எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“போரினால் கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர

due.jpgபோர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள், ஊனமுற்றோர். சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். போரிலே கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றோர், சொத்துக்களை இழந்தோர் அகியோருக்கு இழப்பீடுகள் வழங்க 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என நேற்று  அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ஆட்கள், ஆதனங்கள் மற்றும், கைத்தொழில்களை புனரமைப்பு செய்யும் அதிகாரசபையிடமும் நிதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி. வவுனியா அகிய இடங்களில் நடைபெற்ற நடமாடும் சேவைகளில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவை கிராமசேவகர். பிரதேசச் செயலாளர்கள் உறுதியளித்ததன் பின்னர் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்- “எமது நடமாடும் சேவையில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உதவி கோரி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகள். இளம் பெண்கள் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக போராட்டத்தில் இணைத்து விடுவார்கள் என்கிற அச்சத்தில் பெற்றோரினால் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள்.  இவர்களில் 21-22 வயது இளம் விதவைகள், இரண்டு மூன்று குழந்தைகளுடன்  அநாதரவாக உள்ளனர்.  இது மாபெரும் சமூகப்பிரச்சினை ஆகும். புலிகளின் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோரது மனைவிமாரும், எம்மிடம் உதவி கோரி வந்தனர். இந்த விதவைகள் அனைவரும் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி வருமானம் ஈட்டிக்கொள்ள வழி செய்து கொடுக்கப்படும்” எனக் கூறினார்.

அமைச்சர் டியூ குணசேகர  அவரது நடமாடும் சேவையூடாக போரின் பின்னான பொதுமக்களின் நிலைமைகளை யதார்த்தமாக விளங்கிக் கொண்டுள்ளார் என்பது அவரது இக்கருத்துக்களிலிருந்து தெரிய வருகின்றது. ஆனாலும், ஏனைய அமைச்சர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும், இழப்பீடுகள் வழங்கப்படுவது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவை தற்போது வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தர்சிகாவின் இல்லத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்! தர்சிகா அடக்கம் செய்யப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு!

Douglas Devanandaவேலணை மருத்தவமாது செல்வி ச.தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தர்சிகாவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள கைதடி ஊற்றல் மயானத்திற்கு பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி இரவு தொடக்கம் இப்பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே வேளை, நேற்றும் (21-07-2010) ஊர்காவற்றுறை நீதிமன்றில் தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பலரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகலில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தர்சிகாவின் இல்லத்திற்கு விஜயம் செய்து அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்துள்ளதோடு, தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடைபெற தான் ஜனாதிபதியிடம் பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும்  உறுதியளித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சி பாடசாலைகளுக்கு தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.

Sritharan_SivagnamTNA_MPதமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளுக்கு சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை வழங்கியுள்ளதுடன் போரிலே பாதிக்கப்பட்ட சிலருக்கு சைக்கிள்களையும், ஊனமுற்றவர்களுக்கு மூன்று சில்லு சைக்கிள்களையும் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் 50 பாடசாலைகளுக்கும், பளை. கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகங்களுக்குமாக 52 சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை அவர் வழங்கியுள்ளார்.

 ரிஎன் பா உ சிவஞானம் சிறிதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வழங்கிய கன்னி உரை:

”நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!” : சிவஞானம் சிறிதரன் பா உ (ரிஎன்ஏ)

திருடர்களிடமிருந்து தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு படையினர் ஒலிபெருக்கியில் அறிவிப்பு!

Kilinochi Signகிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறு படையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருகின்றனர். வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் இவ்வாறான அறிவித்தலை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 அதிகமான வீடுகள் அழிவடைந்த நிலையிலும், சில வீடுகள் கூரைகள், கதவுகள், யன்னல்களற்ற நிலையில் வெறும் கட்டங்களாக மட்டும் காணப்படும் நிலையிலும், மக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலையிலேயே திருடர்கள் தங்களது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் இந்நிலையில் மிள்குடியேற்றப்பட்ட மக்கள் இரவு நேரங்களில் திருடர்கள் பயம் காரணமாக கண்விழத்திருந்து தங்கள் நித்திரையை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து யாழ். வந்து கொண்டிருந்த பஸ் மீது கல்வீச்சு!

