10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு

sarath_fonseka-02.jpgஇராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இதேபோன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்புடைய தனுன, அசோக்கா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன் சேகாவின் விசாரணைகள் நடைபெறும் போது ஊடகங்களை அனு மதிப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது?

அவ்வாறான ஒரு நடைமுறை உலகில் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. எனினும், விசாரணைகளின் முடிவுகள் குறித்து இராணுவப் பேச்சாளர் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றார். அத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோக்கா ஆகியோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *