எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இடம்பெயர்ந்த 585 பேர் இன்று ஒட்டு சுட்டானில் மீள்குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் இன்று (17) 178 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் மீள்குடியேற்றப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது.

மாங்குளம் ஏ-9 வீதிக்கு மேற்கே இன்றுபுரம் மற்றும் திருமுருகண்டி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் மீள்குடியேற்றப்படுவதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டவாளி பிரதேச செயலகப் பிரிவில் 35 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

இதேவேளை அடுத்தவாரம் சுமார் 3500 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பனிச்சன்குளம் மற்றும் அம்பகாமம் கிராமசேவகர் பிரிவுகளில் எதிர் வரும் 21ஆம் திகதி 175 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு திட்டப்பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இது தவிர எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 16 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றப் பணிகள் இடம் பெற உள்ளதாக கிளிநொச்சி அரச அதிபர் கேதீஸ்வரன் ரூபாவதி கூறினார்.

உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேர் இங்கு மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

இது தவிர கரச்சி கிழக்கு, வட்டக்கச்சி, மாவடியம்மன், ராம நாதபுரம் உட்பட 6 கிராம சேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுமார் 1500 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அரச அதிபர் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நலன்புரி முகாம்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர்.

வெளிநாட்டு பிரமுகர் வருகை: அரசின் திட்டங்களை நேரில் பார்வையிட சந்தர்ப்பம்

kahiliya.jpgவெளி நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை நேரில் காண்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பில் உலக நாடுகளில் பல்வேறு விதமான மாற்று கருத்துக்களும் கூறப்படுகின்றன. அது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தி வருகின்றது.  இந்நிலையில் நாங்கள் கூறும் விடயங்கள் தொடர்பான உண்மை நிலைமைகளை காண முடியும். தமிழக எம்.பிக்கள் குழுவை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வரும் படியும், வடக்குக்குச் சென்று அங்கு அரசினால் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பார்வையிடும்படியும் கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல சுட்டிக்காட்டினார்.

நோர்வே இலங்கைத் தூதரக அலுவலர்களும் புலிகள் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர்

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலரும் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரும் யூன் 10 அன்று மோதிக்கொண்டதாக நேர்வேயில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதலை தனிநபர்களுக்கு இடையேயான மோதலாக நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்குள்ள இணைய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்து உள்ளது.

இலங்கைத் தூதரக அலுவலர்கள் இருவர் புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் உணவகத்திற்குச் சென்று மது அருந்திக் கொண்டிருக்கையில் அங்கு வந்து இன்னும் சில புலி ஆதரவாளர்கள் தூதரக அலுவர்களைத் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நோர்வே பொலிசார் உணவக உரிமையாளரை விசாரித்துள்ளனர். ஆயினும் யாரும் கைது செய்யப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களே 2009 நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் தாக்கியதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!

Jaffna_Hospitalமே 28ல் மருத்துவ கலாநிதி நிமால் காரயவாசம் தலைமையிலான லிற்றில் எயட் சமூகப் பணியாளர்கள் யாழ் போதானா வைத்தியசாலைக்கு 200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களைக் கையளித்தனர். பொதுவான நோய்களுக்கான அன்ரிபயோரிக்ஸ் மற்று அலர்ஜிக்கிற்கான அன்ரிகெஸ்ரமின்ஸ் ஆகியனவும் இந்த மருத்துவ அன்பளிப்பில் அடங்கி இருந்தது. யாழ் பொது வைத்தியசாலையின் மருத்தவ இயக்குனர் டொக்டர் பவான் லிற்றில் எய்ட் இன் அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டார்.

Medicine_to_Jaffna_LA‘‘யாழ்ப்பான பொது வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் இந்தக் காலகட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டது மிக முக்கியமான விடயம்’’, என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் பீடத்தின் தலைவர் கலாநிதி பொன்னையா அழ்வாப்பிள்ளை லிற்றில் எய்ட்க்கு தெரிவித்துள்ளார். ‘‘அண்மையில் வன்னியில் இடம்பெற்ற வன்முறைக் குழப்பத்தால் உதவி வேண்டியவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை நான் கண்டுள்ளேன்””, எனத் தெரிவித்த கலாநிதி அழ்வாப்பிள்ளை ‘‘லிற்றில் எய்ட் சரியான தருணத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு மருத்துவ ரீதியில் உதவியளித்துள்ளது’’, எனத் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் எல்லையற்ற மருத்துவ அமைப்பான மெடிசின் வித்தவுட் பொர்டர்ஸ் அமைப்பு இம்மருந்துப் பொருட்களை லிற்றில் எய்ட்க்கு வழங்கி இருந்தது. வழமையாக இவ்வளது தொiகாயான மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சே பொறுப்பேற்று விநியொகிப்பது நடைமுறை. ஆனால் இந்த அனுமதி லிற்றில் எய்ட் இன் பொறுப்பான நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையால் லிற்றில் எய்ட்க்கு வழங்கப்பட்டு இருந்து. அதனால் லிற்றில் எய்டே யாழ்ப்பாணத்திற்கான மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்கொண்டு இருந்தது.

