோட்டும், பிரதேசத்துக்கு 5 வோட்டும் போடலாமாம். அப்போதுதானே தொகையைப் பெரிதாகக் காட்டலாம். வோட்டுப் போடப் போனவர்களுக்கும் இந்தவிசயம் தெரியாதாம். மேலுள்ள எண்களோ கணக்குகளோ சோடிக்கப்பட்டதல்ல. அவையை ஆட்டித்திரியும் தமிழ்நெட்டில் இருந்தே எடுக்கப்பட்டது.

மேற்குப் பிராந்தியத்தில் பிராக்குப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயசங்கர் அசோகன் என்பவரும் வெள்ளிபார்த்துப் போட்டியிட்டு வென்றுள்ளாராம். வெள்ளிபார்க்கும் வெங்காயங்கள் இருக்கும் வரையும் இவர்கள் காட்டில் பணமழைதான். இனி எல்லோரும் தேர்தல் நடத்தலாம். தேர்தலில் நிற்கலாம். ஏன் எதற்கென்று தெரியாமல் வோட்டும் போடலாம்.

நோவேயிய குடியுரிமையை வைத்துக் கொண்டு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்களிடமே போராட்டம் என்று பணம் திரட்டி தம்வங்கி வைப்பகங்களை நிரப்பும் இவர்கள் வன்னி மக்களைப்பற்றிப் பேசவோ பிரதிநிதப்படுத்துவோ அருகதையற்றவர்கள். நோர்வேயில் அடித்த காசுகளைப் மனச்சாட்சிப்படி கொடுக்க வக்கில்லை, வன்னிமக்களைப் பற்றிக் பேசுவதற்குப் புறப்பட்டு விட்டார்கள். புலிக்கென்று வாங்கி தங்கள் பணமூட்டையை நிரப்பிய பணங்களை எடுத்த முதலில் வன்னிமக்களுக்கு அனுப்புங்கள். அதன்பின் அவர்களைப்பற்றிப் பேசலாம்.

இந்தியாவையும் ஒரு வெள்ளைக்காரிதான் ஆளுகிறாள்; இலங்கைத் தமிழர்களை நோர்வேயில் ஒரு வெள்ளைக்காரன் ஆட்சிப்பொறுப்பு ஏற்றிருக்கிறான். காலணித்துவம் எம்மிடையே கால்கடுக்க நிற்கிறது. உயிர் கொடுத்து உயிர் பிழைத்து நிற்கும் ஈழம்வாழ் எம்முறவுகள் புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு சரியான பாடம் புகட்டுவார்களா? இன்று இவ்வளவு மக்களையும் அனாதைகளாக்கிக் கொன்று குவித்தது துவைத்தது அவையினர் என்பதை யார் எப்போ உணரப்போகிறீர்கள். இந்த வைரசுகள் எந்தநேரம் எப்படி வருவார்கள் என்பதை யாராலும் உணரமுடியாது. வைரசுகளுக்கு மருந்தும் இல்லை. தொற்றினால் தொற்றியதுதான். முடிவு சாவுதான். நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பன்றிக்காச்சல் போல் எம்நாடுகளுக்குள்ளும் பரவும் சாத்தியங்கள் அதிகமாகவே உண்டு. இந்தச் சாத்தான்களை நாட்டுக்குள் அனுமதிப்பதே அவமானம். இந்த மனிதவிரோதிகளை ஆணிவேருடன் அறுத்து விட முயற்சியுங்கள்.

மாவீரர் தினம் வருகின்றது. புலிகளால் பலாற்காரமாக அல்லது புலிகளை இரட்சகர் என்று நம்பி ஏமாந்து தன்னுயிர் நீர்த்த வீரர்களுக்குமாய் எங்கள் கண்கள் கசியும். புலிகளால் கொன்று குதறப்பட்ட ஒவ்வொரு மாற்று இயக்கத்தவர்களுக்குமாகவும், போரில் அப்பாவிகளாய் உயர்நீர்த்த எம் உடன்பிறப்புக்களுக்காகவும், புரியாது புலிப்பாசறைக்குப் போன பிள்ளைகளுக்காகவும், ஒரு நாள், ஒரு பொதுநாள் தெரிவு செய்யப்பட்டு துக்கதினம் அனுஸ்டிப்பது முக்கியமானது.

ஜனாதிபதித் தேர்தல் முதலில் – ஜனாதிபதி தீர்மானம்

anura.jpgஉரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.  ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு நேற்று நண்பகல் சுப நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தத் தீர்மானித்திருப்பதாக கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி இங்கு அறிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.  இந்தச் சந்திப்பில் சகல மாகாண சபை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 2005 நம்பவர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவ டைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி தனது முடிவை முறைப்படி கடிதம் மூலமாக நேற்று (23) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்தார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதியை தேர்தல் ஆணையாளர் வெகுவிரைவில் அறிவிப்பார் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.

நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும், மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது முன்னத்தை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31 (3) (அ) (1) இந்த சரத்து ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.  இதன்படி முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

டிசம்பர் 5இல் மெளலவி ஆசிரியர் நியமனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் விசேட பணிப்புரைக் கமைய டிசம்பர் 05 ஆம் திகதி மெளலவி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ள தாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப் பேகடுவையின் கண்டி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய மாகாண ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சு மற்றும் திறை சேரியின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசு ந்தரவைச் சந்தித்து நடாத்திய பேச்சு வார்த்தையையடுத்து இந்நியமனங்களுக்கான நிதியை உடனடியாகக் கல்வியமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்ப ட்டது

பொதுவேட்பாளரை நாளை ஐ.தே.மு. அறிவிக்கும்

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுவேட்பாளர் யார் என்பதை நாளை புதன்கிழமை கூட விருக்கும் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் அறிவிக்கப்படவிருக்கின்றது. எதிரணி பொது முன்னணியின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஜெனரல் சரத் பொன்சேகாவே தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஜே.வி.பி.யும் இணக்கப்பாடு கண்டிருப்பதாகவும் நாளை புதன் கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஜே.வி.பி.யும் கலந்துகொள்ளவிருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு நேற்று மாலை வெளிவரும் எனத் தெரியவந்ததையடுத்தே பொதுவேட்பாளரை நாட்டுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த விசேட நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளதும் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பொது வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பின்னர் அவரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தை பாரிய அளவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புவி அழகி – 2009 : பிரேசில் மங்கை முதலிடம்

miss_earth.png2009-ம் ஆண்டின் “புவி’ அழகியாக பிரேசில் மங்கை லாரிசா ரமோஸ். (இடமிருந்து 3-வது) தேர்ந்தெடுக்கப்படடுள்ளார். இந்தப் போட்டி பிலிப்பின்ஸில் நேற்று நடைபெற்றது. இரண்டாமிடம் பிடித்த பிலிப்பின்ஸ்  மங்கை சாண்ட்ரா சைஃபெர்ட் (இடமிருந்து 2-வது). மூன்றாவது இடத்தை வெனிசுலாவின் ஜெஸிகா பார்பரா பிடித்தார். “தண்ணீர்’ அழகியாக ஸ்பெயினின்  அலெஜாண்ட்ரா இஸவாரியா பட்டம் வென்றார்..