கனடாவிலுள்ள இலங்கையர்கள் றாகமையில் அமைந்துள்ள ‘றணவிரு செவன’ நிலையத்தில் பராமரிக்கப்படும் பார்வையற்ற இராணுவ வீரர்களின் பாவனைக்காக மடிக் கனணி ஒன்றையும் பேசும் கடிகாரங்களையும் அன்ளிப்புச் செய்துள்ளனர். இந்த அன்பளிப்புக்களை டொரன்டோவிலுள்ள இலங்கைக்கான கொன்சுயூலர் ஜெனரல் பந்துல ஜெயசேகர, மேஜர் துஸ்யந்த யாப்பாவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்துக் கையளித்தார்.
கனடாவின் டொரன்டோ நகரில் வசிக்கும் நாட்டுப்பற்று மிக்க இலங்கையர்களால் வழங்கப்பட்ட இந்த அன்பளிப்புக்கள் தாய்நாட்டுக்காக தமது உயிர்களையும் அவயங்களையும் இழந்த படைவீரர்களை கௌரவப்டுத்தும் நோக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.