இதுவரை லிற்றில் எய்ட் 1.52 மில்லியன் பவுண் பெறுமதியான மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணம், வவுனியா, நாவலப்பிட்டிய, பமுனுகம ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து இருந்தது. மேலும் மன்னார் மற்றும் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கும் மருந்துப் பொருட்களை இம்மாதம் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட வைத்தியசாலைகளுடன் லிற்றில் எய்ட் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதுடன் அன்பளிக்கப்பட்ட மருந்துப் பொருட்களின் முறையான பயன்பாட்டை லிற்றில் எய்ட்டும் மெடிசின் வித்தவுட் போடர்ஸ் அமைப்பும் அவதானித்து வருகின்றது. இதுதொடர்பான விஜயம் ஒன்றை குளோபல் மெடிகல் எய்ட் மற்றும் லிற்றில் எயட் என்பன இலங்கைக்கு மேற்கொள்ள இருக்கின்றன. லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் குளோபல் மெடிகல் எய்ட்டுடன் யூன் 17 இலங்கை செல்லவுள்ளார். இவர்கள் மருத்துப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்வதுடன் சுகாதார அமைச்சு அதிகாரிகளையும் சந்திப்பர். http://www.youtube.com/watch?v=ZB7bTcM_Nzg

”வன்னியில் சரணடைந்த இயக்க உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படுவது போல் எங்களையும் விடுதலை செய்யுங்கள்” மகசின் சிறைக் கைதிகள் கோரிக்கை

Magazine_Prison“யுத்தம் முடிவிற்கு வந்த ஓராண்டு கடந்து விட்டது. எமது நிலையை பல வழிகளில் அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியுள்ளோம் உருக்கமான பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம். உண்ணாவிரதங்கள் பலவற்றை நடத்தி எமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளோம். அதிகார பீடத்திலுள்ளவர்கள் எமக்கு வாக்குறுதிகள் தந்து எம்மை சமாதானப்படுத்தினார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை. எமது நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப்போயுள்ளன”

 இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள் அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மகஸின் சிறைச்சாலையிலுள்ள  தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தமை குறிப்பித்தக்கது. அப்போது அங்குள்ள தமிழ் கைதிகள் அவரூடாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மனு ஒன்றினை அனுப்பி வைத்தனர்.

Magazine_Prisonஅம்மனுவில் தெரிவிக்கப்படுள்ள விடயங்கள்: 
”பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் வேதனைகளை தாங்கள் அறிவீர்கள் . பலர் சட்ட நடவடிக்கைகள் எதுவுமின்றியும் ஏனையோர் சட்ட நடவடிக்கைகளுக்குள்ளான நிலையிலும் உள்ளோம். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய பட்டியலை இத்துடன் இணைத்துள்ளோம்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள நாம் பல்வேறு சிறைகளிலிருக்கும் தமிழ் கைதிகள் சார்பாக இக்கடிதத்தை எழுதுகின்றோம். யுத்தம் முடிவடைந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் எமது நிலையை பல வழிகளில் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியும் எவ்வித பயனுமில்லை. நாம் எமது குடும்பத்தினரோடு இணைந்து வாழத் துடிக்கின்றோம்.  புதிய எண்ணங்களுடன் வாழத் துடிக்கின்றோம். எமக்கு விடுதலை கிடைக்கும் நாளுக்காக ஏங்குகின்றோம். 

யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் சரணடைந்த இயக்க உறுப்பினர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவது பாராட்டுக்குரியது. இது போன்று எம்மீதும் அரசின் பார்வை திரும்புமா? அல்லது, மறுவாழ்வு என்பது  எமக்கு மறுக்கப்பட்டு விட்டதா? தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் தங்களின் மேலான கவனித்திற்கு இவ்விடயததைக் கொண்டு வருகின்றோம்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 7ம் திகதி  தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கம் இடையில் நடைபெற்ற சந்திப்பில் சிறைளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதiலை குறித்து கூட்டமைப்பினர் பேசிய பொது ஜனாதிபதி அது தொடர்பாக  உறுதியான பதில் எதனையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

