சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஆஸ்ட்ரேலியா மீண்டும் முதலிடம்

999cri.jpgடெஸ்ட் போட்டித் தரவரிசையில் முதலிடத்தை இழந்த ஆஸ்ட்ரேலியா தற்போது ஒரு நாள் கிரிக்கெட் ஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் இந்தியா 3-வது இடத்திற்கு கீழிறங்கியது. தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாட்டிங்காமில் நடைபெற்ற 6-வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்ட்ரேலியாவும் புள்ளிகள் அளவில் 127 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளதால் 7-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவை வெற்றி பெறாமல் செய்து விட்டால் ஆஸ்ட்ரேலியா மீண்டும் 3-வது இடத்திற்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

தரவரிசை விவரம்:

ஆஸ்ட்ரேலியா – 127 புள்ளிகள்
தென் ஆப்பிரிக்கா – 127 புள்ளிகள்
இந்தியா – 126 புள்ளிகள்
பாகிஸ்தான் – 109 புள்ளிகள்
இலங்கை – 108 புள்ளிகள்
நியூஸீலாந்து – 105 புள்ளிகள்
இங்கிலாந்து – 102 புள்ளிகள்
வெஸ்ட் இண்டீச் – 78 புள்ளிகள்
வங்கதேசம் – 55 புள்ளிகள்
ஜிம்பாப்வே – 26 புள்ளிகள்.

நாளை நோன்புப் பெருநாள்

ramadan-mosque.jpgஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்படாததால் புனித ரமழானை 30ஆக பூர்த்திசெய்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளை நாளை திங்கட்கிழமை கொண்டாடுவது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இணைந்து கூட்டாக அறிவித்துள்ளது.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று (19) மஃரிப் தொழுகையைத் தொட ர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலை வரும், மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபரு மான மெளலவி உஸ்தாத் ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலை வர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் கூட்டாக இணைந்து ஏகமனதாக உத்தியோகபூர்வமாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, கலீபதுஷ் ஷாஸ¤லி மெளலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), மெளலவி அரூஸ் உட்பட உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள் ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, முஸ் லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியாக்கள், தக்கி யாக்கள், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய ஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டி

190909images-sports-games.jpgஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளை இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வியமைச்சின் உடற்கல்வி விளையாட்டுப் பிரிவி மேற் கொண்டுள்ளது.

கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக 5 தினங்கள் நடத்தப்படவுள்ள இந்த போட்டி நிகழ்ச்சிகள் 27ம் திகதி நிறைவடைய உள்ளதாக உடற் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எல்.கே. ஜயவீர அறிவித்துள்ளார்.

மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.

போட்டியாளர்கள் அனைவரும் தமது வயது மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையையும், பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். மாகாண மட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியாளர்களை தவிர பட்டியலில் வேறு எவரையும் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

போட்டியாளர்களின் பெயர் மாற்றம் மற்றும் நிகழ்ச்சி மாற்றம் செய்ய வேண்டுமாயின் முன்கூட்டியே தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன எம்.எப். ஹூசேனின் ஓவியம்

19-mf-hussain.jpgபுகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

ஹூசேன் வியாழ்க்கிழமை 94வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் அவருடைய ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது.

முதலில் குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் நடந்த மையத்திற்கு ஹூசேன் வந்த பின்னர் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. இறுதியில் ரூ. 1.6 கோடிக்கு அவருடைய படைப்பு ஏலம் போனது.

இலங்கை அணியை யாரும் சாதாரணமாக எடைபோட்டு விடவேண்டாம்- சங்ககரா

120909sanath-jayasuriya.jpgசாம்பி யன்ஸ் டிராபி போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்ககரா கூறினார். தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் 22-ம் திகதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வியாழக்கிழமை ஜோஹன்னஸ்பர்க் வந்தடைந்தது. பின்னர் நிருபர்களுக்கு இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டி:

போட்டியை வெல்லக்கூடிய அணியாக இலங்கை அணியை வல்லுநர்கள் கணிக்கவில்லை. எனவே எங்கள் மீதான அழுத்தம் குறைந்துள்ளது. இதற்காக இலங்கை அணியை யாரும் சாதாரணமாக எடைபோட்டு விடவேண்டாம். நாங்கள் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். தென்னாப்பிரிக்கா, இந்தியா, நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இருப்பினும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் முழு நம்பிக்கையுடன் களம் காணவுள்ளனர். கோப்பையை வெல்ல முழு கவனம் செலுத்துவோம்.

