சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஐ.பி.எல்: ஐதராபாத்-பெங்களூர் அணிகள் மோதல்

ipl-2009-01.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 18 ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த 2 வது அரை இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கும்பிளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி இடமும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 வது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதி கல்வியமைச்சர் மெளலவிமார் சந்திப்பு

பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தனுடன் மெனலவிமார்களுக்கான சந்திப்பு நாளை கல்முனையில் நடைபெறவுள்ளது.

உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் மெளலவி ஆசிரிய நியமனம் சம்பந்தமாக இது வரையில் எடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் பற்றி பிரதி கல்வி அமைச்சர், மெளலவி மற்றும் மெளலவியாக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மெளலவி ஆசிரிய விண்ணப்பதாரிகள் அனைவரும் கலந்துகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 0712946509 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

சமூக சேவையாளரும், கடற்றொழில் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எச். அமீரின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்யும் பிரதியமைச்சர் கல்முனை ஸாஹிரா, கல்முனை பாத்திமா கல்லூரிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

முதல் அரை இறுதியில் ஹைதராபாத் வெற்றி : இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டி

ipl-2009-01.jpgநேற்று நடந்த ஐபிஎல் முதல் அரை இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அபாரமாக ஆடி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2ஆவது அரை இறுதியில், சென்னை அணியும், பெங்களூரும் சந்திக்கின்றன. தென் ஆபிரிக்காவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன.

நேற்று முதலாவது அரை இறுதிப் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.00 மணிக்கு சென்னை-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ,

டெங்கு பரவுவதைத் தடுக்க 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சி

mosquito_preventionss.jpgஇலங்கையில் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சியொன்றை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பயிற்சிகள் முடிந்த பின்னர் இந்த வைத்தியர்களைப் பயன்படுத்தி மேலும் ஒரு செயற்குழுவுக்கு பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம் செய்தல், இரவில் இராசயனப் பரிசோதனை மேற்கொள்ளல், அவசரத் தேவைகளின்போது இரசாயன பரிசோதனை நிபுனர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளுதல், நோயின் தன்மைகளை அறிந்துகொள்ளுதல் போன்ற விடயங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 5201 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 70 பேர் மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளர்

கல்வி நிர்வாக அதிகாரி, அதிபர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பம்

teacher.jpgவடக்கு, கிழக்கு உட்பட 83 தேசிய பாடசாலைகளில் நிலவும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதன்படி கல்வி நிர்வாக சேவையில் தரம்1, தரம்11, தரம்111 உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர் சேவையில் தரம்1, தரம்11 அதிபர்களும் விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரிகள் தாம் விரும்பும் மூன்று பாடசாலைகளின் பெயர்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட முடியும்.

கண்டி மதீனா தேசிய பாடசாலை, புத்தளம் சாஹிரா மத்திய மகா வித்தியாலயம். மட்டக்களப்பு புனித மைக்கல் மத்திய மகா வித்தியாலயம், கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி மத்திய மகா வித்தியாலயம், அக்குறணை அல்-அஸார் மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், கல்முனை கார்மேல் பாதிமா தேசிய கல்லூரி, மட்டக்களப்பு வின்சன்ட் உயர் மகளிர் கல்லூரி, திருகோணமலை சென்ட் ஜோசப் கல்லூரி, ஹந்தெஸ்ஸ அல்மனார் மத்திய மகா வித்தியாலயம், மல்வானை அல் முபாரக் மத்திய மகா வித்தியாலயம், கம்பொளை சாஹிரா கல்லூரி, மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்தா மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயம், கல்ஹின்ன அல்மனார் மத்திய மகா வித்தியாலயம், பேருவளை அல்-ஹுமெய்சரா மத்திய மகா வித்தியாலயம், சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை, நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை, வவுனியா மடுகந்த மகா வித்தியாலயம் உள்ளிட்ட 83 பாடசாலைகளின் பெயர்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

மீளக் குடியமர்வு நடவடிக்கையின் போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட வேண்டும்

Hasan Ali M T_SLMC Gen Secஇலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.  இச் சந்திப்பு வியாழக்கிழமை இந்திய இல்லத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.எம்.பாயிஸ் மற்றும் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் பங்கு பற்றினர்.

இச் சந்திப்புத் தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி கருத்துத் தெரிவிக்கையில்; இதன்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் துரித கதியில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கு சமாந்திரமாக வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களையும் குடியேற்ற வேண்டுமென நாம் கோரினோம்.

யுத்தம் முடிந்துள்ள நிலையில் மக்கள் மன நிம்மதியுடன் வாழ அச்சமற்ற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் மற்றும் குடியமர்த்தல் மீள் கட்டமைப்புக்கு அரசியல் வேறுபாடு களையப்பட்டு சகலரும் சேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.  இத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள தலைமைத்துவங்களை இனம் காணப்பட வேண்டும். இதற்கு அவர்கள் சுதந்திரமான ஜனநாயக வழியில் இயற்கையான தெரிவுக்கு வழி வகுக்க வேண்டும். இதன் மூலமே ஒற்றுமையுடன் சகவாழ்வையும் ஏற்படுத்த முடியுமெனவும் தாம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இவற்றுக்கு இந்தியா பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரக உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஷாமும் கலந்து கொண்டனர்.

விரைவில் பொதுத் தேர்தல்?

parliament.jpgபாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்று ஜனாதிபதியுடன் நெருங்கிய வட்டாரங்களை மேற்கொள் காட்டி இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலில் வெற்றி கொண்டதையடுத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதற்கு இது உகந்த தருணம் என ஆளும் தரப்பில் கருதப்படுகிறது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2010 ஏப்ரலில் முடிவடைகிறது.

மூதூர் மக்கள் கட்டைபறிச்சானில் மீள்குடியேற்றம்

images-house.jpg திருகோணமலை மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயாந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள மக்கள் கட்டைபறிச்சான் தில்லங்கேணி பகுதியில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக கிழக்குமாகாண மீள் குடியேற்ற இணைப்பாளர் இ. செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசஅதிபர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 200 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்கென கட்டைபறிச்சான் பகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் பணியினை திருகோணமலை மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்

பாகிஸ்தானில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ சர்வதேச நிதியுதவி தேவை: பாகிஸ்தான் பிரதமர்

raza_gilani.jpgபாகிஸ் தானில், தாலிபான் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது போரின் காரணமாக இடம் பெயர்ந்துள்ள பெருமளவிலான பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமக்கு அவசரமாக 600 மில்லியன் டாலர்கள் அளவுக்கு தமக்கு நிதியுதவி தேவைப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வடமேற்கே தாலிபான் ஆயுததாரிகளை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கையின் காரணமாக 15 லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது மிகவும் அவசியமானது என்று நிதியுதவி வழங்குவோரின் சர்வதேச மாநாட்டிலேயே பாகிஸ்தானிய பிரதமர் கீலானி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் அமைதியும் வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 240 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான நிதி உதவி வழங்க கொடையாளிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் விமான விபத்து-97 பேர் பலி

indo.jpgஇந்தோ னேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.