Somawansa_Amarasinghe_JVPஜே.வி.பியினர் வன்னியில் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (June 16 2010) யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊடகவியாலாலர்களுடன் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உரையாற்றினார்.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் சரியான உதவிகளை வழங்கவில்லை எனவும் ஏ-9 பாதையின் இரு மருங்கும் அழகாக காட்சிதரும் நிலையில் உள்ளே சென்று பார்க்கும் போதே மக்களின் அவல நிலை தெரிகிறதென்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்ட அவர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அது தோன்றியதற்கான காரணிகள் களையப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதே Nவைளை, வன்னியில் மக்களின் அவல நிலைகள் குறித்து அம்மக்களுடன் கலந்துரையாடி ஆராய்ந்தாகவும், அம்மக்களின் மிள்குடியேற்றம் மற்றும் அம்மக்களுக்கான அரசியல் திர்வு குறித்து எதிர்காலத்தில் பாராளுமன்றத்திலும்  அதற்கு வெளியிலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஜே.வி.பி தீhமானித்துள்ளதாகவும் ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியினர் நேற்று கிளிநொச்சி, இரணைமடு, தர்மபுரம், பரந்தன் ஆகிய பகுதிகளில்  மீpள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மிள்குடியேற்றபட்ட  மக்கள் தங்களின்  பிரச்சினைகள் குறித்தும், காணாமல் போன தங்களின் உறவினர்கள் குறித்தும், தடுப்புக் காவிலுள்ளவர்களின் விடுதலை குறித்தும் தங்களுடன் கலந்துரையாடியதாகவும் அத்துடன் விடுதலைப் புலிகளின் ‘தமிழீழ வைப்பகம்’ வங்கியில் அடைவு வைக்கப்பட்ட தங்களின் நகைகளை மீட்டுத்தர உதவுமாறும் ஜே.வி.பியினரிடம் கூறியதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைக்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதி நகைகளை படையினர் மீட்டுள்ளதாக  முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கான இலவச மருத்தவ முகாம் நாளை நடைபெறுகிறது!

கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (17-06-2010) நடைபெறவுள்ளது. கிளிநொச்சி கனகபரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை இம்மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது. 

கண். பல். காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகப்பேறு, பெண்களுக்கான நோய்கள், இதயநோய், புற்று நோய் உட்பட அனைத்து நோய்களுக்கான  மருத்துவ சேவைகளும் நடைபெறும் என கிளிநொச்சி பிராந்தி சகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் தெரிவித்துள்ளார். 

மேற்படி நோய்களுக்கான வைத்திய நிபுணர்கள், நவீன உபகரணங்களுடன் சமுகமளித்து சிகிச்சையளிக்கவுள்ளதாகவும், கிளிநொச்சி நகரிலிருந்து கனகபரம் பாடசாலை வரை நோயாளிகளுக்கான வாகன வசதிகளும்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடமாற்றம்!

சாவகச்சேரி நீதவானாக பணியாற்றய ரி.ஜே.பிரபாகரன் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சாவகச்சேரி நீதிவானாக எஸ். அப்துல்லா பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணம் வவனியா நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (June 21 2010) முதல் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சாவகச்சேரி நீதவான் அக்கரைப்பற்றுக்கும், வவனியா நீதவான் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம் நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன்  நீதி விசாரணைகளை மிகவும் கடுமையாக மேற்கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இருபது வருடங்களின் பின்னர் முல்லை. அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட துரித அபிவிருத்திக்கு 6 குழுக்கள் நியமனம்

cha.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தலா ஐவர் அடங்கிய ஆறு முக்கிய குழுக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கவுள்ள அடுத்த போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளவும், 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும், கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் 20 வருடங்களுக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., வட மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தகவல் தருகையில், திட்டமிடல், வீடமைப்பு, மீன்பிடி, உள்ளூராட்சி, நீர், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் உள்ளடங்கலாகவே ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது தவிர, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பனை அபிவிருத்தி மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கியதாக மாவட்ட திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக மீளப்பெறல் திட்டம், நீண்டகால அவிவிருத்தி திட்டம், வருடாந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 5000 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என்றார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்ய தலா பத்தாயிரம் ரூபா வீதம் அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளதுடன், தலா ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மூன்று புசல் நெல்கதிர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 35 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு 3277 வீடுகள் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2100 வீடுகள் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

முல்லை மாவட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 60 வீதமான மாணவர்களின் வருகையும், 80 வீதமான ஆசிரியர்களின் வருகையும் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

பராக் ஒபாமாவின் விசேட தூதுவர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சந்திப்பு

samantha_mahinda.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது போருக்குப் பின்னரான இலங்கையின் நிலைவரம் குறித்து கலந்துரையாடியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒபாமாவின் விசேட ஆலோசகரான சமந்தாபவர், அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான பவரின் சந்திப்பின்போது அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸ்,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பரஸ்பர நலன்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை இருதரப்பும் நடத்தியதாகவும் சந்திப்பு சுமுகமாகவும் நட்புறவுடனும் இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக குறிப்பாக டார்பர் மோதல் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டவர் என்ற வகையில் சமந்தா பவர் நன்கறியப்பட்டவராகும்.