சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கை அணி தோல்வி அடைந்து வெளியேறியது

1509fiba-news203a.jpgஇந்தி யாவில் நடைபெற்றுவரும் 23 ஆவது ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

சென்னையில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் இலங்கை மகளிர் கூடைப்பந்து அணி நேற்றைய தினம் பிலிப்பைன்ஸ் அணியை சந்தித்தது. இதில் தொடர்ந்தும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி 5570 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி சார்பாக பிரெமிலா பேருவலகே மற்றும் இனோகா ஜுவான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 12 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் இலங்கை அணி இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில் விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. “பி’ பிரி வில் விளையாடிய இலங்கை அணி இதற்கு முன்னர் மலேசியா (4581), கஸகஸ்தான் (4094), லிபியா (5496) மற்றும் உஸ்பெகிஸ்தான் (4889) அணிகளுடனான போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இதன்படி 12 நாடுகள் பங்கேற்றுள்ள இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி கடைசி இடத்தை பிடித்தது.

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் : Sri Lanka won by 55 runs (D/L method)

kumar-sangakkara.jpgகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி,  இலங்கையை எதிர்கொள்கிறது. சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் இன்று துவங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒரு நாள் தரப்பட்டியலில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளியது தென் ஆப்ரிக்கா. தற்போது ஒரு நாள் போட்டிகளில் சுப்பர் போர்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணி,  இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் உறுதியாக உள்ளது.

தென் ஆப்ரிக்காவின் துடுப்பாடட வரிசை எதிரணியை மிரட்டுகிறது. கேப்டன் ஸ்மித், காலிஸ்,  டுமினி,  ஆம்லா, பவுச்சர் ஓட்டங்களைக்  குவிக்க காத்திருக்கின்றனர். பயிற்சி போட்டியின் போது விலா எலும்பில் காயமடைந்த கிப்ஸ் இன்றைய போட்டியில் பங்கேற்காதது சற்று பின்னடைவு தான். பந்து வீச்சில்; ஸ்டைன்,  நிடினி, பார்னெல் அசத்த உள்ளனர். கடந்த 1998 ம் ஆண்டு நடந்த முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்கா கோப்பை வென்று அசத்தியது. அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்க வில்லை. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு சற்றும் குறைவில்லாத அணியாக களமிறங்குகிறது இலங்கை. தில்ஷன்,  ஜயசுரியாவின் அதிரடியும்,  முரளி, மெண்டிஸ் சுழலும் கைகொடுக்கும் பட்சத்தில்,  இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்காவை இலங்கை அணி எளிதாக வீழ்த்தலாம். அனுபவ வீரர்களான சங்ககரா,  ஜெயவர்தனா நம்பிக்கை அளிக்கின்றனர்.

வலுவான துடுப்பாட்ட வரிசை கொண்ட இலங்கை அணிக்கு, சமரவீரா, கண்டம்பி, கபுகெதரா ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஓடர் கூடுதல் பலம் அளிக்கிறது. மாலிங்க,  குலசேகராவின் வேகப்பந்து வீச்சு, தென் ஆப்ரிக்காவை மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இதுவரை 45 ஒரு நாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில்,  தென் ஆப்ரிக்கா 22,  இலங்கை 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை. சாம்பியன்ஸ் டிரொபி போட்டிகளில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மட்டும் மோதி உள்ளன. இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்காவே வென்று உள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய ஒரு நாள் போட்டிகளில், தென் ஆப்ரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் 317 (2002, செஞ்சரியன்). குறைந்த பட்ச ஸ்கோர் 154 (1993,  கொழும்பு). இலங்கை அணியின் அதிக பட்ச ஸ்கோர் 308 (2004, கொழும்பு). குறைந்த பட்ச ஸ்கோர் 98 (1993,  கொழும்பு).

ICC Champions Trophy – Group B
Sri Lanka 319/8 (50.0 ov)
South Africa won the toss and elected to field
22 September 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings
 TM Dilshan  c Morkel b Steyn  106
 ST Jayasuriya  lbw b Steyn  10 
 KC Sangakkara*†  c & b Duminy  54
 DPMD Jayawardene  c Duminy b Parnell  77
 TT Samaraweera  c van der Merwe b Parnell  37 
 AD Mathews  b Steyn  15
 SHT Kandamby  c Duminy b Parnell  6
 KMDN Kulasekara  run out (van der Merwe/Steyn)  1
 M Muralitharan  not out  0  
 Extras (lb 5, w 5, nb 3) 13     
      
 Total (8 wickets; 50 overs) 319 (6.38 runs per over)
To bat SL Malinga, BAW Mendis 
Fall of wickets1-16 (Jayasuriya, 2.2 ov), 2-174 (Sangakkara, 27.6 ov), 3-181 (Dilshan, 29.1 ov), 4-297 (Jayawardene, 46.3 ov), 5-297 (Samaraweera, 46.4 ov), 6-314 (Kandamby, 48.6 ov), 7-317 (Kulasekara, 49.4 ov), 8-319 (Mathews, 49.6 ov) 
        
 Bowling
 DW Steyn 9 2 47 3
 WD Parnell 10 0 79 3
 JH Kallis 7 0 43 0
 JA Morkel 4 0 39 0
 J Botha 9 0 53 0
 RE van der Merwe 10 0 42 0
 JP Duminy 1 0 11 1

  South Africa innings (target: 262 runs from 37.4 overs)
 
GC Smith*  b Mendis  58 
 HM Amla  b Mathews  2 
 JH Kallis  c Mathews b Mendis  41 
 AB de Villiers  c Jayawardene b Malinga  24 
 JP Duminy  b Mendis  0
 MV Boucher†  lbw b Mathews  26 
 JA Morkel  not out  29  
 J Botha  c Mathews b Malinga  21
 RE van der Merwe  not out  3
 Extras (w 2) 2     
      
 Total (7 wickets; 37.4 overs) 206 (5.46 runs per over)
Did not bat DW Steyn, WD Parnell 
Fall of wickets1-9 (Amla, 2.6 ov), 2-90 (Smith, 14.1 ov), 3-113 (Kallis, 20.3 ov), 4-113 (Duminy, 20.4 ov), 5-142 (de Villiers, 26.2 ov), 6-163 (Boucher, 31.2 ov), 7-198 (Botha, 35.6 ov) 
        
 Bowling
 SL Malinga 7.4 0 43 2
 KMDN Kulasekara 7 0 44 0
  AD Mathews 8 1 43 2
 M Muralitharan 8 0 46 0  
 BAW Mendis 7 0 30 3

  • Rain: South Africa – 206/7 in 37.4 overs (JA Morkel 29, RE van der Merwe 3)
  • Points Sri Lanka 2, South Africa 0
     
    Player of the match TM Dilshan (Sri Lanka)

    வட மாகாண மாவட்ட போட்டிகள் நிறைவு – யாழ் மாவட்டம் முதலாம் இடம்

    northa-pro-spo.jpgவட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வட மாகாண மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு விழா நேற்று இரவு நிறைவு பெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தப் போட்டிகளில் யாழ் மாவட்டம் வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.

    இறுதி நாள் நிகழ்வுகள் வட மாகாண கல்வி விளையாட்டு அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுனர்  ஜீ.எ.சந்தரஸ்ரீ ஆகியோர் கலநது கொணடு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். 151 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை யாழ் மாவட்டமும் 114 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வவுனியர் மாவட்டமும் 94 புள்ளகளைப் பெற்று மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

    அடுத்தாண்டு வட மாகாண விளையாட்டுப் பேர்டிகள் கிளிநோச்சி மாவட்டத்தில் நடைபெறும் என வட மாகாண விளையாட்டுத் தினைகக்ளத்தின் உதவிப் பணிப்பாளர் என் அண்ணாத்துரை அறிவித்துள்ளார் .

