சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ராஜஸ்தானில் நிலநடுக்கம்; 5.3 ரிக்ஸ்டர் அளவு

ராஜஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.  காலை 7.17 மணயிளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்ஸ்டர் அளவுகோலில் 5.3 என பதிவானதாக அந்த ஆய்வுமையம் தெரிவித்தது.

டில்லிக்கு தென்மேற்கே 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான ஜெய்சால்மிர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லையில் ஒரு பூகம்பம் தாக்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற இந்த பூகம்பத்ததால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், இருவர் பலியாகியும் உள்ளனர்.

ஆயுர்வேத மருந்துகளை சந்தைப்படுத்த அரசு முடிவு

tissa_karaliyaddda.jpgகோப் சிற்றிகள் ஊடாக ஆயுர்வேத மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை ஆயுர்வேத மருத்துக் கூட்டுத்தாபனத்தின் நாற்பதாவது வருட நிறைவின் நிமித்தமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

இந்த கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 11ம் திகதியுடன் நாற்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இதன் நிமித்தம் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அம்சமாகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது விடயமாக வர்த்தக, வாணிப, கூட்டுறவு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் இதன்படி கோப் சிற்றிகள், கூட்டுறவு கடைகள், சனச அமைப்புகள் என்பவற்றின் ஊடாகவும் இம் மருந்துப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை நீண்ட நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கற்றாளை சம்போவையும் இந்த நாற்பதாவது நிறைவு தினத்தின் நிமித்தம் சந்தைப்படுத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் மேலும் ஒரு கப்பல் கடத்தல்

somaliya-robbery.jpgஉணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாரத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிந்தியது இதுவாகும்.

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில், கடற்கொள்ளையர்களின் படகுகளால் இந்த டச்சுக் கப்பலின் மீது இரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் நிலைமை குறித்து தாம் அவதானித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, அந்த மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்து தாம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் இத்தகைய தாக்குதல்கள் வர வர மிகவும் துணிச்சலானவையாகவும், நுட்பமானவையாகவும் மாறி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

கொழும்பு மாநகரசபை அதிகாரி சுமணபால பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் கடமைகளை நிறைவேற்றவும் நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தரான சுமணபால அப்பதவியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே சுமணபால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு பத்வானி ஜெயவர்த்தன என்பவர் ஆளுநர் அலவி மௌலானாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை மற்றும் மேல்மாகாண சபையின் 1991 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உள்ளூராட்சி நிர்வாக கண்காணிப்பு சட்ட பிரகாரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகர‌ன் உ‌யிரு‌க்கு ஆப‌த்து: திருமாவளவ‌ன்

thiruma_8-4.jpgசெ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌னே த‌விர ஒரு ‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிற ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் ‌உ‌யிரு‌க்கு த‌ற்போது ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது ‌எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் இன‌ப் படுகொலையை க‌ண்டி‌த்து ‌விடுதலை ‌சிறு‌த்தை‌க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் ஹா‌‌ல் அருகே ‌இ‌ன்று (09.04.09) ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு தலைமை தா‌‌‌ங்‌கிய ‌விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌‌லிக‌ள் ‌மீது‌ம் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது‌ம் ‌சி‌ங்கள படை கொடூர‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது. ‌ஹீரோசிமா, நாகசா‌கி‌ப் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ‌விஷவா‌யு கு‌ண்டுகளை ‌வீ‌சி தா‌க்‌கிய ச‌ம்ப‌வ‌த்தை உலக‌ம் இ‌ன்று‌‌ம் க‌ண்டி‌த்து வரு‌கிறது. அத‌ன் ‌பி‌ன்ன‌ர்தா‌ன் அணு ஆயுத தயா‌ரி‌ப்பு, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ல் முறையான வரையறைக‌ள் தேவை என ‌வி‌திமுறைக‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டன. ஆனா‌ல் அதுபோ‌ன்ற ஒரு தா‌க்குத‌ல் நட‌த்த ராஜப‌‌க்சே தயாரா‌கி வரு‌‌கிறா‌ர்.

ச‌ர்வதேச நாடுக‌ள் தடை செ‌ய்து‌ள்ள ‌கிள‌‌‌ஸ்ட‌ர் பா‌ம் (கொ‌த்து‌க் கு‌ண்டுக‌ள்) ‌வீ‌சி தா‌க்குத‌ல் நட‌த்த ‌தி‌ட்‌ட‌மிட்டு‌ள்ளா‌ர். இதுபோ‌ன்ற தாக்குத‌ல் நட‌த்‌‌தினா‌ல் உட‌லி‌ல் காய‌ம் ஏ‌ற்படாது, ந‌ச்சு வா‌யு பர‌வி உட‌லி‌ல் பட‌ர்‌ந்து தோல் உ‌‌‌‌ரி‌ந்து ர‌த்த‌ வா‌‌ந்‌தி எடு‌த்து சாக நே‌ரிடு‌ம். இதுபோன்று ச‌‌மீப‌த்‌தி‌ல் நட‌த்‌திய தாக்குத‌லி‌ல்‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த்தை சே‌‌ர்‌ந்த ஏராளமான போரா‌ளிக‌ள் க‌ரி‌‌க்க‌ட்டையா‌கி உ‌‌யி‌ர் இழ‌ந்து‌ள்ளன‌ர். ஆனாலு‌ம் செ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌ன், நா‌ன் செ‌‌த்தாலு‌ம் ஒரு‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர் ‌பிரபாகர‌ன். இ‌ந்த ந‌ச்சு வெடிகு‌ண்டுகளு‌க்கு ம‌த்தி‌‌யி‌ல் ‌பிரபாகர‌ன் வா‌ழ்‌ந்து கொண்டிரு‌க்‌கிறா‌ர், போராடி கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர். எ‌ந்த நேர‌த்திலு‌ம் உ‌யிரு‌க்கு ஆப‌த்து ஏ‌ற்படலா‌ம் என அ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த தகவ‌ல் நே‌ற்‌று அ‌திகாலை என‌க்கு ‌கிடை‌த்தது. இதனா‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற வே‌ட்பாள‌ர் ப‌ட்டிய‌ல் அ‌றி‌‌வி‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சியையே ர‌த்து செ‌ய்ய நா‌ன் ‌தி‌ட்ட‌‌‌மி‌ட்டே‌ன். தே‌ர்தலை புற‌க்க‌ணி‌க்கு‌ம் முடிவு‌க்கு‌ம் நா‌ன் வ‌ந்தே‌ன். விடுதலை ‌சிறு‌த்தைகளு‌க்கு ஒது‌க்க‌ப்‌ப‌ட்ட இரண்டு தொகு‌திகளையு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிடமே ஒ‌ப்படை‌த்து ‌விட நா‌ன் முய‌ற்‌சி செ‌ய்தே‌ன். ஆனா‌ல் தோழர் ர‌வி‌க்குமா‌ர் எ‌ம்.எ‌ல்.ஏ கே‌ட்டு‌க் கொ‌ண்ட‌தி‌ன் பே‌‌ரி‌ல் எனது முடிவை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு நே‌ற்றைய ‌நிக‌ழ்‌ச்‌சியை நட‌த்‌தினே‌ன். ஈழ‌த் த‌மிழ‌‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌னிதா‌பிமான அடி‌ப்படை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌‌ர் சோ‌னியாகா‌ந்தி தலை‌யி‌ட்டு போர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் என ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌‌ட்‌சி வ‌லியுறு‌த்து‌கிறது எ‌ன்றார்.

மலேசிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு

najib-razak.jpgமலேசிய பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் தலைமையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மலேசியாவின் புதிய பிரதமராக நஜீப் அப்துல் ரசாக் கடந்த 3ம் தேதி பொறுப்பேற்றார். பிரிட்டனில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த நஜீப்(55), மலேசிய நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசைனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க செயற்கைகோள் 20-ந்தேதி ஏவப்படுகிறது

pak_terror.jpgபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அதிநவீன ராடார் கொண்ட செயற்கைகோள் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது. இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வரும் 20-ந்தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

பார்வையற்ற படை வீரர்களுக்காக பேசும் கடிகாரங்கள் அன்பளிப்பு!

laptop_ranavirufoundation.jpgகனடாவிலுள்ள இலங்கையர்கள் றாகமையில் அமைந்துள்ள ‘றணவிரு செவன’ நிலையத்தில் பராமரிக்கப்படும் பார்வையற்ற இராணுவ வீரர்களின் பாவனைக்காக மடிக் கனணி ஒன்றையும் பேசும் கடிகாரங்களையும் அன்ளிப்புச் செய்துள்ளனர். இந்த அன்பளிப்புக்களை டொரன்டோவிலுள்ள இலங்கைக்கான கொன்சுயூலர் ஜெனரல் பந்துல ஜெயசேகர,  மேஜர் துஸ்யந்த யாப்பாவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்துக் கையளித்தார்.

கனடாவின் டொரன்டோ நகரில் வசிக்கும் நாட்டுப்பற்று மிக்க இலங்கையர்களால் வழங்கப்பட்ட இந்த அன்பளிப்புக்கள் தாய்நாட்டுக்காக தமது உயிர்களையும் அவயங்களையும் இழந்த படைவீரர்களை  கௌரவப்டுத்தும் நோக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிபியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு; இருதரப்பு பேச்சு ஆரம்பம்

mahi-libiya.jpgமூன்று நாட்கள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு லிபியாவைச் சென்றடைந்தனர்.

லிபிய ஜனாதிபதி கேர்ணல் கடாபி பிறந்த ஊரில் விசேட அரச தலைவர்கள் வந்திறங்கவென நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘சேர்டி’ விமானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு நேற்று சென்றது. இக்குழுவினரை லிபிய பிரதமர் கலாநிதி அல் படாதி அலி அல் முஹம்மதி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மூஸா முஹம்மத் கோஸா ஆகியோர் வரவேற்றனர்.

இச்சமயம் ஜனாதிபதிக்கு விசேட அரச கெளரவம் அளிக்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையுடன் செங் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இலங்கை அரச தலைவர் ஒருவர் லிபியா வுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

அதனால் இரு நாடுகளுக்குமிடையிலான பல முக்கிய விடயங்கள் குறித்து உயர்மட்ட அரச தலைவ ர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் படவிருப்பதுடன், ஒப்பந்தங்களும் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இதனடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபிக்குமிடையிலான இருபக்க பேச்சுவார்த்தை நேற்று மாலை ஆரம்பமானது. இதேநேரம் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு லிபிய பிரதமருடனும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. லிபிய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவுக்கு நேற்றிரவு இராப்போசன விருந்துபசாரமும் வழங்கினார்.

வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்த முன்னோடி ஏற்பாடுகள். 20ம் திகதி சபையில் சட்டமூலம்

parliament.jpgவடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம், மேற்கொண்டு வருவதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய சட்டமூலம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்தற்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே மேற்படி சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த போதும் அந்த அங்கீகாரம் ஆறு மாத காலத்திற்கே செல்லுபடியாகும். வடக்கில் நிலவும் யுத்த சூழ்ல்நிலை காரணமாக குறித்த ஆறு மாத காலத்திற்குள் மேற்படி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாமற் போனது.  வடக்கு மீட்கப்பட்டு வரும் இவ்வேளையில் வடக்கில் உள்ளூராட்சிச் சபை தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் மக்களுக்கான அரசாங்கத்தின் சேவைகள் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிர்வாகங்களை செயற்படுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரிதும் உதவும் என்பதால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.