பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு: சாட்சிகளின் தொகுப்பு ஓரிருதினங்களில் இராணுவ நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

sarath_fonseka-02.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளின் தொகுப்புக்கள் இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சாட்சிகளின் தொகுப்பு தயார்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவு பெறவுள்ளதுடன் அடுத்த வார முற்பகுதியில் இது இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை 31 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தற்பொழுது தொழில் நுட்ப சான்றுகள் தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 31 சாட்சியங்களில் சிவிலியன்கள் மற்றும் படையினரும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ நீதிமன்றில் சாட்சியங்களின் தொகுப்புக்கள் சமர்ப்பிக்க முன்னர் தொழில் நுட்ப சான்றுகள் தயார்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள தாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *