சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஐ. அ. இராய்ச்சிய வெளி. அமைச்சர் நேற்று கொழும்பு வருகை அபிவிருத்திக்கு உதவ முன்வருகை

sheikh_abdullah_bin_zayed_al-uae.jpgஇலங் கையில், விவசாயம், நிர்மாணப்பணிகள், உல்லாசப் பயணத்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஐக்கிய அரபு இராய்ச்சியம் உதவ முன்வந்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (சனி) கொழும்புக்கு வருகை தந்த ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயிட் அல் நஃயான் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஐ.அ. இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் முடிவில் பிற்பகல் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இரு அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்தனர். இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.அ. இராய்ச்சியத்தின் அமைச்சர், இந்த ஆண்டு ஒப்டோபர் மாதம் அளவில் இரு நாடுகளுக்கிடையிலும் கூட்டு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே முதலீடு செய்வது சாத்தியமாகுமெனக் கூறினார்.

ஐ.அ.இராய்ச்சியத்தின் அமைச்சர் ஷேக் அப்துல்லா, அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, ராஜித சேனாரத்ன உட்பட அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் ரோஹித போகொல்லாகம;

சுமார் இரண்டரை இலட்சம் இலங்கையர்கள் ஐ. அ. இராய்ச்சியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1976ம் ஆண்டு அவரின் தந்தையார் வந்தார்.  அதன்பின்னர் அமைச்சர் ஷேக் அப்துல்லா வந்துள்ளார் என அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

ஏகான் கிளாசிக் டென்னிஸ்: சானியா மிர்சா தோல்வி

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் சனிக்கிழமை நடந்த ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுலோவேகியாவின் மக்டலினா ரிபரிகோவாவிடம் 6 3, 0 6, 3 6 என்ற செட் கணக்கில்  தோல்வியடைந்து வெளியேறினார்.

இருபதுக்கு இருபது கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவிகளை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

11bravo20-20.jpgஃபிளெட்சரின் விக்கெட்டை எடுத்து மகிழும் பந்துவீச்சாளர் பார்னெல் இங்கிலாந்தில் நடந்துவரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடந்த ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி இருபது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி முதலில் மட்டைப்பிடித்து இருபது ஓவர்களில் 183 ரன்களைக் குவித்திருந்தது. ஹெர்ஷெல் கிப்ஸ் அதிகபட்சமாக 55 ரன்களைக் குவித்திருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான காலிஸ் மற்றும் அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோரும் அணியின் எண்ணிக்கை உயருவதற்கு கணிசமான பங்களிப்பு செய்திருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க பந்துவீச்சாளர் ஜெரோம் டெய்லர் மூன்று விட்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இரண்டாவதாக மட்டை பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை.

ஆனால் முதல் விக்கெட்டுக்காக களமிறங்கியிருந்த அண்ட்ரூ சிம்மன்ஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். 50 பந்துகளில் 77 ரன்களை அவர் குவித்திருந்தார்.

தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததோடு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் குவிப்பு வேகத்தையும் கட்டுப்படுத்தினர்.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பார்னெல் தனக்கு வழங்கப்பட்ட நான்கு ஓவர்களில் பதிமூன்று ரன்களை மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இருபது ஓவர்களின் கடைசியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

குர்ஆன் மத்ரஸாவின் சான்றிதழ் வழங்கும் விழா

மள்வானை காந்தி வளவ்வ ஸஹீத் ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள அல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸாவின் முதலாவது சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று பி.ப. 4.00 மணிக்கு மத்ரஸா முற்றவெளியில் நடைபெறவுள்ளது. மத்ரஸாவின் உஸ்தாத் தக்கியாவின் பேஷ் இமாமுமான அல் ஹாபிழ் அல் ஆலிம் மொகமட் றில்வான் தலைமையில் இது நடைபெறும். நான்கு வருட பயிற்சியை பூர்த்தி செய்த எட்டு மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படவு ள்ளனர்.

கம்பஹா மாவட்ட உயர் நீதிமன்ற நீதவான் அல்ஹாஜ் எம். எம். ஏ. கபூர் பிரதம அதிதியாகவும், பேருவளை அல்முஸ்தபவிய்யா பேஷ் இமாம் மெளலவி அல்ஹாஜ் ஏ. சீ. எம். முபாரக் பிரதம பேச்சாளராகவும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம். எச். ஏ. ஸஹீத், சமாதான நீதவானும் ஆங்கில ஆசிரியருமான ஹனபி ஆகியோர் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்துகொள்வார்கள்.

முல்லை மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (முல்லைத்தீவு மாவட்டக் கிளை) இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் தலைவர் எம். எச். எம். இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் பல மாவட்டங்களிலும் வாழ்கின்றோம். அந்த குடும்ப விபரங்கள், அரச ஊழியர்கள், உலமாக்கள் போன்றோரிடமிருந்து விபரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் விபரங்கள் கட்டாயம் திரட்டப்பட வேண்டியுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் பெற்ற குடும்பத் தலைவரோ/ தலைவியோ, உலமாக்களோ, அரச ஊழியர்களோ அல்லது இதுவரையும் விண்ணப்பங்கள் கிடைக்காதவர்களோ 0718232462, 0714494040, 0312226710 இவர்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று 17ம் திகதிக்கு முன், ஹிஜ்ரா மாவத்தை, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அகமதிநிஜாத் பெரும் வெற்றி!!

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத் பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் “இந்தத் தேர்தல் மோசடியாக நடந்துள்ளது. நானே வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் அதைத் திரித்து அகமதிநிஜாத் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்” என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசவி.கூறியுள்ளார்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் ஜனாதிபதிக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் அகமதி நிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.

20-20 உலக கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டங்கள்

11bravo20-20.jpgதென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் (இ பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: மாலை 6 மணி

நியுசிலாந்து Vs பாகிஸ்தான் (எப் பிரிவு)
இடம்: லண்டன் ஓவல், இலங்கை நேரம்: இரவு 10 மணி

‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் – குரூப் ‘இ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

11bravo20-20.jpgஇங்கிலாந் தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி 20  வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

தொ‌டர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டுவென்டி 20 உலககோப்பை கிரிக்கெட்’சூப்பர் 8′ சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் சற்றுமுன் நடைபெற்று முடிந்த ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘எப்’ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது

டாஸ் வென்ற இலங்கை அணி 20 வது ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் – சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஹங்கேரியின் மெலிண்டா ஜின்க்கை 6 1, 7 6 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்