எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இடம்பெயர்ந்த வாக்காளர்களுள் கூடுதலானோர் வாக்களிக்க விண்ணப்பம் – ஜனாதிபதி தேர்தலைவிட விண்ணப்பித்தோர் எண்ணிக்கை இருமடங்கு

election_cast_ballots.jpgஇடம் பெயர்ந்த வாக்காளர்கள், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கென கூடுதலானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலைவிட பொதுத் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை இரு மடங்காகுமென்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம் முதலான பிரதேசங்களில் வாழும் மக்களே இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க சுமார் 26 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஆனால், பொதுத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக மேலதிக ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை அமைப்பதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். வேட்பாளர் ஒருவர் மாவட்டமொன்றில் ஒரு மத்திய அலுவலகத்தையும் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஓர் அலுவலகம் வீதமும் அமைத்துச் செயற்பட முடியும். எனினும், இந்த அலுவலகங்களை தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் எட்டாந் திகதி நள்ளிரவு வரையே நடத்த முடியும். அதன்பின் மூடிவிட வேண்டும். கிளை அலுவலகங்கள் ஆறாந் திகதி நள்ளிரவு வரையே நடத்தப்பட முடியும். எனினும், வேட்பாளர் தனது இல்லத்தில் ஓர் அலுவலகத்தை ஆறாந் திகதி நள்ளிரவுக்கும் எட்டாந் திகதி நள்ளிரவுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் எந்தவொரு தேர்தல் பிரசார அலுவலகத்தையும் அமைக்கக் கூடாது என்பது சட்டமாகும். தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவி ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு – ஐ. ம. சு. முவை ஆதரிக்க முன்வருகை

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவியுமான தில்ருக்ஷி ஸ்ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் இச்சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைமைத்துவம் மற்றும் அதன் செயற்திட்டங்கள் குறித்து திருமதி தில்ருக்ஷி தமது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையின் நிலைப்பாடற்ற தன்மை மற்றும் தூர நோக்கற்ற திட்டங்கள் குறித்து தமது அதிருப்தியைத் தெரிவித்த அவர்; தற்போது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பலமான வேலைத்திட்டங்களுக்கு சுயாதீனமாக தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீபதி சூரியாராச்சி கட்டியெழுப்பிய அமைப்பு வியூகத்தினைப் பயன்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பலப்படுத்துவதற்கு உழைப்பதாக அவர் மேலும் தெரிவிததார்.

தில்ருக்ஷி சூரியாராச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு கம்பஹா மாவட்டத் தலைவியாகவும் ஐ. தே. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமாகவுள்ளார். மேற்படி நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார மேம்பாட்டு தேசியக் கொள்கை!

nimall.jpgசுகாதார நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்கான  தேசியக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு அமைச்சரவை முடிவு  செய்துள்ளது.

சுகாதாரம் மற்றும் போஷாக்குத் தறை அமைச்சா; நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமாபித்திருந்தாh;.

சுகாதாரத் துறையின் அனைத்து விடயங்களையம் உள்ளடக்கியதாக இந்தக் கொள்கைத் திட்டம் வகுக்கப்படவுள்ளது.

பிரிட்டனின் செயற்பாடு இலங்கையின் இறைமை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்

gl_1.jpgஇலங் கையின் உள்விவகாரங்களில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வெறெந்த நாட்டுக்கோ தார்மீக உரிமை கிடையாது. புலிகளுக்குச் சார்பான உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றியதன் மூலம் அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். பிரிட்டனின் செயற்பாட்டின் மூலம் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ஜீ. எல். பீரிஸ் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

இலங்கைக்கு வெளியில் புலிகள் இயக்கத்தை நிறுவ வேண்டுமென்று கூறிவரும் உலகத் தமிழ் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பங்கேற்றது மிகவும் தவறாகும். பிரிட்டனில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அந்நாட்டு அமைச்சருக்கு உரிமை உள்ளது. ஆனால், இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேசுவதற்கு அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் தெளிவான தீர்வு வழங்கியுள்ளனர். இந்த நாட்டுக்கு எத்தகைய தீர்வு தேவை என்பதை இந்த நாட்டு மக்கள் முடிவு செய்வர். ஒரு நாட்டின் விடயம் தொடர்பில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட நோக்கம் இருக்கலாம். ஆனால், அந்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் செயற்பாட்டையும் உரையையும் நாம் கண்டிக்கிறோம். இதேவேளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளை கொள்வனவு செய்யாது பகிஷ்கரிக்குமாறு மேற்படி அமைப்பு அங்குள்ள தமிழ் மக்களை கேட்டுள்ளது. இதனூடாக எமது நாட்டு பொருளாதாரத்தை அழிக்க சதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு: சாட்சிகளின் தொகுப்பு ஓரிருதினங்களில் இராணுவ நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

