எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மலேசிய இந்தியர்களின் எழுச்சியும் ஹின்ட்ராப் அமைப்பின் தோற்றமும் : வேதமூர்த்தி பொன்னுசாமி

Wethamoorthy_HINDRAFவேதமூர்த்தி பொன்னுசாமி Hindu Rights Action Force – HINDRAF முன்னணி உறுப்பினர். 2007 நவம்பர் 25ல் மலேசியாவில் இடம்பெற்ற மலேசிய இந்தியர்களின் மாபெரும் எழுச்சிக்குப் பின் மலேசியாவை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் தங்கள் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டியவர். டெல்லி, சென்னை, லண்டன், வோசிங்டன், நியூயோர்க், புரூசல்ஸ், ஜெனிவா என உலக நாடுகளுக்குச் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார். அவர் லண்டனில் தங்கி இருந்த போது 2009 மே 13ல் தேசம்நெற் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடி இருந்தேன். அப்பொது வன்னி யுத்தம் மிக உச்சத்தில் இருந்த சூழலில் இந்த நேர்காணலை உடனடியாக வெளியிடுவது பொருத்தமற்றதாக இருந்தது. அதனால் தற்போது இவ்வுரையாடலின் ஒரு பகுதியைப் பிரசுரிக்கின்றோம். இப்பகுதியில்  HINDRAF அமைப்பின் தோற்றம் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை வேதமூர்த்தி பொன்னுசாமி பகிர்ந்துகொள்கின்றார். அவருடைய நேர்காணல் அடுத்த இதழில் வெளிவரும்.

HINDRAF- Hindu Rights Action Force இது ஒரு சிறு அமைப்பு. ஆரம்பகாலங்களில் ஒரு 50 பேர் உள்ள அமைப்பு.

ஒரு மதமாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதாவது இந்து ஒருவர் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இறந்த பிறகு இவர் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து விட்டார் என்று கூறி அவருடைய உடலை முஸ்லீம் மதத்தினருடைய இடத்திற்கு எடுத்துப் போய் விட்டார்கள். இந்த விடயம் கோட்டுக்கு போனபோது கோடு சொல்லியது இது முஸ்லீம் மதம் சம்பந்தப்பட்டது இதை நீங்கள் செரியா கோட்டுக்கு எடுத்துப் போக வேண்டும் என்று. ஒரு இந்து எப்படி இஸ்லாமிய முறைப்படியான ‘செரியா’ கோட்டுக்கு நீதி விசாரணைக்கு போக முடியும் என்ற யோசனை இல்லாமலே இப்படி தீர்ப்பளிக்கப்படுகிறது.

அவர் மதம் மாறினாரா இல்லையா என்பது முதலில் civil courtல் தீர்மானம் கொள்ளட்டும். அதில் அவர் முஸ்லீமை திருமணம் செய்திருந்தால் அதற்குப் பிறகு ‘செரியா’ கோட்டுக்குப் போகட்டும். ஆனால் civil court judge எடுத்தவுடனேயே இது முஸ்லிம் சம்பந்தப்பட்டது. ‘நாங்கள் தலையிட முடியாது. அங்கே போங்கோ’ என்கிறார். இது Judiceryயோட advocations of power என்பது அவங்கள் தங்கள் கடமையை தவறிவிட்டார்கள் (civil court). இவ்வாறான பல சம்பவங்கள் நடந்து நீதி மறுக்கப்பட்டதானாலேயே HINDRAF அமைக்கப்பட்டது. இந்த கோர்ட் முடிவு எல்லா முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கும். ஏறத்தாழ 45 வீத மக்களைப் பாதிக்கும். சீனர்கள் பௌத்தர்கள் கௌசிஸ் கிறிஸ்தவர்கள் எல்லோரையும் பாதிக்கும்.

இதுற்றி பேச இவர்கள் எல்லோரையும் அழைத்த போது இவர்கள் வரமாட்டேன் என்றார்கள். காரணம் மதம் பற்றிப் பேசினால் National Security Actஜ பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை தருபவர்கள் என்ற மிரட்டலுக்கு உள்ளாக வேண்டிவரும். இப்படி அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாங்க.

இது மதம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி வசப்படக்கூடிய விடயம் என மற்றவங்க வரவில்லை. எனவே நாம் HINDRAF என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். உருவாக்கும்போது 50 இந்து இந்தியா சம்பந்தப்பட்ட இயக்கங்கள் வந்தாங்க. திராவிடக் கழகங்களும் வந்தாங்க. வந்த இரண்டு வாரத்தில எல்லாரும் போய்விட்டாங்க.  இப்ப நாங்க தனியா இருக்கிறோம்.

Temple_Destruction_in_Malaysiaஎன்னுடைய மூத்த அண்ணர் உதயமூர்த்தி பொலிஸ் அராஜகத்திற்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, தமிழர்கள் பொலிஸ் ரிமாண்டில் சாவது, அடித்துக் கொல்லப்படுவது போன்ற வழக்குகளை அவர் எடுத்துக் கொண்டிருந்தார். அவர்  எமக்கு உதவ முன்வந்தார். ஆகவே அவரை எமது HINDRAFக்கு சட்ட ஆலோசகராக்கினோம். 2005 டிசெம்பர் 28ம் இவ்வமைப்பை ஆரம்பித்தோம். 2006 ஜனவரி 16ம் போராடப் போனோம். அத்துடன் எல்லாரும் எம்மைவிட்டுப் போறாங்கள். பின்னர் மார்ச் மாதம் 100 வருடத்திற்கு மேற்ப்பட்ட ஒரு ஆலயத்தை உடைப்பதாக தகவல் வந்தது. வழக்கமாக கோயிலை உடைத்தால் எல்லோருமே பேசாமல் இருப்பாங்க. ஆனால் நாங்க போய் அவர்களிடம் பேசி வழக்கு எடுப்போம் என்று சொல்லி பொலிசில் புகார் செய்து, சர்வதேச நிருபர்களை கூப்பிட்டு பிரச்சினையாக்கினோம். இது ஒரு சர்வதேச விடயமாகிவிட்டது.

இப்ப இந்த விடயம் பெரிதாகிவிட்டது. இப்போ இது வழக்குத் தொடரப்பட உள்ள போது எல்லோரும் இந்த அமைப்பு யார் என்ன என்று பார்க்கிறாங்க. இந்த விடயம் சர்வதேச ரீதியாக வெளிவந்ததும் உள்ளுர் செய்தி ஸ்தாபனங்களும் வெளியிட வேண்டியதாயிற்று. (இல்லாவிட்டால் உள்ளுரில் செய்தி போட மாட்டாங்க.)

உடனே மக்களிடம் இவ்வளவு நாளும் இந்த அநியாயங்கள் நடக்குது யாரும் கேட்கவில்லை. இப்ப இதை முன்னின்று செய்பவர்கள் யார் என்ற விடயம் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லோரும் HINDRAFஜ பார்க்கிறாங்க. அதுக்குப் பிறகு ஒவ்வொரு பிரச்சினையாக எம்மிடம் வருகிறது. எல்லா இடங்களிலுமிருந்து எங்கெங்கு கோயிலை இடிக்கிறாங்க என்ற செய்தியுடன் எம்மை தொடர்பு கொள்கிறாங்கள்.

எங்களை கூப்பிடுவாங்க. அங்க போனால் புல்டோசர் நிக்கும். எந்தவொரு வழக்கறிஞரும் உங்களை கோவிலை இடித்தால் கோட்டில்தான் சந்திப்பாங்க. கோயிலை இடிக்கிற இடத்திலல்ல. ஆனால் ஏழை மக்களின் கோயில் தொழிலாளர்களுடைய கோயில் அவர்களுக்கென்று குரல் கிடையாது. தமது உரிமையை தட்டிக் கேட்கத் தெரியாதவர்கள். அவங்கள் ஏழையானதால் ஆதரவு இல்லாததால் அரசு எதுவும் செய்யும். 150, 200 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் colonial timeல் காடுகளை வெட்டி plantation செய்தாங்கள். அந்தநேரம் கோயிலை கட்டினாங்கள். இந்த plantion landஜ உருவாக்கிய தொழிலாளர்களிடமிருந்தும் அந்த நிலங்களை அரசு திரும்பவும் பெறுகிறது. அந்த நேரம் இந்தக் கோயில் சட்டவிரோதமானது என்று கூறி அரசு கோயில்களை இடிக்கிறது. இப்படித்தான் பிரச்சினைகள் எழுகின்றது.

அந்த நிலத்தை மீள எடுக்கும் போது அரசு அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்து வேறு இடம் கொடுத்து வசிப்பதற்கு வீடு கொடுக்க வேண்டிய அரசாங்கம், எதுவுமே கொடுக்காமல் துரத்துகிறது. (நிலத்தின் சொந்தக்காரர்கள்) கோயில்களையும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களையும் அடித்து உடைப்பார்கள்.

Temple_Destruction_In_Malaysiaஇப்படியாக சில வேலைகளை நாம் செய்யச் செய்ய எம்மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகிக் கொண்டு வந்தது. காரணம் நாங்கள் பேசுவதில்லை. புல்டோசரின் முன்னால் நாங்கள் தான் நிற்போம். அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்காக நாம் போராடாமல் என்ன செய்ய முடியும். இப்படி நாங்கள் lawyers கோயில் உடைப்பில் கைது செய்யப்பட செய்திகள் பெரிதாக வெளிவரும். இப்படிச் செய்திகள் வெளிவர மக்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு வந்தது.

இப்படியாக கோயில் பிரச்சினைகளிலிருந்து தொழிலதிபர்கள் பிரச்சினை, தங்களுடைய தொழிலகங்களை இப்படி உடைக்கிறாங்கள், என்று பின்னர் வீட்டு உரிமையாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்புப் பிரச்சினை, மாணவர்கள் தமக்கு பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினை இப்படி பலவிடயங்களை எடுத்துப் போராட்டமாக செய்ய இது கிட்டத்தட்ட இரு வருடங்களில் இந்த HINDRAF பெரிய விடயமாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டது.

பின்பு 50 வருட மலேசிய சுதந்திரத்திற்கு முன்பே 18 கோரிக்கைகளை முன்வைத்து 50 வருடங்களாக எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறியள் எண்டு கேட்க ஆரம்பித்தோம். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் போது பெரும் திரளாக 5000 பேர் மட்டில் வந்தாங்க. முன்பெல்லாம் இப்படி போராட்டங்கள் செய்யும்போது 20,  30,  50  பேர்தான் வருவாங்கள். இந்த 18 கோரிக்கைகளை முன்வைத்த போது 5000 பேர் வந்தது ஒருபெரிய விடயமாகிவிட்டது. 18 கோரிக்கைகளையும் அரசிடம் பிரதம மந்திரியிடம் கொடுத்தோம். அரசும் கண்ணைத் திறந்து விட்டார்கள். அதிலிருந்து எங்களை கண்காணிக்க தொடங்கி விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து 31 ஆகஸ்ட் 7007 மலேசிய 50வது சுதந்திர தினத்திற்கு முதல்நாள் 30ம் திகதி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்துவிட்டு அமெரிக்கா போனேன். அங்கு. AFP செய்திஸ்தாபனம் இதை பெரிய செய்தியாக்கியது. மலேசியாவில் மக்கள் ஒரு பெரிய விடயம் நடந்ததாகப் பார்த்தார்கள்.  இந்த விடயங்கள் எல்லாத்தையும் தமிழில் விளக்கமாக ஒரு பிரசுரம் அடித்து மக்களுக்கு கொடுத்தோம். காரணம் பத்திரிகைகள் செய்தியை மேலோட்டமாகவே போடுவார்கள். மக்களுக்கு விளங்காது. இப்படிக் கொடுத்தால் மட்டுமே மக்கள் விபரமாக படித்துக் கொள்வார்கள்.

செப்ரெம்பர் மாதம் தொடக்கம் ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக கூட்டங்கள் போட்டு விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினோம். முதல் கூட்டத்திற்கே 3000 பேர் வந்தார்கள். இப்படியே 5000, 6000 12000 மக்கள் கூட்டத்திற்கு வந்தார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்களும் உரிமைக்காக போராடுவோம் என்ற உணர்வு வந்தது.

பின்பு 25 நவம்பர் 2007 ‘நாங்கள் பிரிட்டிஷ் மகாராணியிடம் மனு கொடுப்போம் : இதுபற்றி பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என அழைத்த போது  நாம் எதிர்பார்த்தது 10 000 பேரை. ஆனால் வந்தது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள். 50 வருடமாக தூங்கியிருந்த மக்கள் விழித்துக் கொண்டார்கள். அரசாங்கத்திற்கு அவர்களின் விஷேட பிரிவு விளக்கமாக ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளதாக . எல்லாம் சொல்லிவிட்டது.   2007 நவம்பர் 22ம் திகதி கோலாலம்பூர் நகரத்தை பொலிஸ் காவல் போட்டு தமிழர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர். 25ம் திகதிக் கூட்டத்திற்கு தமிழர்கள் வரவிடாமல் தடுத்தார்கள். அதையும் மீறி பலர் 24ம் திகதி கோவிலுக்குப் போய் பூஜையில் கலந்துவிட்டு அங்கிருந்து அடுத்தநாள் கூட்டத்திற்கு போகவிருந்தார்கள். இந்த நேரம் கோயிலுக்குள் புகுந்து பொலிஸ் தண்ணியடித்து மக்களுக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுத்து 1000 க்கு மேற்பட்டோரை கைது செய்தார்கள்.

November 23 2007ல் என்னையும் மற்றவர்களையும் பிடித்தாங்க. மக்கள் பயந்து விட்டாங்கள். எல்லோரையும் கைது செய்து விட்டாங்கள். 345 பேர் வரைக்கும் கோட்டுக்கு கொண்டுபோய் குற்றம் சாட்டி மாலை 6 மணிவரை இழுத்தடித்து இவர்களுக்கு Bail கொடுக்க முடியாமல் உள்ளே வைத்திருந்தால் போராட்டம் தொடர முடியாமல் போகும் என நம்பினார்கள். காரணம் HINDRAFல் 4 அல்லது 5 பேர்தானே உள்ளோம். நான் எனது அண்ணர் மற்ற  இரண்டு சட்டத்தரணிகள் இந்த நாலு பேரையும் உள்ளே போட்டால்  எல்லாம் அடங்கிப் போய்விடும் என்று நம்பினாங்க. ஆனால் இந்த 4 பேருக்கமாக இந்த நாடே எழும்பி வந்தது.

யார் யாரோ எல்லாம் அடுத்த நாள் கோட்டுக்கு வந்தாங்க. பெரிய சனக் கூட்டம் கோட்டுக்கு வெளியே நின்று விடுதலை செய்! தலைவர்களை விடுதலை செய்! என்று சத்தம் போட்டாங்கள்.  நீதிபதியும் மிகக் குறைந்த பணத்துடன் bail out பண்ண முன்வந்தார். மக்கள் அந்த இடத்திலேயே காசுகள் எல்லாம் சேர்த்து bail out  பண்ண ரெடி. ஆனால் நான் என்ன செய்தேன் என்றால் கொடுத்த bail outஜ நிராகரித்துதேன். bail outஜ நிராகரித்தது மலேசிய வரலாற்றில் முதன் முறையாக நடைபெறுகிறது.

இப்படி ஏன் செய்யப்பட்டது என்றால்
1 நாங்கள் உங்கள் சிறைகளைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. அது ஒரு பிரச்சினையில்லை.
2. இது ஒரு சமாதானப் போராட்டம். இல்லாவிட்டால் சுற்றியுள்ள மோசமான கிரிமினல்களை அனுப்பி கலவரத்தை உண்டு பண்ணியிடுவாங்கள்.
3  தலைவர் இல்லாமலே போராட்டம் நடக்கும்.
மூன்று நாட்களாகளுக்கு முன்பு நான் lockupல் உள்ளேன். மக்கள் தானாகவே நடக்கிறார்கள். மஞ்சள் துணி கொண்டு கொடி கட்டுறார்கள். காந்தி படத்துடன் வந்தாங்க. November 25 2007ல் போராட்டம் நடந்தது. ஆனால் அரசாங்கம் மட்டும் கலவரத்தை. பிரச்சினைகளை உண்டு பண்ணியது.

அமைதியாக இருந்த மக்களை போலீசாரே அடித்தனர் மக்கள் தலைவர் இல்லாமலே தானாகவே எல்லாவற்றையும் செய்தார்கள். இது largest hindu upraise out side to the India. அதற்கு அடுத்த நாள் எங்களை விடுவித்தனர். அதன் பிற்பாடே நான் மலேசியாவில் இருந்து வெளியேறினேன்.

Budtha_Destruction_In_malaysiaஇந்துக் கோயில்களுக்கு நடந்தது மாதிரி கிறீஸ்தவ தேவாலயங்களுக்கும் புத்த விகாரைகளுக்கும் பிரச்சினைகள் உண்டா? எப்படி என்றால் கிறீஸ்தவ மதத்தினர்க்கு ஏற்கனவே காலணி ஆதிகாலத்தில் நகரத்தில் எல்லாம் கட்டப்பட்டதால் பிரச்சினையில்லை. ஆனால் மற்றும் Evangalicn Church போன்ற நிறைய பணத்துடன் உள்ள இவர்கள் ஒரு துண்டு நிலம் வாங்குவது என்றால் பிரச்சினை. நிலம் வாங்கவே முடியாது. அரசு அனுமதிக்காது. கிறீஸ்தவ மதத்தை எதிர்காலத்தில் பிரச்சினையான மதமாக பார்க்கிறார்கள்.

பல பிரச்சினைகளின் பின் எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ சேர்ச்சிற்கு 25 வருடம் கழித்து சேர்ச் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கடைகளுக்கு மேலே இருந்த இடங்களிலேயே தமது சேர்ச்சை நடத்தி வந்தார்கள். புத்த மதத்தவர்களுக்கும் பாரிய பிரச்சினையில்லை. காரணம் ஆரம்ப காலத்தில் குடியேறிய சீனர்கள் தமது தலங்களை town இலேயே கட்டிவிட்டார்கள். அதனால் பிரச்சினையில்லை.

இந்துக்களுக்கே பெரிய பிரச்சினை. காரணம் இந்திய வம்சாவழியினரான நம்மவர்கள் காட்டை அழித்து வயல் ஆக்கினர். கோயில் கட்டினர். எல்லாமே கிராமப் புறங்களாகவே இருக்கும். இப்ப அரசாங்கம் இந்த நிலங்களை சுவீகாரம் செய்யும்போது இந்துக் கோயில்களை சட்டவிரோதம் என்று இடித்து அழிக்கிறார்கள். இதற்கு நாம் என்ன சொல்கிறோம் என்றால் நாம் developmentக்கு எதிரானவர்கள் அல்ல. நீங்கள் நிலச் சுவீகரிப்பு செய்வது பிரச்சினையல்ல. ஆனால் இதற்கு மாற்றீடான நிலத்தை எமது சமூகத்திற்கு கொடுங்கள் எனக் கேட்கிறோம். மக்கள் கிராமம் எங்கே மாற்றப்பட்டதோ அங்கேதான் இந்தக் கோயிலும் மாற்றப்பட வேண்டும் என்பது. இதுதான் இங்குள்ள பிரச்சினை அதை அரசு செய்வதில்லை.

