சிவில் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதைத் தடுக்க தடுக்க முடியும் என மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாவதையும், மீண்டுமொரு யுத்தம் எற்படுவதையும் தடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கரணாரட்ண தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை மட்டக்களப்பில் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உயர்மட்ட மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிராமங்களில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் இந்த சிவில் பாதுகாப்பு குழுக்களுடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.