எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சவூதி அரேபியாவில் கடும் மழை, வெள்ளம் 77 பேர் பலி; பலரைக் காணவில்லை

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வருடங்களில் ஏற்படாதளவு பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்த மில்லியன் கணக்கான யாத்திரிகர்களில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென சவூதி உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கா நகரில் இடம்பெறும் முஸ்லிம்களின் வருடாந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்பாரிய மழை வீழ்ச்சி இடையூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பத்திரிகை முகவர் அமைப்பின் தகவலின்படி ஜித்தா ராபி மற்றும் மக்கா ஆகிய நகரங்களிலேயே வெள்ளத்தால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உயிரிழப்புகள் வெள்ளத்தினாலும் வீடுகள் இடிந்து வீழ்ந்தமையாலும் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வெள்ளப் பெருக்கினால் பெருந்தொகையான மக்கள் கார்கள் மற்றும் பஸ்களினுள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, சவூதி மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் குடியிருப்புப் பகுதி என்பவற்றில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவின் பொதுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அப்துல்லா அல்அம்ரீ தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் நகரைச் சூழவுள்ள குடிசைப் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையினை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்தும் 3 மில்லியன் மக்கள் மக்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தமது பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற இறைவனை வழிபட மலையேறும் போது சனநெரிசல் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், மழை காலம் என்பதனால் யாத்திரிகர்களை கவனமாக செயற்படுமாறு சவூதி அரசு எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் யாத்திரையின் போது ஏற்படும் நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஹஜ் யாத்திரைக் காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படுவது வழமை என்ற போதிலும் இம்முறை வழமைக்கு மாறாக கடும் மழை ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவையின் நிருபர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலையில் ஐ.தே.க.- லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

000lakshman_yapa_abeywardena.jpgஇலங்கை யின் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாத நிலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்ன நேற்றுத் தெரிவித்தார்.

தமது வேட்பாளரை களமிறக்க முடியாமல் போன ஐ. தே. கவும், ஜே. வி.யும் சேர்ந்து உறுப்பினர்களே இல்லாத 14 கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யுத்தத்தை வெற்றி கொண்டு, பாரிய அபிவிருத்தி பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டி போட முடியாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது செயலமர்வின் அங்குராப்பணம் வைபவம் கம்புருகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த செயலமர்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த நான்கு ஆண்டு காலத்திற்குள் அபிவிருத்தி பணிகளுக்காக அரசாங்கம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வீதி, நீர்ப்பாசனம், மின்சாரம், கல்வி, உட்பட சகல துறைகளிலும் பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிராம அபிவிருத்திக்காக சேவையாற்றும் உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் அவர்கள் ஆற்றிய சேவைகள் அடங்கிய புத்தகம் ஒன்று தேசிய ஊடக மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த புத்தகம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தான் செய்த சேவைகளை தேர்தல் காலங்களில் மக்களுக்கு தெரியபடுத்த உதவியாக அமையும் என்றார்.

2012 ஆண்டு நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஜனாதிபதியின் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் யுத்தத்தை வெற்றிக் கொண்டது போன்று அபிவிரு த்திகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் காலங்களில் அரச காணிகளை கைமாறத் தடை: ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல் காலங்களின் போது அரச காணிகளை சுவீகரித்தல், மற்றவருக்கு பொறுப்பளித்தல் போன்ற நடவடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அரச காணிகளை சுவீகரிக்கவும், மற்றவர்களுக்கு வழங்கவும், பொறுப்பளிக்கவும் கூடிய நடவடிக்கைகள் மறைமுகமாக நடை பெற்று வருவதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை விடுத்து ள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதானம், சுபீட்சம் நிறைந்த வாழ்க்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி ஹஜ் வாழ்த்து

mahinda0.jpgவடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ் லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் யாத்திரையையும் தியாகத்தையும் நினைவூட்டும் இப்பெருநாள் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய வருடாந்த நிகழ்வாகக் காணப்படுகின்றது.

இன்றைய நாளில் இலங்கையி லிருந்து சுமார் 500 பேர்கள் உட்பட சுமார் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் யாத்திரையானது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தோடும் சகோதரத்துவ உணர்வுடனும் தமது கிரியைகளை மேற்கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடனும் மானிட சகோதரத்துவ உணர்வுடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் வரலாற்று நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ள இச் சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களோடு அச்சமின்றி வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாளில் முஸ்லிம்கள் தமது விசேட சமயக் கிரியைகளின் போது கேட்கின்ற பிரார்த்தனைகளில் எம் எல்லோருக்கும் கெளரவமான சமாதானம் கிடைப்பதற்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் மிக்க நன்நாளாக இருக்க எனது நல்வாழ்த்துக்கள்.

அடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த பிரிட்டன் எதிர்ப்பு

அடுத்த பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சிகளை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரை இலங்கை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வெகுமதி வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் 60 வருட நிறைவையொட்டி பிரிட்டனில் காலனித்துவ ஆட்சியிலிருந்த 53 நாடுகளின் தலைவர்கள் ட்ரினிடாட் அன்ட் டுபாகோவின் தலைநகரான போர்ட் ஒவ் ஸ்பெயினில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாக 2011 இல் நடைபெறவுள்ள அடுத்த பொதுநலவாய உச்சி மாநாட்டை எங்கு நடத்துவது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த மாநாட்டை நடத்துவதற்கு போட்டியிடும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்நிலையில், இவ்வாய்ப்பு இலங்கையைச் சென்றடைவதைத் தடுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணின் முயற்சி கலந்துரையாடலில் கடும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கை போட்டியிடுவது தொடர்பில் பிறவுண் உண்மையில் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கும் டவுணிங் தெரு தகவல்களில்முறையான மனிதாபிமான வசதிகளின்றி பல்லாயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்து அவலத்திற்குள்ளாக்கியதன் மூலம் பொதுமக்கள் மீது பாரிய தாக்கமொன்றை ஏற்படுத்திய இலங்கையின் நடவடிக்கைக்கு வெகுமதி வழங்கும் நிலைப்பாட்டை இலகுவானதாக எம்மால் எடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2017ம் ஆண்டு வெளியேறி விடும்

white-house.jpgஆப்கா னிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2017ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2001ம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்தது. இது தவிர நேட்டோ நாட்டு படைகளும் ஆப் கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது படை வீரர்களை படிப்படியாக திரும்ப பெற்று வருகின்றன. 2011ம் ஆண்டுக்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. இதனால் ஆப் கானிஸ்தான் காந்தகார் பகுதியில் பாது காப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒபாமா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக் கான அமெரிக்க படைத் தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே 35 முதல் 40 ஆயிரம் வரையிலான இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.

இது குறித்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது :-

நமது படைகள் ஏன் அங்கு இன்னும் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்காகவே தமது படைகள் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் உள்ளன. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் வரை இந்த படை இருக்கும். 2017ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும்.

அரசியல் கட்சியினர் 57 பேரை படுகொலை செய்த பிலிப்பைன்ஸ் மாகாண கவர்னர் மகன் உட்பட 21 பேர் கைது

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாகாண கவர்னர் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கிறது.  இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு குடாடாட்டு பழங்குடியின தலைவர் இஸ்மாயில்கான் ஆதரவாளர்கள் மனுதாக்கல் செய்ய சென்றனர்.

அப்போது இஸ்மாயில் மனைவி ஜெனாலின், அவரது ஆதரவாளர்கள், வக்கில்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 57 பேர் அம்பாட்டுவான் பழங்குடியின அரசியல் கட்சியினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் 22 பேர் பத்திரிகையாளர்கள் ஆவர்.

pili.bmpபிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை தொடர்பாக பலிப்பைன்ஸ் இராணுவத்தினர் 20 பேரை நேற்று கைது செய்தனர். மகுயின்டநாவ் மாகாண கவர்னராக உள்ள அண்தால் அம்பாட்டுவான் மகனும் மேயருமான ஜூனியர் அண்தால் என்பவரது தலைமையில்தான் ஆயுதம் தாங்கிய குழு குடாடாட்டு ஆதரவாளர்களை கடத்திச் சென்று படுகொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர் இராணுவத்திடம் சரண் அடைந்தார்.