மலேசிய Heritage சட்டத்தின்படி எதுசரி 100 வருடங்கள் இருந்திருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டியவைகள். ஆனால் 150 வருடங்களாக உள்ள கோயில்களை உடைக்கிறார்கள். காரணம் மலேசியாவில் ஒரு மசூதி தான் 100 வருடமாக உள்ளன. அவர்களிடம் மிக பழமையான மசூதிகள் இல்லை. எமக்கு ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் 150 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை. முருகன், அம்மன் கோயில்கள் பிரதானமான கோயில்கள்  மற்றும் முனீஸ்வரர் காளியம்மன் சங்கிலி கறுப்பன் குலதெய்வ கோயில்களுமுண்டு. இவையெல்லாம் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் கட்டப்பட்டது.

நாம் என்ன சொல்கிறோம் என்றால் 100 ஏக்கர் காணிகளில் 20 கோயில்கள் இருக்கும் புதுநிலம் கொடுக்கப்படும்போது கோயிலுக்கு பெரிய நிலம் தரப்பட்டால் இந்த 20 கோயில்களையும் பெரிய 4 கோயில்களாக்கலாம். நாம் இந்த 20 கோயில்களும் வேணும் என்று கேட்டதே கிடையாது. அரசை மாற்றீடு தீர்வு வைக்கும்படி கேட்டுள்ளோம். மனு கொடுத்துள்ளோம். கெஞ்சிக் கேட்டுள்ளோம். எல்லா வழிமுறைகளிலும் கேட்டுள்ளோம். பிரதமரிடம் நீதியாசர்களிடம் கேட்டுள்ளோம். Attorny of General எம்மை ஒரு meetingகுக் கூப்பிட்டார்கள். நிறையவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாலேயே கூப்பிட்டார்கள். எல்லாம் நல்லாவே பேசுவார்கள். எம்மை அனுப்பிவிட்டு அடுத்த நாளே கோயிலை உடைக்க ஆட்களை அனுப்புவார்கள்.

இவர்கள் தங்களுக்கு உள்ள Agendதaபடி வேலை செய்கிறாங்கள். ஆரம்பத்தில் நாங்கள் நினைத்தோம் இதை விளங்காமலேயே செய்கிறாங்கள் என்று. இவர்களுக்கு ஒரு திட்டவட்டமான திட்டம் ஒன்று உண்டு. அதாவது இவர்களுடைய கோயில்களை பழமையான கலாச்சாரத்தை உரிமையை முஸ்லிம்களுக்கு இல்லாத நீண்ட பாரம்பரியத்தை உள்ள இந்து மக்களின் பாரம்பரியத்தை அவர்களின்  உரிமைகளை அழிப்பதே நோக்கம். இது திட்டவட்டமாக எமக்குத் தெரிகின்றது.

100 கிலோ வெடிமருந்து மீட்பு

வன்னிப் பிரதேசத்திலிருந்து நூறு கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

80 கிலோ எடையுள்ள ஆர். டி. எக்ஸ் ரக வெடிமருந்தும், 20 கிலோ எடையுள்ள சி – 4 ரக வெடிமருந் துகளையும் மற்றும் உபகரணங்க ளையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி துரிதம் – 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம்

house.jpgமீள் குடியேற்றம் செய்யப்பட்ட பரப்பாங்கண்டல் பிரதேசத்தில் துரிதகதி யில் புதிய வீடுகளை நிர்மாணிப்ப தற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரி வித்தார்.

பரப்பாங்கண்டல் பகுதியில் சுமார் 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பரப்பாங்கண்டல் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் கணிசமானோருக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுத் தொகை வழங்கப் பட்டிருக்கின்றது.

ஏனையோருக்கும் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

இவை தவிரவும் அப்பகுதிகளில் மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் தேவைக ளையும் மேம்படுத்தும் பொருட்டு அனுமதிபெற்ற சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தற்காலிக வீடுகள், நிரந்தர வீடுகள் உள்ளடங்கலாக பல தேவைகளை யும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க 33 வாக்குச் சாவடிகள்

இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கென வவுனியா மெனிக்பாம் வலயம் – 2 மற்றும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

dis.bmpதேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆளடையாளத்துடன் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கென மெனிக்பாம் வலயம் இரண்டில் 17 வாக்குச் சாவடிகளும், இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத நிவாரணக் கிராமங்களில் அல்லாதவர்களுக்கென வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 16 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்க ப்பட்டுள்ள எட்டு ஆளடையாள அட்டை களும் இல்லாதவர்கள் உடனடியாக வவு னியா உதவித் தேர்தல் திணைக்களத் துடன் தொடர்புகொண்டு ஆளடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதற்காக இலவச பஸ் சேவையை பெற்றுக்கொள்ள காமினி வித்தியாலயத்துக்கு செல்லவேண்டும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உள்ளடங்கிய வன்னி மாவட்டத்தில் 209 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தாம் வதியும் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பிக்காத, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் உடனடியாக மாவட்ட செயலகம், மற்றும் நிவாரணக் கிராமங்கள் அமை க்கப்பட்டுள்ள விசேட கரும பீடத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

13 நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவன் நேற்றுச் சடலமாக மீட்பு

boy.jpgசாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று  நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபிலநாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் புதைகுழியில்  இருந்து மீட்கப்பட்டது.

மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
குடாநாட்டில் சற்று அமைதி நிலை தோன்றிவரும் இவ்வேளையில், மேற்படி  சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர் அருள் விநாயகர் மோட்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.திருச்செல்வத்தின் மகனான கபிலநாத் என்பவராவார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஜி.சீ.ஈ (சாதாரண) தர வகுப்பு மாணவன். கடந்த டிசெம்பரில் நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.

பொதுமக்கள் கைவிட்டு வந்த வாகன பட்டியல்…

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் கைவிட்டுவந்த வாகனங்கள், பற்றிய விபரங்களடங்கிய பட்டியல் வவுனியா மாவட்ட செயலகம், மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

தமது வாகனங்கள், உடைமைகள் குறித்து உரிமை கோருபவர்கள். தகுந்த ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும் வருமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று மேலும் 500 மோட்டார்சைக்கிள்கள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டன. இதுவரை சுமார் 6000க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கென 16 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

நண்பனை படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு மரணம்!

Ugarajan_Swaminathanதன்னுடைய பிளற்றில் வாழ்ந்த நண்பன் உகாராஜன் சுவாமிநாதனை (34) கோடாலியால் பலமுறை கொத்திக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்டின் சந்திரகாந்தன் (31) மார்ச் 5ல் அவர் சிறை வைக்கப்பட்டு இருந்த அறையில் தூக்கிட்டு மரணித்துள்ளார். ஜனவரி 13ல் உகாராஜன் சுவாமிநாதன் தான் தங்கியிருந்த கரோ ரவுன் சென்ரரில் உள்ள ஆர்எப்சி எக்ஸ்பிரஸ் சிக்கின் கடைக்கு மேலே வைத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இக்கொலை தொடர்பாக 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

ஜஸ்ரின் சந்திரகாந்தன் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஹென்டன் மஜிஸ்ரேற் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார். ஏப்ரலில் இவருடைய வழக்கு விசாரணை ஓல்ட் பெய்லிக்கு வர இருந்த நிலையிலேயே அவர் தூக்கிட்டு மரணித்துள்ளார்.

இம்மரணம் சிறையில் நிகழ்ந்தள்ளதால் இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எச்எம் பிறிசின் சேர்விஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விரு மரணங்களுக்குமான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.

ஷரியா(Shari’ah) சட்டம்: பாண் திருடிய சிறுவனின் கை சிதைப்பு! – Mohamed S R Nisthar

Shariah_Law_IranShariah_Law_Iranமேலே உள்ள படங்கள் என் நண்பனால் அனுப்பி வைக்கப்பட்டன. “அரசியலும் சமயமும்” என்ற கட்டுரையில் சமயங்களின் நன் நோக்கங்கள் பற்றி நீதானே எழுதி இருந்தாய், பார்த்தாயா சமயங்களின் சமுக முன்னேற்ற செயற்பாடுகளை என்று என்னைப் பார்த்து அந்த படங்கள் நக்கலாக (sarcastic) கேட்பது போல் தோன்றியது.

ஈரானில் நடந்தாக கூறப்படும் ஒரு சம்பவம் அதற்கு ஆங்கிலத்துடன் ஹிப்ரு மொழியிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் இது ஈரானுக்கும், இஸ்ரவேலுக்குமான பனிப்போர் என்று இதை விட்டுவிடவும் முடியாதுள்ளது. அதேநேரம் இந்த படங்களின் உண்மை தன்மையை(veracity) அறிவதன் மூலமோ, அல்லது புகைப்பட நிபுணத்துவ யோசனை (expert opinion) பெறுவதன் மூலமோ இந்த படங்களின் ஊடாக சம்பந்தப்பட்டோர் சொல்லவந்த விடயம் என்னவென்றும் அறியமுடியாது.

இருப்பினும் அந்த படங்களின் விளக்கத்தையும் எழுப்பப்படும் கேள்வியையும் பார்க்கும் போது அதாவது “in the name of Islam he is being punished”, “ Is this religion of peace and love” இது ஒரு சமயத்தை குறி வைத்து, அந்த சமயம் மனித விழுமியங்களுக்கு எதிரான விடயங்களை போதிப்பதாகவும், எனவே அந்த சமயத்தை பின்பற்றுவோர் பயங்கரவாத சுபாவம் கொண்டோர் என்ற முடிவு நோக்கி மனித சமூகத்தை நிர்ப்பந்திக்கின்றது போலவும் தோன்றுகிறது.