வேகப்பந்து வீச்சுதான் எங்களது அணியின் பலம். அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மெண்டிஸ், முரளிதரன் எங்கள் அணியில் உள்ளனர் என்றார் அவர். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் இலங்கை மோதவுள்ளது.

சச்சின் மீதான விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை – மஞ்சுரேக்கர்

sep-14-2009-india.jpgசச்சின் டெண்டுல்கர் இலங்கையில் ஆடிய விதம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், அதற்காக கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் திணறிய போது வைத்த விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தன் ஃபார்மிற்காக திணறிய போது ஓய்வறையில் ஒரு யானை என்று வர்ணித்தார்.

அதாவது கடந்த ஆண்டு 51 ஒருநாள் போட்டி களில் சச்சின் டெண்டுல்கர் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது 24 இன் னிங்ஸ்களில் 62.10 என்ற சராசரி வைத்திருந்தார். ஆனால் அதே காலக் கட்டத்தில் இந்தியா இரண் டாவதாக துடுப்பெடுத்தாடிய போது அல்லது இலக்கைத் துரத்தும்போது 26 ஓட்டங்களையே சராசரியாக வைத்திருந்தார் என்பதே சஞ்சய் மஞ்சு ரேக்கர் கடந்த ஆண்டு வைத்த விமர்சனத்திற்கு காரணம்.

சச்சின் டெண்டுல்கரிடம் இது பற்றி ஒருவரும் வாயைத் திறக்காததற்கு காரணம் அவரது ஆளுமை அவ்வளவு பெரியது என்று கூறும் போதுதான் ஓய்வறையில் அவர் ஒரு யானை என்று கூறினார் மஞ்சுரேக்கர்.அந்த காலக் கட்டத்தில் டெண்டுல்கர் சுதந்திரமாக விளையாடவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் அவர் எச்சரிக்கையுடன் விளையாடினார். அழுத்தம் அவரது முகத்தில் தெரிந்தது. அவுட் ஆகிவிடுவோம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. ஆனால் இப்போது அது போய் விட்டது. அவர் தன் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்.

அவர் ஒரு மகத்தான வீரர். ஆனால் அவரும் ஒரு மனிதன்தானே. அவரை 14 வயது முதல் நான் நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவர் தோல்வி, அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் விளையாடினார் என்பதை என்னால் உணர முடிந்தது. இதனால் அப்போது கூறிய கருத்தை இப்போது மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றார். ஆனால், டெண்டுல்கரின் ஆட்டம் தற்போது புத்துணர்வு அளிப்பதாக உள்ளது என்று கூறிய சஞ்சய் மஞ்சுரேக்கர், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில். அவர் அடித்த பேக் ஃபுட் கவர் டிரைவ், பிரண்ட் ஃபுட் கவர் டிரைவ் ஆகியவற்றைப் பார்க்கும் போது தற்போது அவர் 5 ஆண்டுகளுக்குப் பின்னால் சென்றது போல் தெரிகிறது. இப்போது அவர் சுதந்திரமாக விளையாடுகிறார் என்றார்.

சம்பியன் கோப்பையை வென்று வூல்மருக்கு அர்ப்பணிப்போம் – பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான்

190909pakistan-cricket-team.jpgதென் ஆபிரிக்காவில் நடைபெறும் சம்பியன்ஸ் கோப்பையை வென்று மறைந்த பயிற்சியாளர் வூல்மருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பொப் வூல்மர் கடந்த 2007ஆம் ஆண்டு மே. தீவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் போது (50 ஓவர்) மர்மமான முறையில் இறந்தார். பிறகு அவரது மரணம் இயற்கையானது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மண்ணில் நடக்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வாகை சூடி கோப்பையை அவருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் அணியின் கப்டன் யூனுஸ்கான் சூளுரைத்து இருக்கிறார்.