போராளிகளைத் துரோகிகளாக்கி சுயஇருப்புக்கான பணச்சடங்காக்கிய தினம் : த ஜெயபாலன்

London_Maaveerarnaalதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுள்ள தளபதி ராமின் மாவீரர் தின உரை (தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை)புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும் அவர்கள் சார்ந்த ஊடகங்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. தளபதி ராமின் மாவீரர் தின உரை என்று கூறி சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட உரை தளபதி ராமினது உரையல்ல. அவ்வுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவால் அவர்கள் சார்ந்த ஊடகங்களால் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது. அவ்வுரை தவறுதலாக தேசம்நெற் இலும் சில நிமிடங்கள் பிரசுரமாகி இருந்தது. அத்தவறிற்காக வருந்துகிறோம். தற்போது தளபதி ராமின் முழுமையான உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

வே பிரபாகரனது மாவீரர் தின உரையும் தளபதி ராமினால் வழங்கப்பட்ட மாவீரர் தின உரையும் ஒரே நபரினால் தயாரிக்கப்பட்டு உள்ளதைப் போன்ற தோற்றத்தையே வழங்குகின்றது. அல்லாவிட்டால் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை ஆராய்ந்து அதே பாணியிலேயே இந்த மாவீரர் தின உரையும் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வே பிரபாகரனது மாவீரர் தின உரைக்கு மாறாக இந்த மாவீரர் தின உரை யதார்தத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

தளபதி ராமின் மாவீரர் தின உரையின் முக்கியமான அம்சங்கள்:

1. கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும்,கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இன்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.

2. எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த விளைவின் தாக்கங்கள் முற்கம்பி வேலிகளுக்குள்… பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்து…. பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து…… இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும்.. கனவனை இழந்த மனைவியுமாக….

3. இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதறக்காக நாம் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம்.

4. எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீள்வதற்காக தேசியத் தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக  ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது.

5. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத் தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார். இச்சூழலில் இருந்து நாம் மீளமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.

இவ்விடயங்களே தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய அம்சங்கள். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கும் அதில் பதில் இல்லாவிட்டாலும் தற்போதைய நிலையில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசரமான அவசியமான செய்திகளை தளபதி ராமின் மாவீரர் தின உரை கொண்டிருந்தது.

London_Maaveerarnaalஆனால் தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய விடயங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து பொருளாதார நன்மைகளைப் பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைக்கு பெரும் எரிச்சலாக அமையும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. குறிப்பாக ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார்’, ‘தலைவர் லட்சியத்தில் உறுதியாக நின்றது பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது’, ‘ஆயுத வன்முறையை முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்’, ‘முற்றுகைக்குள் இருந்து மீள தேசியத் தலைவர் ஆயுதங்களை மூன்றாம் தரப்பினூடாக ஒப்படைக்க முடிவெடுத்தார்’, ‘எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார்’ போன்ற விடயங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையின் நிதி வசூலுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. இதுவரை தாயகத்தில் உள்ள போராளிகளை வீரசாகசங்களுக்கு உள்ளாக்கி வசூல் ராஜக்கள் ஆன இத்தலைமைகள் தற்போது அங்குள்ள போராளிகளது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன் அவர்களுக்கு துரோகிப்பட்டமும் சூட்டி உள்ளன.

தளபதி ராமின் தலைமையை ஏற்காத புலம்பெயர்ந்து வாழும் கஸ்ரோ அணியைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமை ராம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுவதாக செய்திகைளக் கசிய விட்டனர்.

தளபதி ராமுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய கேணல் கிட்டுவின் நெருங்கிய சகாவான ‘ஜக்’ என்பவரை துரோகி எனக் குற்றம்சாட்டி எக்சல் மண்டபத்திலிருந்து வெளியேற்றி உள்ளனர். ‘கமல்’ ‘தனம்’ என்றழைக்கப்படும் நபர்கள் மண்டப காவலாளிகள் பலரை வரவழைத்து ‘ஜக்’ என்ற முன்னால் போராளியை வெளியேற்றினர். இச்சம்பவம் மாவீர்ர தினத்திற்கு முதல்நாள் நவம்பர் 26ல் ஏற்பாட்டு ஒழுங்குகளின் போது இடம்பெற்றது.

