எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

he_the_president.jpgஇலங் கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சேபனையைத் தெரிவித்தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை நியமிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது விரும்பத்தகாத நடவடிக்கையென ஜனாதிபதி, ஐ. நா. செயலருக்கு எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை மூலம் பெருமளவிலான மக்கள் ஏனைய சில நாடுகளில் கொல்லப்படுவதோடு, பாரிய மனித உரிமை மீறல்களும் நடந்த வண்ணமுள்ளன. அத்தகைய நாடுகள் மீது இப்படியான நடவடிக்கைகளை ஐ. நா. எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகம் எந்தவிதமான கருத்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் விடயங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கவேண்டியுள்ளதாக ஐநாவின் தலைமைச் செயலர் இலங்கை அரசிடம் கூறியுள்ளதாக பான்கீமூனின் பேச்சாளர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.  இது பற்றி அறிவிக்கப்பட்டவுடனயே தாமதமின்றி கருத்து வெளியிட்டுள்ளது
 

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு

sarath_fonseka-02.jpgஇராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இதேபோன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்புடைய தனுன, அசோக்கா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன் சேகாவின் விசாரணைகள் நடைபெறும் போது ஊடகங்களை அனு மதிப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது?

அவ்வாறான ஒரு நடைமுறை உலகில் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. எனினும், விசாரணைகளின் முடிவுகள் குறித்து இராணுவப் பேச்சாளர் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றார். அத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோக்கா ஆகியோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்க கொலை விசாரணை: 6 இராணுவ வீரர்கள் தடுப்புக் காவலில்; வாக்கு மூலங்கள் 18ம் திகதி நீதிமன்றில்

lasantha.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக இதுவரை பதியப்பட்ட வாக்கு மூலங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

லசந்தவின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 17 பேருள் 11 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீண்டும் இராணுவ சேவைக்கு உள்வாங்கப்பட்டும் உள்ளனர். எஞ்சியுள்ள 6 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த 4ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் லசந்தவின் படுகொலை தொடர்பான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 18ஆம் திகதியும் இதே போன்று சாட்சியங்கள் சமர்ப்பிக்கப் படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளின் ஊடாக குற்றவாளி யார் என்பதை கண்டறிவதற்கு சான்றுகள் ஏதேனும் கிடைத்துள்ளனவா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,

இதுவரை கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிவதற்குரிய சரியான விசாரணைகளையே பொலிஸார் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை

cargo-ship.jpgசோமாலியா கடற்பரப்பில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 13 இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக கடத்தப்பட்ட கப்பல் கொம்பனி அறிவித்துள்ளது.

ஜப்பானிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சவூதி சென்று கொண்டிருந்த கப்பல் சோமாலியக் கடற்பரப்பில் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலின் கப்டன் உட்பட 14 சிப்பந்திகள் இருந்தனர். கப்டன் கிரேக் நாட்டைச் சேர்ந்தவர். ஏனைய 13 பேரும் இலங்கையர்கள். அவர்களின் பெயரை கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாக்கூப் சேவியர், வீனஸ் ரொபின்சன், ஹேவா பதகே ரங்கா ஜயசிங்க, விஜயமுனி எல்மோ அன்சலாம் சொய்சா, செல்வராசா ராஜவேல், பால கிருஷ்ணன் ஜயரஞ்சன், ரொபேட் ஜோசப், கனகசபாபதி துஷ்யந்தன், அருமைசேகரம் பசில்ராஜா, லக்ஷ்மிகாந்தன் கஜேந்திரன், ஆரோக்கியசாமி பிள்ளை பிரிட்டோ லோரன்ஸ், சவரிமுத்து அற்புதராஜா, ராஜகோபால் ஜெயக்குமார் ஆகியோரே கப்பலில் உள்ளவர்களாவர்.

இவர்களை மீட்டெடுப்பதற்காக கடத்தல்காரர்களுடன், கப்பல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாடு பயணமானார்.

mrs-veluppillai.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார். பனாகொடை இராணுவ முகாமில் அவரது கணவனுடன் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கணவர் வேலுப்பிள்ளை மரணமானதை அடுத்து அவர் இறுதிக்கிரியைகளுக்காக வல்வெட்டித்துறைக்க வந்திருந்தார். சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மையார் சிறிது காலம் அங்கு தங்கி யிருந்தார். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தால் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சிவாஜிலிங்கம் செய்த பயண ஒழுங்குகளை அடுத்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார்.

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன்

Psychologyஉடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன் பதலளிக்கின்றார்.

பகுதி 1

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன?
ஒருவருக்கு இரண்டு விதமாக உளவியல் பிரச்சனைகள் வரலாம். ஓன்று அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றையது அவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்.