8 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வருகிற 22ம் திகதி தென் ஆபிரிக்காவில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் 23ம் திகதி மே. தீவை எதிர்கொள்கிறது.

தென்ஆபிரிக்கா புறப்படுவதற்கு முன்பாக யூனுஸ்கான் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் வூல்மரின் சொந்த ஊருக்கு (தென் ஆபிரிக்கா) போகிறோம். சம்பியன்ஸ் கோப்பையை வென்று அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று நம்புகிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்த போது வூல்மர் எங்களுடன் இருந்தார். அந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் விளையாட முடியாமல் போனதால் வூல்மர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அந்த தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வி கண்டோம். இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

வூல்மர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய இழப்பு, இதனால் நாங்கள் இன்னும் வருத்தப்படுகிறோம். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மகன்களுடன் நான் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வருகிறேன்.  கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற போது அக் கோப்பையை வூல்மருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தோம்.  இந்த முறையும் கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பிப்போம்.  ஏனெனில் இது அவர் வாழ்ந்த நாடு என்றார்.

வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம். – வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்பு

190909images-sports-games.jpgவட மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், வடமாகாண பிரதம செயலர் இளங்கோ உட்பட பிரமுகர்கள் துரையப்பா விளையாட்டரங்கு நுழைவாயிலிருந்து  மேள தாளங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மாகாண கொடியை ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. முதலாவதாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிம்பிக் தீபத்தை வவுனியா, யாழ். மாணவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத் தக்கது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இவ்விளையாட்டுப் போட்டிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்துடனான 6 வது போட்டி: அவுஸ்திரேலிய அணி வெற்றி

999cri.jpgஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் அவுஸ்திரேலியா முதல் 5 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் 6வது ஒருநாள் போட்டியிலும் அபார ஆட்டம் காரணமாக அவுஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 7 போட்டி கொண்ட தொடரில் 6-0 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வவைத்து வருகிறது.

NatWest Series [Australia in England] – 6th ODI

England v Australia
Australia won by 111 runs
ODI no. 2891 | 2009 season
Played at Trent Bridge, Nottingham
17 September 2009 – day/night (50-over match)
       
 Australia innings (50 overs maximum)
 SR Watson  b Anderson  4 
 TD Paine†  c †Prior b Mascarenhas  111 
 RT Ponting*  c Sidebottom b Anderson  6 
 MEK Hussey  c Denly b Swann  65 
 CJ Ferguson  b Anderson  6 
 CL White  c Denly b Anderson  35 
 JR Hopes  c Strauss b Sidebottom  38
 B Lee  run out (Anderson)  0 
 NM Hauritz  not out  1  
 PM Siddle  not out  8  
 Extras (b 1, lb 7, w 14) 22     
      
Total (8 wickets; 50 overs) 296 (5.92 runs per over)
Did not bat NW Bracken 
Fall of wickets1-19 (Watson, 4.3 ov), 2-40 (Ponting, 8.6 ov), 3-203 (Hussey, 39.2 ov), 4-206 (Paine, 40.3 ov), 5-220 (Ferguson, 43.1 ov), 6-273 (White, 47.4 ov), 7-281 (Lee, 48.4 ov), 8-288 (Hopes, 49.3 ov) 
        
 Bowling
 JM Anderson 10 0 55 4
 AD Mascarenhas 10 0 49 1 
 TT Bresnan 9 0 60 0
 RS Bopara 2 0 11 0
 
England innings (target: 297 runs from 50 overs)

 AJ Strauss*  c †Paine b Lee  0 
 JL Denly  c Lee b Hopes  25 
 RS Bopara  run out (Ponting)  24 
 MJ Prior†  run out (Ponting)  6 
 OA Shah  c Watson b Hopes  23 
 EJG Morgan  c Hussey b Bracken  23
 AD Mascarenhas  b Hopes  11 
 TT Bresnan  not out  31
 GP Swann  b Bracken  12
 RJ Sidebottom  b Siddle  15 
 JM Anderson  b Lee  1
 
