எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

உலகக் கோப்பை கால்பந்து வெல்லப்போவது யார்? மோதலில் நெதர்லாந்து – ஸ்பெயின்

spt2.jpgஉலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின். 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும்இ 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன.

ஜோன் ஹோம்ஸின் இடத்திற்கு புதியவர் நியமனம் – ஐ.நா. செயலர் அவசர நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய ஜோன் ஹோம்ஸின் இடத்துக்குப் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவுக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றும் திருமதி வெலேரி அமோஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனினால் ஹோம்ஸின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதா அவரின் இணைப் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இதுவரை காலம் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் பான் கி மூன் புதியவர் அந்தப் பணியைத் திறம்பட மேற்கொள்வாரென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஜோன் ஹோம்ஸ் இலங்கை அரசாங்கத்தரப்பால் முன்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். – அமைச்சர் தேவானந்தா அரசிடம் கோரிக்கை!

douglas-devananda.jpg‘முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். எம்மீதுள்ள களங்கத்தை போக்குங்கள்” என – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தி.மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை கைது செய்யுமாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அத்துடன் அண்மையில் சாவகச்சேரியில் மாணவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், விரிவான விசாரணகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். இக்கொலை தொடர்பாகவும் சிலர் தம்மீது குற்றம் சுமத்தி வருவுதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம்மீதும் தமது கட்சி மீதும் பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் எனவும், இவற்றிற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய விசாணைகளை நடத்தி தம்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

மகேஸ்வரனின் மனைவியும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாராயுளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தடுக்க சிவில் பாதுகாப்புக் குழுக்கள் – மட்டு பொலிஸ் அத்தியேட்சகர்

சிவில் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதைத் தடுக்க தடுக்க முடியும் என மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதையும், மீண்டுமொரு யுத்தம் எற்படுவதையும் தடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கரணாரட்ண தெரிவித்துள்ளார். 

கடந்த புதன் கிழமை மட்டக்களப்பில் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உயர்மட்ட மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிராமங்களில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் இந்த சிவில் பாதுகாப்பு குழுக்களுடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரம்!

dengue22222.jpgஇலங்கை யில் மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. கடந்த வாரத்தில் மட்டும் 11 பேர் டெங்கு நோயினால் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதத்தில் மட்டும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 3,222 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் மட்டும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளிகளின் தொகை 19,117 இற்கு மேல் எனவும், டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் மீண்டும் பரவி வருவதாகவும், சில வைத்தியசாலைகளில் டெங்கு நொயாளிகளின் தொகை அதிகரித்துள்ள தாகவும் சுகாதார பிரிவுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் தற்போது நுளம்புகளின் பெருக்கம் மோசமாக அதிகரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிநாடுளிலிருந்து இலங்கை வருபவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்!

Police_Checkவெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் – சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிராசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருந்து விட்டு இலங்கைக்கு வருபவர்களின் விபரங்களை, தகவல்களை சேகரிக்க வேண்டிய தேவை பொலிஸாருக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கு வரும் தமிழ் மக்களை பொலிஸில் பதிவு செய்யுமாறு நேற்று முன்தினம் வெள்ளவத்தையில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் பத்திரிகையொன்று பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு வந்து விடுதிகள், உறவினர் விடுகளில் தங்கியிருக்கும் போது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்நடமுறை நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழர்களை மீண்டும் பொலிஸ் பதிவுகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகாலச் சட்டத்தின் 23ஆம் பிரிவின் அடிப்படையில் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனநாயக தேசிய முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் நா.குமரகுரபரன் தெரிவித்துள்ளார்.

கொழம்பிற்குச் செல்லும் தமிழ் மக்கள் விடுதிகளிலோ, உறவினர் வீடுகளிலோ தங்கியிருக்கும் போது அப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னர் நடைமுறையில் இருந்தது. எனினும், போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் அப்பதிவு முறை நீக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இது நடைமுறைக்கு வந்து விடுமோ என்கிற அச்சமும, கவலையும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டம் முடிந்தது

ww-pr.jpgஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்து நீர் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.  அங்கிருந்த வைத்தியருடன் கலந்துரையாடிய பின்பு விமல் வீரவன்ச அம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும்
விமல் வீரவன்சவை பார்வையிட்டார்.

ww-pr.jpg

நன்றி: படம் டெயிலி மிரர்

அக்டோபஸ் சோதிடமும், உதைபந்தாட்ட போட்டியும்

octopuspaul.jpgஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் என்ற அக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.

தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் அக்டோபஸஷுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது. அக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. கானா அஸ்திரேலியா இங்கிலாந்துடன் மோதிய போது ஜேர்மனிதான் வெற்றி பெறும் என அக்டோபஸ் கூறியது சரியானது. பலமிக்க செர்பியா அணியுடன் ஜேர்மனி தோற்கும் என்றது. அதுவும் சரியாக நடந்தது. இந்த நிலையில் கால் இறுதியில் ஆர்ஜன்டினாவை ஜேர்மனி வீழ்த்தும் என கணித்தது. இதுவும் சரியாக நடந்து விட்டது.

இந்த வகையில் வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் உதைப்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என அக்டோபஸ் தெரிவித்துள்ளது.  தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் இறுதி போட்டியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இந்தது. இந்நிலையில் இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது. இது நெதர்லாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி – உருகுவே இன்று மோதல்

soccer.jpgஉலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் 19 வது உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடர் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் – நெதர்லாந்து அணிகள் தெரிவாயின. அரையிறுதியில் தோல்வி அடைந்த ஜெர்மனி- உருகுவே அணிகள் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

கூட இருந்து குழிபறிக்காதீர்கள்; என் கழுத்தை பிடித்து தள்ளிவிடுங்கள். தனது கட்சியிடம் காதர் எம்.பி வேண்டுகோள்

cadar.jpgஐக்கிய தேசியக்கட்சியில் நான் மிகவும் பழைமையானவன். நான் பிரயோசனமற்றவன் என்று நினைத்தால் என்னை கழுத்தை பிடித்து வெளியேற்றுங்கள். கூட இருந்தே கழுத்தை அறுக்க வேண்டாம் என கண்டி மாவட்ட ஐ. தே. க. எம். பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஐ. தே. க விடம் கேட்டுக் கொள்வதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனக்கு இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற சந்தர்ப்பம் தரவில்லை. எனக்கு பேச சந்தர்ப்பம் தரும்வரை நான் ஆசனத்தில் அமரப் போவதில்லை எனக் கூறிய காதர் எம்.பி முன் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் எழுந்து நின்றார்.

எனது கட்சி எனக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. என்னுடன் கூட இருந்தே குழி பறிக்கிறார்கள் என்றார். ஆளும் தரப்பாவது எதிர்த்தரப்பாவது இவருக்கு பேசுவதற்கான நேரத்தை கொடுங்கள் என பிரதி சபாநாயகர் கேட் டுக் கொண்டதுடன் ஆளும் தரப்பிலிருந்து 5 நிமிடம் தருவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காதர் எம். பி. பேச ஆரம்பித்தார். நான் கண்டி மாவட் டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ. தே. க. வின் பழைமையான உறுப்பினராக உள்ளேன். கடந்த வாரம் நடைபெற்ற அமர்வுகளிலும் எனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.

எனினும் எனக்கு பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் கட்சியின் கூட்டத்துக்கு 7 ஆம் திகதி வருமாறு கடிதம் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டத்தை 6 ஆம் திகதியே நடத்தி முடித்துவிட்டார்கள். ஏன் என் கழுத்தை அறுப்பது போல நடந்து கொள்கிறார்கள். எனது தேவை அவர்களுக்கு தேவையில்லை என்று நினைத்தால், பிரயோசனமற்றவன் என்று நினைத்தால் என் கழுத்தை பிடித்து தள்ளிவிட்டால் எங்காவது போய் விடுவேன் தானே என கூறினார்.

அத்துடன் ஜனாதிபதியிடம் மற்றுமொரு கோரிக்கையை முன்வைப்பதாக கூறிய காதர் எம். பி. பாராளுமன்ற உறுப்பினர்களு க்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகனங்களுக்கான பேர்மிட்டுக்களுக்கு விதி க்கப்படும் குறைந்தளவு வரியையும் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும் இந்த வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன். வரவு – செலவு திட்டம் சிறந்தது என்றும் கூறினார்.