sarath_fonseka-02.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளின் தொகுப்புக்கள் இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சாட்சிகளின் தொகுப்பு தயார்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவு பெறவுள்ளதுடன் அடுத்த வார முற்பகுதியில் இது இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை 31 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தற்பொழுது தொழில் நுட்ப சான்றுகள் தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 31 சாட்சியங்களில் சிவிலியன்கள் மற்றும் படையினரும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ நீதிமன்றில் சாட்சியங்களின் தொகுப்புக்கள் சமர்ப்பிக்க முன்னர் தொழில் நுட்ப சான்றுகள் தயார்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள தாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஆசியாவின் சிறந்த நடிகை மாலினி பொன்சேகா

malani_fonseka.jpgஇலங் கையின் மூத்த நடிகை யான மாலினி பொன்சேகாவை ஆசியாவின் சிற ந்த நடிகைகளில் ஒருவராக சி. என். என். தெரிவு செய்துள்ளது. ஆசியாவின் 25 சிறந்த நடிக, நடிகையர் பட்டியலில் மாலினி பொன்சேகா இடம்பெற்றுள்ளார்.

சீனா, ஹொங்கொங், ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேஷியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுக ளில் இருந்து 25 சிறந்த நடிக, நடி கையர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், நர் கிஸ், குரு தத், பிரான், மீனாகுமாரி ஆகியோர் இந்தியாவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதலாவது இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஆவார்.

ஜனாதிபதியின் 2வது பதவியேற்பு நவம்பர் 18

gl_pereis.jpgநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்துவதற்காக சகல சட்டங்களையும் நவம்பர் நடுப் பகுதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சட்ட மூலங்கள் புதிய பாராளுமன்றம் கூடும் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கும் ஜனாதிபதி இரண்டாவது தடவையாக சத்தியப்பிரமாணம் செய்யும் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த 20 வருடங்களாக கிடைக்காதிருந்த அரிய சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இதன் உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் வகையில் பலதுறைகள் அடையாளங் காணப்பட்டு ள்ளன. இந்தத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு 5 வருட காலத்துக்குள் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:- பாராளுமன்றம் கூடியவுடன் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு துரித திட்டங்களை முன்னெடுக்கவும் அதற்குத் தேவையான அனைத்து சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்யும்போது அபிவிருத்திக்கு தேவையான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

முன்னேற்றத்துக்கான துறைகளாக மின்சக்தி, எரிசக்தி, விவசாயம் முதலீடுகள், கல்வி உட்பட பல துறைகள் அடையாளங் காணப்பட்டுள் ளன. எதிர்வரும் காலங்களில் 2000 மெகா வாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. நுரைச்சோலை அனல் மின் திட்டத்தினூடாக 3 கட்டங்களில் 900 மெகா வாட், கொத்மலை திட்டத்தின் மூலம் 150 மெகாவாட் கெரவலப்பிட்டிய மின் திட்டத்தின் மூலம் 300 மெகாவாட், சாம்பூர் மூலம் 500 மெகாவாட், மொர கஹகந்த மூலம் 80 மெகா வாட், உமாஓய மூலம் 140 மெகாவாட் மின்சாரம் கிடை க்கவுள்ளது. கிராமிய மட்டத்தில் ஆரம் பிக்கப்படவுள்ள கைத்தொழிற்துறைகளுக்கு மின்சக்தி பயன்பட உள்ளதோடு இதனூடாக பெருமளவு தொழில் வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. விவசாயத்துறை மேம்படுத்தப்படும். விவசாய கிராமங்கள் அமைக்கவும் உள்நாட்டு மூலப் பொருட்களுக்கு உரிய இடம் பெற்றுக் கொடுக்கவும் மின் வளத்தை முழுமையாக பயன்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தியின் பலனை நாட்டின் சகல பகுதிகளுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். கல்வித்துறையை நவீனமயப்படுத்துதல், பாடத் திட்டங்களை தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கிராமங்களில் கணினி அறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள எரிபொருள் வளங்களை ஆய்வு செய்து அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசியலும் சமயமும்: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Religion & Politicsஅரசியலுடன் சமயத்தை கலத்தலாகாது. இது நான் போடும் கட்டளையல்ல, மாறாக பெரும்பான்மை பொதுமக்கள் தொடக்கம் சமயவாதிகள் ஈறாக அரசியல்வாதிகள் வரை அடித்து சொல்லும் விடயம். இதன் தர்க்க நியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காமல் ஆம் அரசியலுடன் சமயம் கலக்கவே கூடாது என்று தேசம்நெற் பின்னூட்டகாரர் சிலர் காட்டமாக சொல்வதால் இவை இரண்டுடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ள நம்மில் அனேகர், பின்னூட்டகாரர்களும் உள்ளடங்களாக, இதில் எதை தீண்டதகாத விடயமாக கருதுகின்றனர்? அல்லது இவை இரண்டும் சேர்வதால் நாம் இழக்கப்போகும் நன்மைகள் எவை என்பதை அவர்களிடமிருந்து அறிய நாம் ஆர்வமாய் இருக்கிறோம். அதற்கு களமமைப்பதே இக்கட்டுரையின் உள்நோக்கு. அதற்கு முன் இந்த சமய விடயத்துடன் ஆத்மீகத்தை (spirituality) கலந்து குழப்பிவிட வேண்டாம் என்பதோடு இதை ஒரு சமய பிரச்சாரமாகவும் அர்த்தப்படுத்த வேண்டாம் என்றும் பணிவாய் வேண்டுகிறேன்.