இதுவரை தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவராத இந்த புகைப்படங்களின் பின்னணி இத்தகைய உள் நோக்குத்தான் என்றால், தற்போது திரையரங்குகளில் காண்பிக்கப்படும் “My name is Khan” என்ற திரைப்படம் இந்த புகைப் படங்களுக்கு நல்லதொரு பதிலாகும். ஆனாலும் இந்த புகைப் படங்கள் என் நண்பன் போன்ற பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் ஷரியா சட்டம் பற்றிய தப்பபிராயம் ஆழ்ப்பதியக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் இதை சற்று ஆழமாக ஆராய்வதன் மூலம் இந்த படங்கள் அடிப்படையில் எதை கேள்விக்குற்படுத்துகிறதோ அதன் தர்க்க நியாயங்களை நாம் அறிய வழி வகுக்கும் என நம்புகிறேன்.

இந்த வகையில் 8 வயது பாண் திருடனின் கை சிதைப்பு என்ற குற்றச்சாட்டு இஸ்லாமிய மார்க்க சட்ட (ஷரியா)த்துடன் நேரடி சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த ஷரியா சட்டமானது கை, கால் வெட்டல், தலை தவிர முழு உடலையும் நிலத்துக்குள் புதைத்து கல்லால் அடித்து கொல்லுதல், வெறும் மேனியுடன் கசையடிக்கு உட்படுத்துதல், சிறை பிடிக்கப்பட்டோரின் அல்லது பணயம் வைக்கப்படோரின் தலை கொய்தல் போன்ற வெறும் தண்டனை கொடுக்கும் முறை என்ற கருத்து நிலவுவதை நாம் மறுப்பதற்கில்லை.

ஷரியா என்பது அடிப்படையில் கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பை வரையறுப்பது. அதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கிடையிலான தொடர்பு ஆதாவது திருமணம், குழந்தைகள் விவகாரம், விவாகரத்து, வணிகம், குற்றமும் தண்டனையும், நல்லாட்சி, சர்வதேச தொடர்புகள், யுத்தமும் சமாதானமும், மரணம், வாரிசுரிமை என்ற முற்றுப் பெறாத பட்டியலை கொண்டிருந்த போதிலும், இந்த ஷரியா சட்டம் முற்றும் முழுதாக அமுலில் இல்லாத நிலையிலும் இஸ்லாமியர்கள் இதில் சிலதை தெரிந்தெடுத்தும், சிலதை கைவிட்டு( pick and choose) இருப்பதும், பல சமூகங்களின் கலாச்சார தாக்கங்கள் இந்த சட்டத்துக்குள் சத்தமின்றி புகுந்துள்ள நிலைமையும் ஷரியா சட்டத்தின் மூலங்களையே(source) கேள்விக்குற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

ஷரியாசட்டத்தின் மூலம் என்பது:
1) புனித குர்-ஆன்( Holy Qur’an)

2) ஹதீத் ( Hadith -இறுதி இறை தூதர் முஹம்மது அவர்களின் சொல்லும், செயலும்) அதாவது, இறை தூதர்(நபி/ prophet) முஹம்மது அவர்களின் குர் ஆனை அடியொட்டிய நம்பிக்கை, அந்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் அவரின் சொல், செயல் என்பவற்றை சுட்டுவதாகும். இவரின் 63 கால உலக வாழ்வில் குறிப்பாக 23 வருட இறை தூதத்துவ (prophet hood)வாழ்வில் குர் ஆனின் போதனைகள் முற்றிலும் இவர் வாழ்வில் பரிட்சிக்கப்பட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கான சாட்சியமாகவே இதை கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் எல்லாம் வல்ல, எல்லாம் நல்ல, எல்லாம் அறிந்த தன்மைகள் இறைவனின் குணாம்சங்களாக(characters) இருப்பதால் இறைவனால் அருளப்பட்ட இந்த ஷரியா சட்டம் முழுமை பெற்றது. இது மாறாத்தன்மை கொண்டது. இதில் அகல்தல்(repeal) சேர்த்தல் (addition) என்பதற்கு இடமில்லை. ஏனெனில் இறைவாக்கு என்பது கால, நேர, இடங்களுக்கு அப்பாற்பட்டது. எக்காலத்துக்கும் எவ்விடத்துக்கும் பொருத்தமானது.

இருந்த போதிலும் இந்த படங்கள் குறிப்பாக ஒரு குற்றச்சாட்டையும் அதற்கான தண்டனையின் தன்மையையும் விமர்சிப்பதனால், ஷரியா சட்டத்தில் “குற்றமும், தண்டனையும்” என்ற விடயத்தை மாத்திரம் இங்கு பார்ப்பது மிக பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்.

இந்த அடிப்படையில் ஷரியா சட்டம் என்பதன் நோக்கம் “சமூகத்தை பாதுகாத்தல்” என்பதனால் வரம்பு மீறிய சுதந்திரம் (unlimited freedom), தனி மனிதத்துவம் (individualism), பொருள் முதல் வாதம் (materialism) என்பன இங்கு முதன்மை பெற இடமில்லை. இதை அடிப்படையாக கொண்டே விழுமியங்களும், அதை நடைமுறைபடுத்த விதிகளும், விதிகள் மீறப்படும் போது அதற்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.

சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அதன் அங்கமான தனிமனிதன் பாதுகாக்கப்பட வேண்டும். தனி மனிதனின் பாதுகாப்பு என்பது முதலில் அவனின் மனம் (mind) பாதுகாக்கப்படல் என்பதில் தங்கியுள்ளது. ஆகவேதான் ஒழுக்க கல்வி ஆணுக்கும், பெண்ணுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாற் போல் சமத்துவ சமூக (just society) அமைப்பு அவசியமாகின்றது. அதற்குப் பிறகு நல்லாச்சியின் (good governance) தேவை அவசியமாகின்றது. அடுத்த நிலையில் குற்றம் சாட்டுவோரின் அதி கூடிய சாட்சிய பொறுப்பு (high evidential burden) தேவைப்படுகின்றது. இதன் மூலம் சட்ட துஸ்பிரயோகம் (miscarriage of justice) தவிர்க்கப்பட வற்புறுதப்படுகின்றது. அடுத்தாற் போல் அளிக்கப்படும் தண்டனை நிருபிக்கப்பட்ட குற்றத்துக்கு சமமானதாக (proportion) இருப்பது ஒரு மீற முடியாத நிபந்தனையாகவுள்ளது. இறுதியாக தண்டனை என்பது மற்றோரை குற்றம் செய்யாமல் தடுக்கும் (deterrent) விதத்திலும் அமைதல் வேண்டும் என்பதும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே மேலே சொன்னவை சாத்தியமில்லாத நிலையில் அளிக்கப்படும் தீர்ப்பு (judgment/verdict) ஷரியா சட்டமாக கொள்ள முடியாது.

எனவே இந்த பாண் விவகாரத்துக்கான தண்டனை மேல் சொன்ன வடிகட்டல் (scrutinizing) முறையின் ஊடாக பெறப்பட்டதா என்ற கேள்வி இயல்பாக எழுவதை தடுக்க முடியாதுள்ளது. இதை விடவும் குற்றம் இழைக்கப்பட்டவர் விரும்பின் குற்றம் செய்தவரை சுயமாக மன்னிக்கவும் அல்லது நட்டஈடு பெற்றுக் கொண்டு மன்னிப்பளிக்கவும் ஷரியா சட்டத்தில் இடமுண்டு. இப்படி செய்ய பாண் வியாபாரி முன்வரவில்லையா என்ற கேள்வியும் தொடர்ந்தே வருகின்றது.

கொலை வழக்குகளில் கூட நட்டஈடு/பாவபணம் (blood money) செலுத்தி கொலைகாரர் மன்னிப்பு பெற்ற சம்பவங்கள் ஈரானிலும் நடந்துள்ளன. ஆகவே இந்த பாண் திருட்டு சம்பவத்தில் பாண் வியாபாரிக்கு நட்டஈடு கொடுத்து சிறுவனை காக்க அந்த சமூகம் முன்வரவில்லையா என்ற கேள்வியை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை.

அதையும் விட மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் முன்னேற்றம் அடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் குற்றச் செயல்களை தூண்டும் gene சிலருக்கு பிறப்பில் இருந்தே இருந்து வருவதாக சொல்லப்படுவதால், இத்தகைய களவுகளுக்கு இந்த ஜீன்னின் பங்களிப்பு என்ன என்பதும் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும். இந்த “ஒப்பு உவமை” (comparative exercise) செய்யும் முறையையும் தீர்ப்பளிப்போர் அறிந்திருக்கவேண்டும் என்பது ஷரியா சட்டத்தின் இன்னுமொரு அம்சம்.

எனவே இந்த படங்கள் உண்மையானவை என்றும் அதனடிப்படையில் இத்தீர்ப்பு பிழையென்று கொள்வோமாயின், தீர்ப்பளிப்போருக்கான பின்பற்றல் விதி முறையில் ஏதும் பிழை (procedural error) ஏற்பட்டிருக்கலாமே தவிர அல்லது அப்படியான சந்தர்பங்களில் தீர்ப்புக்கு எதிராக மேன்முறைஈடு (appeal) செய்ய வேண்டுமே தவிர ஷரியா சட்டம் பிழையானது என்ற கூற்று தண்டனை பெற்றவருக்கான பரிகாரமாகாது.

அமெரிக்காவில் மாநில துணை ஆளுநராக தமிழர் நியமனம்?

raja.jpgஅமெரிக் காவில் இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா இந்நியமனத்தை வழங்கவுள்ளார். அமெரிக்காவில் வாழும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கே இந் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை முதன் முதலில் பெற்ற தமிழர் என்ற பெருமை இவரையே சாரும்.

முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம் – வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அர சாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.