1)அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள்:
உதாரணமாக மரணம்- நெருங்கிய உறவினரோ நண்பரோ இறப்பது, வேலை இல்லாமல் போதல் போன்ற நிகழ்வுகள்.
2) ஒருவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்:.
உதாரணமாக, ஒரு நிலபரத்தை எதிர்நோக்கும்போது, அதைக் கையாளும் முறையால் வரக்கூடிய மனநெருக்கடி, இதனால் உறவு முறைகளில் சங்கடங்கள், ஒரு விஷயத்தை தீர்மானிக்க முடியாத மனக்குழப்பநிலை போன்றவை எற்படலாம். காரணம்- முக்கியமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை. ஆகவே உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் ஒருவரது மனவலிமை மனத்திடத்தைப் பொறுத்தது.

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு அடையாளம் காணலாம்?

உளவியல் பிரச்சனைகள் என்று நீங்கள் கூறுவது ‘மனஉழைச்சல்’ அல்லது ‘மன நெருக்கடி’ என்று நினைக்கிறேன்.
மன உழைச்சலால் ஒருவர் கஸ்டப்படுகிறார் என்ற அடையாளங்களைக் கூறமுன், stress-மனநெருக்கடி: depression- மனஉழைச்சல்:
மனஉழைச்சல் என்னும்போது pressure. ஓரளவு pressure இருந்தால் ஒருவர் காரியங்களைச் செய்து முடிப்பதற்கு ஒரு motivation ஆக இருக்கும். மற்றும், கட்டாயம் கவலை தரக்கூடிய சம்பவங்களால்தான் ஒருவர் மனநெருக்கடியை அனுபவிக்கக் கூடும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக புதுவீடு மாறும்பொழுது, பிள்ளைப்பேறு நாட்கள், திருமணம், பிறந்ததின விழா ஏற்பாடு செய்யும்போதுகூட ஒருவர் stress அனுபவிக்கக்கூடும். stressன் அளவு கூடும்போது மனஉழைச்சல் (depression) வரக்கூடும். ஒருவருக்கு மன உழைச்சல் கூடினாலோ அல்லது கூடியகாலம் நீடித்தாலோ அது அவருடைய மனநிலையையோ அல்லது உடல்நிலையையோ பாதிக்கக்கூடும்

மனஉழைச்சலை அனுபவிப்பவர்களுக்கு இருக்கக்கூடிய சில அறிகுறிகள்: (symptoms)
நித்திரையின்மை, பசியின்மை அல்லது மாறாக கூடியளவு நித்திரை, அளவுக்கதிகமான பசிகூட வரலாம், விரக்தி, எதிலும் நாட்டமின்மை, மனக்குழப்பநிலை, அதிகூடிய களைப்பு, பயம், ஒரு முடிவு எடுக்க முடியாத மனநிலை, மற்றவர்கள்மீது பிழை காண்பது, அதிவிரைவில் அதிகூடிய கோபம், தன்னம்பிக்கை குறைதல், தனிமையை நாடுதல், தோற்றுவிட்டதுபோல் உணர்வு.

உடல்நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
தொடர்ந்து தலை இடிப்பது (migraine), தலைநோ, தலை எரிவு, நெஞ்சு படபடப்பு, இருதயநோய்கள், வயிற்றில் அல்சர் உண்டாவது, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கோளாறுகள் (irritable bowel syndrome) வாய் காய்ந்து போதல், muscle tension போன்றன.

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளுக்கு எவ்வாறான உதவிகள் பெறக்கூடியதாகவுள்ளது?

உளவியல் பிரச்சனை அல்லது மன உழைச்சல் இருக்கிறது என்று அறிந்தால் முதலில் தங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஆலோசனை பெறவேண்டும். ஒருவர் தனக்கு உளவியல் பிரச்சனை இருக்கிறது என்று அறிந்து அதற்கான உதவியை நாடுவது அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான ‘முதல்படி’ என்று கூறலாம்.

counselling சம்பாஷனைகள் மிகவும் உதவி செய்யும். counselling சம்பாஷனையின்போது மனம்திறந்து கதைத்துக் கொண்டே வருவதால் ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள் என்பன ஆழமாக அலசப்பட்ட பிரச்சனைகளைப்பற்றி ஒரு சீரான முறையில் தெளிவாக யோசிக்கக் கூடிய மனநிலை உருவாகும். இது அவருடைய வாழ்க்கையை திருப்திகரமான முறையில் கொண்டு செல்வதற்கு உதவும். Helplines மூலமும், அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற சேவைகள் மூலமும், நிபுணர்கள் மூலமும் உதவிகளைப் பெறலாம்.

லண்டன் குரல்: உள்ளத்தை எவ்வாறு ஆரோக்கியமானதாக வைத்திருக்க முடியும்?