அல்லாஹ¤ அக்பர் (இறைவனே அதி உயர்ந்தவன்) என்ற அடிப்படையில் அரசியல் செய்யும் பின்லாடனுக்கும் (Bin Ladan), அரசியல் வேறு சமயம் வேறு என்று கூறும் பிளயர் (Blair) கூட்டணி, அதே கருத்து கொண்ட புஸ் (Bush) கூட்டணி என்போர் செய்த அல்லது அதே பாணியில் நிகழும் ஐரோப்பிய, அமெரிக்க அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

இன்று நம்மிடையே காணப்படும் எந்த சமயமும் இயற்கை நீதிக்கும், ஒழுக்க விதிகளுக்கும், மனித குலத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கும் எதிரான கருத்தெதையும் போதிக்கவில்லை. மாறாக அன்பையும், நீதியையும், சக வாழ்வையும், ஒழுக்கத்தையும், உலக சமாதானத்தையுமே போதிக்கின்றன. இந்த அடிப்படை தன்மைகளே ஒரு அரசாங்கத்தின் நிகழ்சி நிரலிலும் காணப்பட வேண்டும் என ஆளப்படுவோர் விரும்பின் இந்த அரசியலும், சமயமும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் அந்த அடிப்படை தன்மைகள் அடையப்பட முடியாது என்று கூறுவதின் தர்க்கம் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது.

கொலை, கொள்ளை, சூது, குடி என்று சராசரி அறிவுள்ள மனிதனும் வெறுக்கும் செயல்களுடன் மண், பெண், பொன்னாசை என்பவையும் எந்த சமயத்தாலும் ஊக்குவிக்கப்படவில்லை என்பதோடு அபரிமித இலாபம், வட்டி சுரண்டல் என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் இந்த சமயங்கள் நிராகரிக்கின்றன. அதேநேரம் சமயம் கலக்காத அரசியல் எந்தெந்த நாடுகளில் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மேற்சொன்னவை சர்வசாதாரணமாக காணப்படுவதை நாம் மறந்துவிட முடியாது. உதாரணமாக சமயமும் அரசியலும் கலக்காத தூய்மையான அரசியல் நடப்பதாக கூறும் பிரித்தானியாவில், பரந்துபட்ட ஐரோப்பாவில், அமெரிக்காவில் சுபர் கசினோ, சூதாட்ட கிராமங்கள்( Las Vegas style villages), சட்ட ரீதியான, சட்ட ரீதியற்ற காம வியாபார(Sex industry ) நிலையங்கள், 12-13 வயது குழந்தைகள் வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் காட்சிகள், ஒரு நிமிடத்துக்கு பல கொலைகள், கற்பழிப்புகள், போதை பொருள் பாவிப்பால் உடல், உள விருத்தி குறுகி சமூகத்துக்கு பாரமாக காணப்படும் இளைஞர் கூட்டம் என்று மனித நாகரீகத்துக்கு ஒவ்வாத காட்சிகள் இந் நாடுகளில் காணப்படுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஒப்பீட்டு ரீதியில் இத்தகைய காட்சிகள் சமயம் கலந்த அரசியல் நடைபெறும் நாடுகளில் காணமுடியாது என்பதையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதுள்ளது.

