கிர்கிஸ்தானிலுள்ள மனாஸ் இராணுவ த்தளம் மூடப்பட்டு மக்கள் பாவனை க்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. அந் நாட்டின் பாதுகாப்புச் சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்ற திங்கட்கிழமை இந்த அறி வித்தலை அவர் வெளியிட்டார். 2001ம் ஆண்டு அட்சரனிஸ்தானுக்கு இராணுவ த்தை அனுப்பிய அமெரிக்கா மனாஸ் விமானத் தளத்தை இராணுவத் தளமாகப் பாவித்து வந்தது.
விமான வீரர்களை ஏற்றிச் செல்லல், உணவு உபகரணங்களைக் கொண்டு செல் வதற்கும் இந்த தளத்தை அமெரிக்கா பாவித்தது.
ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய கிர்கிஸ்தான் பாதுகாப்புச் சபையின் செயலாளர் கூறியதாவது,
2008ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க இராணுவம் மனாஸ் தளத்தி லிருந்து வாபஸ்பெறவுள்ளது. முற்றாக வாபஸ் பெறப்பட்ட பின்னர் இது மக்களின் பாவனைக்காகத் திறக்கப்படும். பயணிகள், சரக்கு விமான சேவைகளும் நடத்தப்படவுள்ளது.
அமெரிக்கா இங்குள்ள தனது இராணு வத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது.
இது நிகழ்ந்த பின்னர் இனிமேல் வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எந்த நாட்டிற்கும் இராணுவத் தேவைக்காக இத்தளம் பாவிக்கப்படமாட்டா எனத் தெரிவித்தார். எனினும் அமெரிக்கா ஆகஸ்ட் மாதம் வரை காலம் தருமாறு கோரியுள்ளது.
இதற்கு மேல் கால எல்லையை விஸ்தரிக்கும்படி கேட்டபோதும் அதற்கான அனுமதியை கிர்கிஸ்தான் மறுத்துள்ளது. ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஸகிஸ்தான் ஆகிய நாடுகளின் வற்புறுத்தலுக்கமைய கிர்கிஸ்தான் இந்த இராணுவத்தளத்தை மூட முன்வந்துள்ளதாகச் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.