நிறையுணவு ( balanced diet) ஒழுங்கான தேகாப்பியாசம், சரியான முறையில் மூச்சுப்பயிற்சி செய்தல், ஓடுதல், நடத்தல், நீந்துதல், relaxation, யோகாப்(பயிற்சி)பியாசம், meditation போன்றவை உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மனதிற்குள் எல்லாப் பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதால் மனநிலை, உடல்நிலை என்பன பாதிக்கப் படலாம். ஆகவே உதவியை நாடுவது மிகவும் அவசியம்.

பகுதி 2

லண்டன் குரல்: புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உளவியல் பிரச்சினைகள் உள்ளனவா? அவர்கள் மத்தியில் உள்ள குறிப்பான உளவியல் பிரச்சினைகள் என்ன?

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இருக்கக்கூடிய உளவியல் பிரச்சினைகள்:
1) தாயகத்தில் ஏற்பட்ட அனுபவங்களால் உண்டான தீர்க்கப்படாத உணர்வுகளின் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
2) கலாச்சார வேறுபாட்டால் பெற்றோருக்கும் ஜரோப்பிய நாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்.
3)தனிமை- கணவன் கூடிய நேரம் வேலை செய்யும் இடத்தில் செலவிட்டால் வீட்டுவேலை பிள்ளைகளின் அலுவல்கள் நாளிலும் பொழுதிலும் செய்யும் மனைவிக்கு வரக்கூடிய நெருக்கடி.
4) காசுப் பிரச்சனையால் வரக்கூடிய தாக்கங்கள்.
5) Imigratiom status பிரச்சனைகள்
6) எங்கள் சமூகத்தினரால் ஏற்படக்கூடிய அழுத்தம். (pressure)

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் என்பது குறிப்பிட்ட வயதினர் மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினையா? அல்லது அனைத்து வயதினர்க்கும் ஏற்படக் கூடிய பிரச்சினையா?

உளவியல் பிரச்சனைகள் சிறுவர் முதல் பெரியோர்வரை அனுபவிக்கக்கூடும்.

லண்டன் குரல்: உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலை, வன்முறை, குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இவற்றுக்கும் உளவியலுக்கும் தொடர்புகள் உள்ளதா?

முக்கியமாக உளவியல் பிரச்சனைகளால் தான் தமிழ் மக்கள் மத்தியில் கூடுதலான தற்கொலை, வன்முறை போன்றவை நடக்கின்றன

லண்டன் குரல்: தாயகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த சமூகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகளில் இருந்து வேறுபபட்டதா? புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இது நாட்டுக்கு நாடு வேறுபாடு உள்ளதா?

தாயகத்தில் இருக்கும் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் சில வேறுபாடுகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தாயகத்தில் சொந்தக்காரர், பக்கத்து வீட்டுச் சினேகிதர் என்று ஒவ்வொரு நாளும் கண்டு கதைத்து கவலைகளையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. ஜரோப்பிய நாட்டு வாழ்க்கை முறையில் சினேகிதரையோ, உறவினரையோ பார்ப்பதென்றால் ரெலிபோன் பண்ணி அவர்களின் சௌகரியத்தைப் பொறுத்துத்தான் சந்திக்கக் கூடியதாக இருக்கிறது.

மற்றும் அங்குள்ள பெற்றோரின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் பிள்ளைகளின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் மாறுபட வாய்ப்பில்லை ஏனெனில் கலாச்சார முரண்பாடு இல்லாததே காரணம்.

லண்டன் குரல்: தமிழ் மக்கள் ஒரு சமூகமாக அவர்கள் எதிர்நோக்குகின்ற உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகள் வெளியில் கதைத்து disscuss பண்ணி இவை வராமல் எப்படித் தவிர்க்கலாம் என்று அதற்கான செயல்களைச் செய்ய வேண்டும். பிரச்சனைக்கான விடயங்களைக் கண்டறிந்து அந்தந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு சொற்பொழிவு மூலமும் வேறு வழிகளிலும் மக்களிற்கு விழிப்புணர்ச்சியைக் கொண்டுவந்து விபரீதங்களைக் குறைப்பதற்காக ஆவண செய்ய வேண்டும்.

லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகளால் ஏற்படக்கூடிய பயன்கள் என்ன?

கவலைதரும் சம்பவங்கள் அதனால் ஏற்படக்கூடிய எண்ணங்கள் உணர்வுகளை Counselling சம்பாஷணைகள் ஒத்துக் கொள்ளக்கூடிய மனநிலையைக் கொடுக்கிறது. இதனால் ஒருவருடைய தன்னம்பிக்கை கூடுகிறது. மனதில் சாந்தம் ஏற்படுகிறது. தன்னால் முடியும் இன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்னும் மனஎழுச்சி ஏற்படும். மனநிலையிலும் உடல் நிலையிலும் உள்ள பாதிப்புக்கள் குறையும் அல்லது நீங்கும்.