ஆக, கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முற்பட்ட மனிதனுக்கும் நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக சொல்லும் இன்றைய மனிதனிக்கும் அவன் செயல் தொடர்பாக அதிகம் வித்தியாசம் காணப்படவில்லை. ஆகவே இந்த நிலைமை சமயமும் அரசியலும் கலந்ததாலா அல்லது அரசியலுடன் சமயம் கலக்காததாலா என்பது புரிவதற்கு கஸ்டமான விடயமுமில்லை.

ஜீவ காருண்யம் போதிக்கும் பௌத்தம் சரியாக பின்பற்றப் பட்டிருந்திருந்தால் இலங்கை ஒரு கொலை களமாக மாறியிருக்குமா?, அன்பே சிவன் என்று பிரபாகரன் சொல்லியிருந்திருந்தால் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்டோர் எல்லாம் எம்முடன் இன்றும் இருக்கமாட்டாரா?, தற்காப்பு போரிலும் பயங்கரவாதம் தடை செய்யப்பட்டுள்ளதே தன் சமயத்தில் என்று பின்லாடன் யோசித்திருந்தால் இரட்டை கோபுரத்தில் 3000 அப்பாவிகள் உயிரிழந்திருக்க மாட்டார்களே. சமயத்துக்கும் சுரங்கப்பாதை ரயில்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று சமயத்தை பிழையாக விளங்கிய இளைஞர் சற்று யோசித்திருக்க 07/07 நடந்து இருக்காதல்லவா? கிறிஸ்தவ விழுமியங்களை பிரித்தானிய அரசு என்றும் கைவிடாது என்று அடிக்கடி கூறும் பிளயார் பெரிய வெள்ளி உடன்படிக்கை ( Good Friday Agreement ) க்கு பதிலாக பிரித்தானிய படைகளை வட அயர்லாந்தில் இருந்து வாபஸ்பெற உடன்பட்டிருக்கலாமே. ஏன் பிளயாரின் நில ஆக்கிரமிப்புக்கு கிறிஸ்தவம் வழி வகுத்ததா? அரசியலுடன் சமயம் கலக்க அனுமதிக்க முடியுமாயின் அதன் அளவு என்ன? அல்லது அப்படி ஒரு அளவுகோல் உண்டா? எனவே பிரச்சினை சமயங்களில் இல்லாதது போலவும், தான் சமயவாதி என்பவனில் அல்லது தான் சமயவாதியல்ல என்பவனில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போலவும் அல்லவா தெரிகின்றது.

சரி சமயம் இல்லாத அரசியலே சரியானது என்போரெல்லாம் என்ன நாஸ்திகவாதிகளா? இந்த ஐக்கிய ராச்சியத்தில் அரசியல்வாதிகள் பொதுவாக சொல்வது கடவுள் அரசியை காப்பாராக (God bless the Queen) என்பதுதானே. அமெரிக்கர் எதற்கெடுத்தாலும் கடவுள் அமெரிக்காவை காப்பாராக (God bless America)என்று தானே கூறுகின்றனர். இங்கெல்லாம் ஏன் கடவுளின் துணை தேவைப்படுகிறது?, இவர்களின் பதவி பிரமாணங்கள் எல்லாம் ஒரு கையில் பைபிளுடன் தானே செய்யப்படுகின்றது. இதையும் விட கடவுளின் ஆணையின் பேரிலேயே ஈராக்கின் மீது படை எடுத்ததாக புஸ் கூறினார். மேல் சொன்ன நாடுகளில் அரசியலுடன் சமயம் கலந்துள்ளதா, இல்லையா? சதாம் ஹ¤செய்ன் அரசியலுக்காக தூக்கிலே தொங்கி உயிர் பிரியும் கடைசி கணத்தில் மிக சத்தமாக கூறியது என்ன, இறைவன் அதியுயர்ந்தவன் (அல்லாஹ¤ அக்பர்) என்பதுதானே. இது அமெரிக்காவுக்கு அடிபணியமாட்டேன், மண்டியிடமாட்டேன் என்ற அரசியலா அல்லது உயிருடன் இருக்கும் போது சமயம் வெறுக்கும் அத்தனையையும் செய்துவிட்டு, உயிர் போகும் நேரத்தில் யாரும் உதவிக்கு இல்லையே என்ற சமய சாயம் பூசப்பட்ட அவலக்குரலா?