 Extras (lb 3, w 8, nb 3) 14     
      
Total (all out; 41 overs) 185 (4.51 runs per over) Fall of wickets1-0 (Strauss, 0.2 ov), 2-45 (Denly, 10.5 ov), 3-59 (Prior, 13.6 ov), 4-60 (Bopara, 14.5 ov), 5-100 (Morgan, 23.2 ov), 6-114 (Shah, 27.2 ov), 7-125 (Mascarenhas, 29.4 ov), 8-159 (Swann, 34.5 ov), 9-182 (Sidebottom, 39.2 ov), 10-185 (Anderson, 40.6 ov) 
        
 Bowling  
 B Lee 8 0 48 2
 NW Bracken 10 0 42 2
 PM Siddle 8 1 22 1 
 JR Hopes 9 0 32 3
 NM Hauritz 6 0 38 0
 
Match details
Toss Australia, who chose to bat
Series Australia led the 7-match series 6-0
Umpires Asad Rauf (Pakistan) and NJ Llong
TV umpire RA Kettleborough
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire NL Bainton
 

வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை – சச்சின் டெண்டுல்கர்

sachin-tendulkar.jpgகப்டன் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்று என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியில் “மேட்ச் வின்னர்கள் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது அணியில் அதிக அளவில் மேட்ச் வின்னர்கள் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதன் ரகசியம் இதுவே.

துடுப்பாட்டத்திலோ அல்லது பந்து வீச்சிலோ திறமையானவர்கள் அணியில் இருக்கும் போது அணிக்கு வெற்றி நிச்சயம்தான். இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. போட்டியின் போது குறைகள் அங்கொன்றும்,  இங்கொன்றுமாக இருந்தன. இருந்தபோதும் மொத்தத்தில் இந்தியா சிறப்பாக விளையாடியது.

கடந்த 20 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். இதில் தோனி தலைமையிலான இந்திய அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. நான் யாருடைய தலைமையையும் ஒப்பிட்டுப் பேசவில்லை. ஏற்கெனவே சிறந்த அணிகள் இருந்துள்ளன. அதில் ஒன்றுதான் இது என்று கூறுகிறேன்.

36 வயதில் நான் 44 வது சதம் அடித்துள்ளேன். இலங்கை மூத்த வீரர் சனத் ஜயசூரியா 40 வயதிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வயது என்பது ஆண்டுகளின் எண்ணிக்கைதான். வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் சிறப்பாக விளையாடி சாதனை படைக்க முடியும். அணிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்.  நீங்கள் அணிக்காக சாதனை படைத்தீர்களா என்பது முக்கியம்.

என்னுடைய இந்த 44வது சதம் மறக்க முடியாத சதங்களுள் ஒன்றாகிவிட்டது. இதை என்னுடைய சிறப்பான சதம் என்று சொல்வேன். இலங்கையில் இறுதி ஆட்டத்தை விளையாடுவது கடினமாக இருந்தது. அங்குள்ள சீதோஷ்ண நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதிகப்படியான வெப்பத்தால் விளையாடுவதற்கு சிரமப்பட்டோம். ஆனால் அதையெல்லாம் நாங்கள் உடைத்தெறிந்து விளையாடினோம்.

நீங்கள் மனதளவில் உறுதியாக இருக்கும்போது நீங்கள் நிச்சயம் ரன் குவிக்க முடியும். அதைத்தான் நான் இலங்கையுடனான ஆட்டத்தில் செய்தேன்.நான் இன்னும் எத்தனை நாட்கள் விளை யாடுவேன் என்ன லட்சியத்தை கொண்டுள்ளேன் என்பது முக்கியமல்ல. கிரிக்கெட்டை எந்த அளவுக்கு நேசித்து அதை விளையாடுகிறேன் என்பதுதான் முக்கியம். இலங்கையுடனான இறுதி ஆட்டத்தின் போது நாங்கள் 319 ஓட்டங்கள் குவித்தோம். ஆனால் இலங்கையின் துவக்கம் அதிரடியாக அமைந்தது.