இவ்வாண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் புலன்பெயர்ந்த ஆதரவுத்தளமும் உள்ளது. நம்பர் 27ல் தலைவர் உரையாற்றுவார் பொட்டம்மான் உரையாற்றுவார் போன்ற கதைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு திட்மிட்டுப் பரப்பி வந்தது. அதனால் இவ்வாண்டு மாவீரர் தினத்தில் பங்கேற்க தலைவரின் அல்லது பொட்டம்மானின் உரையைக் கேட்க பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் எக்சல் மண்டபத்தில் கூடி ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.

இதற்கிடையே மண்டபத்தில் இலங்கையில் இருந்து தனது மாவீரர் தின உரையை வழங்கிய தளபதி ராமின் உரையை ஒலிபரப்பும்படி சில கோரிக்கைகள் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் உள்ள தளபதிகளின் உரையை ஒலிபரப்புவது பயங்கரவாதமாகக் கருதப்படும் என்பதால் அவ்வுரையை ஒலிபரப்ப முடியாது என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘தனம்’ கோரிக்கை விட்டவர்களுக்குத் தெரிவித்ததாக எக்சல் மண்டபத்தில் இருந்து தேசம்நெற்க்கு தொலைபேசியில் தெரிவித்தனர்.

தாயகத்தில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும் போராளிக் குடும்பங்களும் தங்கள் அன்புக்குரியவர்களையும் அங்கங்களையும் இழந்து தங்கள் அடிப்படைப் பொருளாதார வருவாய்களையும் இழந்து அல்லல் உறுகையில் அவர்களுக்கு உதவ தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும் முன்வரவில்லை. அவர்களின் பொறுப்பில் இருந்த 300 மில்லியன் ஆண்டு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே உள்ளது. ஆனால் உயிருடன் உள்ள போராளிகளை, போராளிக் குடும்பங்களை விதியின் கையில் விளையாட விட்டுவிட்டு உயிர்நீத்த போராளிகளுக்கு விழா எடுத்து தங்கள் பாவத்தை கழுவ நாடகமாடுகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும்.

‘அண்ணை இருக்கும் மட்டும் விழுந்து விழுந்த செய்தாங்கள். இப்ப ஏன் நாயே என்றும் கேக்கிறான்கள் இல்லை. அப்பாவை இழந்த குடும்பத்தைப் போல் ஆகிவிட்டது எங்களுடைய நிலைமை’ என மனவருத்தத்துடன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார் தாயகத்தில் உள்ள போராளி ஒருவர். இவ்வாறான சோகமான பல சொந்தக் கதைகள் பல முன்னாள் போராளிகளிடம் உள்ளது. புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் அப்போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட போராளிக்கு குடும்பங்களுக்கும் உதவ முன்வருவார்களா?

இன்று நவம்பர் 27ல் லண்டன் எக்சல் மண்டபத்தில் மிகப்பெரும் செலவில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 4300 பவுண்கள் கட்டணம் செலுத்த வேண்டிய மண்டபத்தை 36 மணி நேரங்களுக்கு வாடகைக்குப் பெற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். மண்டபத்தை விட ஒலி, ஒளி, பாதுகாப்பாளர்கள் என அதற்கெனத் தனியான கட்டணங்கள். இவை மட்டுமே 200 000 பவுண்களைத் தொட்டுவிடும். இதற்கு அப்பால் இன்னும் எத்தினை செலவுகள். எத்தனை நாடுகளில் இவ்வளவு நிதிச் செலவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு இருக்கும். இவர்கள் ஒருநாள் மாவீரர் தினத்திற்கு செலவிடும் இத்தொகை இறுதியாக நடத்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் (போராளிகள் பொது மக்கள் உட்பட 20 000 பேர்) வழங்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபாவரை வழங்கியிருக்க முடியும். இது உயிரிழந்த அன்புக்குரியவர்கைள அவர்களுக்கு மீட்டுக் கொடுக்காவிட்டாலும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கும். அதனையே உயிரிழந்த ஒவ்வொரு போராளியும் விரும்பி இருப்பான்.

மாவீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். நினைவு கூரப்பட வேண்டியவர்கள். அதற்கு இவ்வளவு நிதிச் செலவில் விழா எடுக்க வேண்டியது தேவையல்ல. மாவீரர்களை நினைவு கூரும் ஒவ்வொருவரும் ஒரு மாவீரர்களது படத்தைத் தாங்கி மெழுகு வர்த்தியுடன் அமைதியாக அவரவர் வாழும் தலைநகர் வீதிகளுக்கு வந்து சில மணிநேரம் தங்கள் மெழுகுதிரிக்கு ஒளியேற்றி இருந்தால் அச்செய்தி சர்வதேசத்திற்கே சென்றிருக்கும்.

ஆனால் மூடிய மண்டபத்திற்குள் பணத்தை வாரி இறைத்துச் செய்யும் சம்பிரதாயச் சடங்குகள் மூலம் பணம் மட்டுமே பண்ண முடியும். அதனையே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைகள் செய்கின்றன. அவர்களது நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் எதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவர்கள் தாயக மக்களது பெயரில் தங்களை வளர்த்துக்கொள்ளத் தயங்கப் போவதுமில்லை.

._._._._._.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் இருந்து இயங்கும் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரை: தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி – தேர்தல்கள் ஆணையாளர் இன்று அறிவிப்பு

dayananda_disanayake.jpgஇலங் கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

வேட்பு மனுக்கள் டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை இன்னிங்ஸ்-144 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

india.jpgகான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை ஒரு இன்னிங்ஸ், 144 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி அடையச் செய்தது.

கான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 642 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து இலங்கையின் ஆட்டம் தொடங்கியது – தடுமாற்றத்துடன். ஸ்ரீசாந்த்தின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 229 ஓட்டங்களுக்கு இழந்தது. இதையடுத்து பாலோ ஆன் வாங்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இலங்கை. இந்த முறை ஹர்பஜன் சிங்கும், ஓஜாவும் பந்து வீச்சில் இலங்கையை கட்டுப்படுத்தினர்.

சமரவீராவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்து வெளியேறினர். சமரவீர கடுமையாகப் போராடி 78 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 269 ஓட்டங்களில் வீழ்ந்து இலங்கை. ஒரு இன்னிங்ஸ் 144 ஓட்டவித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது முதல் இன்னிங்ஸில் இலங்கையை நிலை குலைய வைத்த ஸ்ரீசாந்த் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 India 642
Sri Lanka 229 & 269 (65.3 ov)
India won by an innings and 144 runs

Sri Lanka 2nd innings (following on)
 NT Paranavitana  lbw b Sehwag  20 
 TM Dilshan  c †Dhoni b Sreesanth  11
 KC Sangakkara*  b Harbhajan Singh  11
 DPMD Jayawardene  run out (Yuvraj Singh/†Dhoni)  10 
 TT Samaraweera  not out  78 
 AD Mathews  c Dravid b Khan  15
 HAPW Jayawardene†  b Harbhajan Singh  29 
 HMRKB Herath  lbw b Harbhajan Singh  13 
 M Muralitharan  b Ojha  29 
 BAW Mendis  lbw b Yuvraj Singh  27 
 UWMBCA Welegedara  c & b Ojha  4 
 Extras (b 7, lb 1, nb 14) 22     
      
 Total (all out; 65.3 overs; 294 mins) 269 (4.10 runs per over)
Fall of wickets1-13 (Dilshan, 3.3 ov), 2-37 (Paranavitana, 10.5 ov), 3-54 (DPMD Jayawardene, 18.3 ov), 4-54 (Sangakkara, 19.1 ov), 5-79 (Mathews, 24.4 ov), 6-140 (HAPW Jayawardene, 37.5 ov), 7-154 (Herath, 41.2 ov), 8-191 (Muralitharan, 44.5 ov), 9-264 (Mendis, 64.2 ov), 10-269 (Welegedara, 65.3 ov) 
        
 Bowling O M R W Econ  
 Z Khan 11 0 63 1
 S Sreesanth 11 4 47 1
 Harbhajan Singh 22 2 98 3
 V Sehwag 3 0 4 1
 PP Ojha 15.3 4 36
 SR Tendulkar 1 0 6 0  
 Yuvraj Singh 2 0 7 1