குற்றம் செய்தால் தண்டனையும், நன்னடத்தைக்கு சன்மானமும் என்பதுதான் இயற்கை நீதியின் (Natural Law) அடிப்படை. இந்த அடிப்படையில் அரபு நாடுகளில் பாரிய குற்றம் செய்தோருக்கு பகிரங்க மரண தண்டனை நிறைவேற்றப் படுகின்றன. தண்டனை என்பது குற்றம் புரிந்தவரை தண்டனைக்குட்படுத்துவது மாத்திரமல்ல, அது மற்றவரை குற்றம் செய்யாமல் தடுக்கவும் (Deterrent) வேண்டும் என்பது தண்டனை சட்டங்களின் (Penal Code)அடிப்படை. ஆனால் இந்த பகிரங்க மரணதண்டனை மனித நாகரீகத்துக்கு ஒவ்வாது என மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூப்பாடு போட அமெரிக்காவின் அனேக மாநிலங்களில் இந்த மரணதண்டனை சிறைச்சாலைகளில் தினம் தினம் நிறைவேற்றப்படுவதை இந்த நாடுகள் அனேகமாக கண்டுகொள்வதில்லை. பகிரங்க தண்டனை என்னைப் பொறுத்தவரை மற்றோரை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கும் ஒரு சாதகமான முறை. சரி அப்படி இல்லாவிட்டாலும் கூட இந்த இரண்டு முறைக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன? குற்றத்துக்கு தண்டனை என்பதுதானே.

” சமயம்/மதம் ஒரு அபின்” என்று கார்ல் மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக மனித வாழ்வின் ஒரு அம்சமான அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு சமயத்தை வெறுத்தே ஆகவேண்டும் என்று வாதிடுவது, புலிகளின் பயங்கரவாத்தை கணக்கில் எடுத்து ஒடுக்கப்பட்டோர் புரட்சி வழியை திரும்பி பார்க்கவே கூடாது என்பது போல் இல்லையா? கார்ல் மார்க்ஸ் ஏன் சமயத்தை ஓரங்கட்டினார் என்பதை எப்போதாவது கேள்விற்குற்படுத்தினோமா?
அவரின் குடும்பம் கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்டது. அவரின் குடும்பத்தில் பாதிரியார்களும் இருந்தனர்(?) என்று கூறப்படுகின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் ஜேர்மனியிலே கிறிஸ்தவம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது என்பதை நாம் ஏன் ஆய்வுக்குட்படுத்தவில்லை? கிறிஸ்தவத்திற்கப்பால் கார்ல் மார்க்ஸ் என்னென்ன சமயங்களில் பரிச்சயம் உள்ளவர் என்பதை யாராவது கூற முடியுமா? அவரின் சமயம் சம்பந்தமான பார்வை கிறிஸ்தவத்துடனான அவரின் அனுபவத்துடன் மாத்திரம் எல்லை இடப்படவில்லை என்று யாராலும் நிருபிக்க முடியுமா? அல்லது மனித சமுதாயத்தின் முழு அபிவிருத்தியும், முன்னேற்றமும் வெறுமனே இந்த அரசியல், பொருளாதார முன்னேற்றத்துடன் குறுகிக்கொள்ள வேண்டுமா? மனிதனுடன் மனம், ஆத்மா என்ற அம்சங்கள் உள்ளதையும் அரசியல், பொருளாதார அபிவிருத்தியை அடையும் போது அது மனத்தினதும், ஆத்மாவினதும் முழு அபிவிருத்தியும் அடைந்ததுக்கு சமம் என்றாகிவிடுமா? இல்லை என்றால் மனம், ஆத்மா என்பவற்றின் அபிவிருத்தி பற்றி நாம் கவலைபட வேண்டிய அவசியமே இல்லையா? இல்லை அது அவசியம் என்றால் அதை சமயத்தால் நிறைவேற்ற முடியாதா? முடியாது என்றால் அது எதனால் சாத்தியப்படும் என்று சொல்ல முடியுமா?