கவலையால் வரக்கூடிய விளைவுகளைக் குறைப்பதற்கு Counselling சம்பாஷணைகள் உதவுகின்றன.

ஒருவரது வாழ்க்கையை ஒரு சீரான முறையில் அணுகக்கூடிய மன வலிமையைக் கொடுக்கிறது. Counselling அனுபவமும் அதனால் ஏற்படக்கூடிய விழிப்புணர்ச்சியும் ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சீரானமுறையில் அணுகுவதற்கான மனவலிமையைக் கொடுத்து பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மனதைரியத்தைக் கொடுக்கிறது.

லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகள் எவ்வாறு நடைபெறும்?

Counsellorம் உதவியை நாடுபவரும் முதலில் சந்திக்கும்போது Counsellor எத்தனை தடவைகள் சந்திக்க வேண்டும் ஒவ்வொரு சந்திப்பும் எவ்வளவு நேரம் நீடிக்கும் கநநள என்ன என்பன போன்ற விஷயங்களை விளங்கப்படுத்தி ஒரு conttraact எழுதி ஒத்துக் கொள்வார்கள்.

சந்திப்புகளின்போது Counsellor ஒருபோதும் உதவியை நாடுபவரை எடைபோட மாட்டார். அறிவுரைகூற மாட்டார். குறைகூற மாட்டார். எல்லாவற்றையும் கவனமாகக்கேட்டு தகுந்தமாதிரிக் கதைத்துக்கொண்டு வருவார். தகுந்த கேள்விகள் கேட்பதன் மூலமும் ஆதரவான முறையில் கதைப்பதன்மூலமும் உதவி செய்வார்.

சில சமயங்களில் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப மனம்விட்டுக் கதைப்பதால் ஒருவருடைய உணர்வுகள் எண்ணங்கள் அனுபவங்கள் என்பன மிகவும் ஆழமான முறையில் அலசப்பட்டு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரியத் தொடங்கும். இது ஒருவருக்குத் தேவையான எதிர்கால இலக்குகளை நிர்மாணிப்பதற்கு உதவுகிறது.

உங்கள் வாக்கு சிங்களவருக்கே

sinhalavoting.jpgகட்சி நிறம் எதுவானாலும் உங்கள் வாக்கு சிங்களவருக்கே என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கண்டியில் தேசிய மகளிர் தினவிழா

இலங்கை சமுர்த்தி அதிகார சபை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ந் திகதி ஏற்பாடு செய்துள்ள தேசிய மகளிர் தின விழா கண்டி நகரில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

தேசிய மகளிர் தின விழாவில் நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து இரு பெண்கள் வீதம் கலந்து கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்திய இசை மேதை ரவிசங்கர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேச்சு

ravi-pra.jpgஇலங் கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள உலகப் பிரசித்திபெற்ற இந்திய இசை மேதை ரவி சங்கர் சர்மா ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் நடந்தது.

ரவி சங்கர் சர்மாவின் இலங்கை விஜயம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவரை வாழ்த்தி ஞாபகச் சின்னமொன்றையும் பரிசளித்தார். இந்நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றதுடன் கலாசார மரபுரி மைகள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் பிறந்த ரவிசங்கர் சர்மா ஆசியாவில் மட்டுமன்றி முழு உலகிலுமுள்ள இசை ரசிகர்களின் அபிமானத்தையும் கெளரவத்தையும் பெற்றுக்கொண்டவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். தமது இசைப்பணிக்காக “பிலிம் பெயார்” விருது உட்பட பல்வேறு விருதுகளைச் சுவீகரித்துக் கொண் டவர்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ள இவரது ‘கீத் மாதுரி 2010’ இசை நிகழ்ச்சி நாளை 7ம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்ந்தவர்களுக்கான வட்டி நிவாரனம்

வட்டி வீதம் குறைக்கப்பட்டதனால் அங்கீகாpக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் சேமிப்பில் பணம் வைத்துள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிவாரனமாக போனஸ் வட்டி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற ரீதியில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி குறிப்பிட்ட சேமிப்பாளா;களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 8 மதல் 10 வீதமான வட்டி வீதத்தக்கு மேலதிகமாக 20 வீத வட்டி போனஸாக வழங்கப்படவூள்ளது. அதிகூடிய தொகையாக நபர் ஒருவருக்கு மாதத்துக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வருடத்துக்கு 120000 ரூபா வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கு அரசாங்கம் 120 கோடி ரூபாவை ஒதுக்கவுள்ளது.