சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் கண்டுபிடிப்பு

new_world.pngபூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் ஒன்றை எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக சிலி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.

“கிளியஸ் 581′ நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைநோக்கி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோரைத் தங்க வைக்க மேலும் 5 நலன்புரி முகாம்கள்

new_welfare.pngபாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நாடி வருவோரைத் தங்கை வைக்க மேலதிகமாக 5 நலன்புரி முகாம்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள தான்டிக்குளம் வித்தியாலயம், விபுலானந்த வித்தியாலயம்,  முள்ளியகுளம் வித்தியாலயம்,  வீரபுரம் வித்தியாலயம்,  ஆண்டிக்குளம் வித்தியாலயம் மற்றும் கட்டடப்பம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே இந்த நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்து.

இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வருகின்ற 15 நலன்புரி நிலையங்களுக்கு மேலதிகமாகவே இந்த 5 நலன்புரி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

பிரிட்டனுடன் இணைந்து இலங்கைக்கு நிவாரண உதவி வழங்க பிரான்ஸ் திட்டம்

பிரான்ஸ் பிரிட்டனுடன் இணைந்து இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கும் திட்டம் ஒன்றை  மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து கூட்டாக நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க முயற்சித்து வருவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டுடன் கலந்துரையாட இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இலங்கை அரசின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது: ஹில்லரி கிளிண்டன்

hillary-clinton.jpg இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது முயற்சிகளின் காரணமாக பொதுமக்களுக்கு சொல்லொணா துயரங்களை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து முழு உலகமும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனிடையே மோதல் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்த வழி செய்யும் நோக்கில் ஒரு குழுவை இந்த வாரத்தின் பிற்பகுதியில் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து செல்லவுள்ள பல்கட்சி குழுவினரை தற்போது வரவேற்க இலங்கை அரசு தயாராக இருக்கும் என தாம் நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.  பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதி நியமனத்தை இலங்கை அரசு முன்னர் நராகரித்திருந்தது.

புதுச்சேரியிலும் வேலை நிறுத்தம்

20-karunanithi1.jpg தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த காங்கிரஸ், திமுக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலையில் புதுச்சேரியிலும் வேலைநிறுத்தம் தொடங்கியது. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. அரசு  பஸ்வண்டிகள்  சொற்ப எண்ணிக்கையில்தான் ஓடுகின்றன.

140 தொகுதிகளில் 2வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

india-election.jpg140 லோக் சபா தொகுதிகளுக்கு 2வது கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

மொத்தம் 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காலை தொடங்கிய வாக்குப் பதிவு மிதமான முறையில் நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடியும். இருப்பினும் நக்சலைட் பாதித்த பீகார், ஜார்க்கண்ட் மாநில தொகுதிகளில் 3 மணிக்கே வாக்குப் பதிவு முடிந்து விடும்.

இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும், அவற்றின் தொகுதிகளும்..ஆந்திரா 20, அஸ்ஸாம் 11, பீகார் 13, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 1, கர்நாடகா 17, மத்தியப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 25, ஒரிசா 11, திரிபுரா 2, உ.பி. 17, ஜார்க்கண்ட் 9. இவை தவிர ஆந்திர மாநில சட்டசபையின் 140 சீட்கள் மற்றும் ஒரிசாவின் 77 சீட்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு இன்றுடன் தேர்தல் முடிந்து விடும்.

மொத்தம் 121 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராகுல் காந்தி, சரத் பவார், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் விலாஸ் பாஸ்வான், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இன்றைய தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

கிர்கிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை மூட தீர்மானம் – ஆகஸ்ட் 18 வரை அமெரிக்காவுக்கு காலக்கெடு

கிர்கிஸ்தானிலுள்ள மனாஸ் இராணுவ த்தளம் மூடப்பட்டு மக்கள் பாவனை க்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. அந் நாட்டின் பாதுகாப்புச் சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்ற திங்கட்கிழமை இந்த அறி வித்தலை அவர் வெளியிட்டார். 2001ம் ஆண்டு அட்சரனிஸ்தானுக்கு இராணுவ த்தை அனுப்பிய அமெரிக்கா மனாஸ் விமானத் தளத்தை இராணுவத் தளமாகப் பாவித்து வந்தது.