இந்த இரண்டு விடயங்களிலும் அங்கமாக இருக்கும் மனிதனுக்கு இந்த இரண்டுக்குமான பிரிகோடு இதுதான் என்று திட்டவட்டமாக சொல்லமுடியாத அளவுக்கு ஆற்றல் இல்லாத போது தன் நலன் சார்ந்த நிலையிலேயே அரசியலையும் சமயத்தையும் பிரித்துவைத்து குழப்பம் விளைவிக்க முனைகின்றான் மனிதன் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இந்த தன்மை விரிவடைந்து ஒரு தேசியத்தின் நலன் மற்றைய தேசியத்தை விட மேம்பட்டதாக கருதப்படுகிறது. ஒரு வர்க்கத்தின் நலன் மற்றைய வர்க்கத்தின் நலனை விட விசேடமாக பேசப்படுகின்றது. ஒரு நாட்டின் நலன் இன்னொரு நாட்டின் நலனிலும் மேலாக சொல்லப்படுகின்றது. ஆக சமயத்தை ஒரு ஆக்க சக்தியாக பார்க்க, அப்படி அதை செயற்படவைக்கத் தெரியாத மனிதன் அல்லது விரும்பாத மனிதன் பிரிந்திருக்கச் சொல்கிறான், பிரித்து வைக்கின்றான் என்பதற்காக நாம் அப்படியாகிவிட முடியாது என்பது என் நிலைப்பாடு.

இடம்பெயர் பறவைகள்: சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 பேர் கைது

புத்தளம் நவதங்குளம் பகுதியில் சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 நபர்களை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் கடும் குளிர்காலத்தையிட்டு பறவைகள் அபயம் தேடி இலங்கை போன்ற நாடுகளுக்குள் இடம்பெயர்ந்து வருவதுண்டு.

இவ்வாறு சைபீரியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள ஒருவகை வாத்துகள் (சைபீரியன் டக்) நான்கை சுட்டுக் கொன்றதாலேயே இவர்கள் நான்கு பேரும் கைதாகினர். வாத்துக்களை சுடுவதற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் 2 டபிள் பெரல் துப்பாக்கிகள், 12 போர் ரக 12 தோட்டாக்கள், டபிள் கெப் ரக வாகனமொன்று என்பவற்றை யும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அபயம் தேடி வரும் வெளிநாட்டு பறவைகளை சுடுவதோ, வதைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்பதாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்க முடியும் – அட்வகேட் ஜெனரல் சமரகோன்

sucide.jpgஇராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ஒரு சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்க முடியுமென்று பாதுகாப்பு படைகளுக்கான முன்னாள் நீதிபதி அட்வகேட் ஜெனரல் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம். ஜே. சமரகோன் தெரிவித்தார். இராணுவ நீதிமன்றம் குறித்து விளக்கமளிக்கும் விசேட சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன் போது அவர் விபரிக்கையில்,

சேவையிலுள்ள ஒரு அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற அதிகாரி இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்படுகிறது. சிவில் நீதிமன்றத்தைப் போன்றே இராணுவ நீதிமன்றிலும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.

இராணுவ சட்டம், இராணுவ ஒழுக்க விதிகள் மற்றும் இராணுவ நீதிமன்றம் என்பவற்றிற்கு அமைய இராணுவ பொலிஸாரால் கைது செய்ய முடியும். அதேபோன்று, ஒருவருக்கு எதிராக இராணுவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அல்லது சேவையில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற ஒருவர் இராணுவ சட்டத்திற்கு முரணாக நடந்துள்ளார் என்பதை இராணுவ பொலிஸாரால் இனங் காணப்பட்டால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் இராணுவ பொலிஸாருக்கு உண்டு என்றார்.

ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரை ஆறு மாத காலத்திற்குள் இவ்வாறு கைது செய்யலாம். ஆனால், தேசத் துரோகம், இராணுவத்தை ஏமாற்றுதல் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லுதல் போன்ற குற்றங்களை செய்த ஒருவரை எந்த நேரத்திலும் கைது செய்யலாம்.

இராணுவ நீதிமன்றம் மூன்று முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாகும். முப்படைகளின் தளபதியே இதனை நியமிப்பார். குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தரத்திற்கு சமமானவராகவும் தற்போது சேவையில் இருப்பவர் ஒருவரே இந்த நீதிமன்றத்திற்கு நியமிக்க முடியும். சமமான தரத்தைக் கொண்ட அதிகாரி ஒருவர் இல்லாத பட்சத்தில் அந்தத் தரத் தைவிட குறைந்த தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்க முடியும் என்றார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டதும் அவருக்கு எதிரான சாட்சியங்க ளின் தொகுப்பு தயாரிக்கப்படும். இதற்குப் பல மாதங்களும் செல்லலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.