நேற்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில் அநுராதபுரம் மகாஇலுப்பளம என்ற இடத்திலேயே இக்கல்வீச்சு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், குறித்த பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி வரும் பஸ்களுக்கு சிங்களப்பகுதிகளில் வைத்து சிலரால் கல்வீச்சு நடத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவ்வாறு வரும் பஸ்களில் கூடுதலாக தமிழர்கள் மட்டுமே பயணித்தனர்.  போர் முடிவிற்கு வந்த பின் தற்போது தென்பகுதிகளிலிருந்து அதிகளவிலான சிங்களப் பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தருகின்றனர். இந்நிலையில், இக்கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அபிவிருத்தி; மீள்கட்டுமானத்தில் புலம்பெயர் தமிழர் பங்கேற்க விருப்பம் – ரொபட் ஓ பிளேக்

r-b.jpgகடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பெருவெற்றி மற்றும் அவரது கட்சிக்கு கிடைத்த அதே போன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் இலங்கை இப்போது மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறான சமாதான நிலையில் நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வது முக்கிய காரணியாக அமைகிறது என்று. கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக் தெரிவித்தார்.
 
ஊடகவியலாளர்களிடையே அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அவர்  இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி உதவி வழங்குநராக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. கண்ணிவெடி அகழ்வு, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வரைதல், மற்றும்புதிய பொருளாதார வாய்ப்புகளை வடக்கில் ஏற்படுத்துவதற்கான தனியார் துறை முதலீடுகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும். கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்கா இலங்கைக்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது என்று ரொபர்ட் பிளேக் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், வர்த்தக சமூகம், எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசியதாக கூறினார்.

ஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நல்லிணக்கம், ஆளுமை மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசியதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் திருப்தியளிப்பதாகவும் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து குறுகிய காலத்தில் அகதிகளின் எண்ணிக்கையை 37 ஆயிரமாக குறைக்க முடிந்தமை திருப்தியானது என்று பிளேக் கூறினார்.

மட்டக்குளி பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

மட்டக்குளி பொலிஸ் நிலையம் மீது கடந்த 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்று சந்தேகிக்கப்படுபவர் நேற்று சட்டத்தரணி மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

முரளி – 799ஆவது டெஸ்ட் விக்கட்

murali.jpgகாலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 5ஆவது நாளான இன்று முரளிதரன் விளையாடும் இறுதி டெஸ்ட் நாளாகும்.

இன்றைய போட்டியில் சற்று நேரத்திற்கு முன் தனது 799ஆவது டெஸ்ட் விக்கட்டைப் பூர்த்தி செய்தார். இன்னும் ஒரு விக்கட்டைப் பெற்றால் 800 விக்கட்டுகள் பெற்ற சாதனைக்குரிய வீரராக முரளி மாறிவிடுவார்.

கிரிக்கட் உலகில் சாதனை நாயகனாகத் திகழும் முரளி மீதமான ஒரு விக்கட்டையும் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்க் உலகில் மற்றுமொரு சாதனையைப் படைக்க தேசம்நெற் இன் வாழ்த்து.

தேங்காயினுள் குழந்தையின் கை உருவம்; கல்முனையில் பரபரப்பு

coc.jpgகல்முனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட தேங்காய் ஒன்றினுள் குழந்தையொன்றின் கை வடிவத்தில் தேங்காய் முளை காணப்பட்டுள்ளது.  இந்த கை வடிவத்திலான விரல்களுடன் கூடியதாகக் காணப்படும் இத் தேங்காய் முளையை பெருந்திரளான மக்கள் அதிசயமாகக் கருது பார்வையிடுகின்றனர்.

கல்முனைக்குடி – 14, எம். சி. அஹ்மது அவெனியூவில் வசித்துவரும் நிஸாம் மெளலவியின் வீட்டில் உணவு சமைப்பதற்காக உடைக்கப்பட்ட தேங்காயிலேயே இவ்வாறு முளை காணப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை – சென்னையில் ரணில்

இலங்கையின் தற்போதைய நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு தொடர்பான விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க லடக் செல்லும் வழியில் செவ்வாய் அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வருகை தந்திருந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரணில் கூறியிருப்பதாவது; வட,கிழக்கு மாகாணங்களிலுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசு தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் அரசிடம் விளக்கம் கேட்டோம்.

எதிர்க்கட்சிகள் நிறைவேற்றதிகார பிரதமருக்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. பொலிஸ், நீதி, நிர்வாகம், தொழில் துறைகளில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்தியா இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சு நடத்த வேண்டுமென்று ரணில் கூறியுள்ளார்.