விமான வீரர்களை ஏற்றிச் செல்லல், உணவு உபகரணங்களைக் கொண்டு செல் வதற்கும் இந்த தளத்தை அமெரிக்கா பாவித்தது.

ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய கிர்கிஸ்தான் பாதுகாப்புச் சபையின் செயலாளர் கூறியதாவது,

2008ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க இராணுவம் மனாஸ் தளத்தி லிருந்து வாபஸ்பெறவுள்ளது. முற்றாக வாபஸ் பெறப்பட்ட பின்னர் இது மக்களின் பாவனைக்காகத் திறக்கப்படும். பயணிகள், சரக்கு விமான சேவைகளும் நடத்தப்படவுள்ளது.

அமெரிக்கா இங்குள்ள தனது இராணு வத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது.

இது நிகழ்ந்த பின்னர் இனிமேல் வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எந்த நாட்டிற்கும் இராணுவத் தேவைக்காக இத்தளம் பாவிக்கப்படமாட்டா எனத் தெரிவித்தார். எனினும் அமெரிக்கா ஆகஸ்ட் மாதம் வரை காலம் தருமாறு கோரியுள்ளது.

இதற்கு மேல் கால எல்லையை விஸ்தரிக்கும்படி கேட்டபோதும் அதற்கான அனுமதியை கிர்கிஸ்தான் மறுத்துள்ளது. ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஸகிஸ்தான் ஆகிய நாடுகளின் வற்புறுத்தலுக்கமைய கிர்கிஸ்தான் இந்த இராணுவத்தளத்தை மூட முன்வந்துள்ளதாகச் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

காலை உணவு உட்கொண்ட 28 மாணவிகள் திடீர் சுகயீனம் – வாழைச்சேனையில் சம்பவம்

vaalai-hospital.jpg வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்றுக்காலை உணவு உட்கொண்ட பாடசாலை மாணவிகளில் 28 மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இப்பாடசாலையிலுள்ள மூன்றாம் வகுப்பு ‘டி’ பிரிவில் கல்விகற்கும் மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ் வகுப்பிலுள்ள 35 மாணவிகளில் 28 மாணவிகள் திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டதால் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இப்பாடசாலையின் அதிபர் எம்.ரி.எம். பரீட் தெரிவித்தார்.

வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பாடசாலை மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் காலை உணவு உட்கொண்டதில் அவ்வுணவு பழுதடைந்து இருந்ததால் அதில் நஞ்சுத் தன்மை ஏற்பட்டதினாலேயே மாணவர்களுக்கு திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் மைதிலி யோகநாதன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனைப் பிரசேதம் அல்லோல கல்லோலமாகக் காணப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்குச் சென்று தமது பிள்ளைகளின் நிலைவரம் குறித்து கேட்டறிந்து கொண்டனர். இச்சம்பவத்தையடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ஜவாஹீர் சாலி உட்பட பிரமுகர்கள் பாடசாலைக்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொதுச் சுகாதார அலுவலகம் விசாரணைகளை நடத்தி வருகின்றது.இம்மாணவிகளுக்கு காலை உணவாக இடியப்பம், பருப்புக்கறி என்பன வழங்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பாடசாலை நேற்று கால வரையறையின்றி மூடப்பட்டது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். – விமல்

vimal-veera000.jpgபுலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட மனோ கணேசன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலிகளுக்கு ஆதரவாக தென் பகுதிகளில் இருந்து கொண்டு செயல்பட்டவர்களையும் அமைப்புக்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிடின் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி அர்த்தம் இல்லாது போய்விடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர்மாநாடு நேற்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்தேவி ரயில் தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளது

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் 20 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து இன்று (23.04.2009) தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். இந்த சேவையானது இன்று தொடக்கம் அமுலுக்கு வரும.; யாழ் ரயில் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மிகவேகமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். என அவர் கூறியுள்ளார்.