    செமென்யா விவகாரம் ஐ.நா.விடம் கொண்டு செல்லப்பட்டது

    caster_semenya_testosterona.jpgபெர்லினில் நடைபெற்ற உலக தடகள 800மீ. ஓட்டத்தில் முதலிடம் வந்து தங்கம் வென்ற தென் ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமென்யாவின் உடலமைப்பில் கோளாறு உள்ளது, அவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்று கூறி அவர் மீது பாலின பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏமாற்றமடைந்த தென் ஆப்பிரிக்க அரசு இந்த விவகாரத்தில் நீதி வழங்குமாறு ஐ. நா.விடம் முறையிட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க அமைச்சர் நொலுதாண்டொ மெயெந்தே சிபியா ஐ. நா.விடம் இது குறித்து புகார் செய்துள்ளார். 800மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்ற செமென்யாவை தென் ஆப்பிரிக்கா முழுதும் மக்களும், அரசியல் தலைவர்களும் போற்றிப் புகழ்ந்து, கொண்டாடி வருகின்றனர். நெல்சன் மன்டேலாவையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் செமென்யா மீது நடத்தப்பட்ட பாலின சோதனை பெண்ணினத்துக்கு எதிரானது என்றும்,  நிறவெறித்தனமானது என்றும் சாடியுள்ளது. சோதனை முடிவுகளை ஐ.ஏ.ஏ.எஃப். இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் முடிவுகள் செமென்யாவிற்கு சாதகமாக வராவிட்டாலும் அவரது சாதனையை திரும்பப் பெறப்போவதில்லை என்று ஐ.ஏ.ஏ.எஃப். தெரிவித்துள்ளது. ஆனால் அவர் வேறு எந்த ஓட்டப்பந்தயங்களிலும் கலந்து கொள்ள முடியாது.

    இதற்கிடையே அவருக்கு ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டுமே இருப்பதாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதும் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குரியதாக்கியது. இந்த நிலையில்தான் தென் ஆப்பிரிக்க அரசு ஐ. நா.விடம் தீர்வு கோரியுள்ளது.

    முஸ்லிம் பாடசாலைகள் நாளையே ஆரம்பம்

    school-girls.jpgநாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை 23 ஆம் திகதியே ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

    ரமழான் நோன்பையிட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று 22 ம் திகதி ஆரம்பமாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆயினும், ரம்ஸான் பெருநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதால் முஸ்லிம் பாடசாலைகளை நாளை ஆரம்பிப்பதென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் ஆலோசனைக்கமைய தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.

    சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா

    21-somdev.jpgடேவிஸ் கோப்பைடென்னிஸ்தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் அபாரமான ஆட்டத்தைக் காட்டி இந்தியாவுக்கு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் உலக பிரிவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ்  தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று நான்காவது ஆட்டமான மாற்று ஒற்றையர் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தென் ஆப்ரிக்காவின் ரிக் டி வோஸ்ட்டை எதிர்கொண்டார்.

    இதில் முதல் இரண்டு செட்களையும் 3-6, 6-7 என பறிகொடுத்த சோம்தேவ் விடாமல் போராடி அடுத்த மூன்று செட்களையும் 7-6, 6-2, 6-4 என வென்றார். இறுதியில் 3-6, 6-7, 7-6, 6-2, 6-4 என்ற செட்களில் வென்றார். கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் இந்தப் போட்டி நடந்தது. தோல்வியுறும் நிலைக்குப் போய்,  வீறு கொண்டு அடுத்தடுத்து 3 செட்களைப் பறித்த சோம்தேவின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

    மற்றொரு போட்டியில் யூகி பாம்பிரி 3-6, 6-3, 6-3 என தென் ஆப்ரிக்காவின் இயான் வான் டெர் மெர்வியை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 4-1 என்ற போட்டி கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதையடுத்து சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா  நுழைந்துள்ளது.

    புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம்

    ramadan-mosque.jpgஐக்கியம், சமாதானம், சகிப்புத்தன்மை நட்புறவு என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் நாட்டின் சமாதான முன்னேற்றங்களுக்கான பங்களிப்பையும் நாம் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    அதில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது:- உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் இன்று பேருவகையுடன் கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    இலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய மாதங்களில் புனிதமிகு மாதமான ரமழான் மாதத்தின் மிக முக்கியமான மார்க்கக் கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாட்டங்களில் உலகெங்கிலும் வாழும் தமது ஈமானிய சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றார்கள்.  புனித அல்குர்ஆனினதும் இறைத் தூதர் முஹம் மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப ஒரு உயர்ந்த மார்க்கக் கடமையை நிறைவேற்றி முடித்ததன் பின்னர் மகிழ்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் உள்ளது.

    இலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் சிங்களவர்கள், தமிழர்கள், பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்த நாட்டை தாய்நாடகக் கொண்டிருக்கும் ஏனைய எல்லா சமூகத்தவர் களுடனும் நட்புறவுடன் வாழ்ந்து வந்துள்ளதோடு, நாட்டின் முன்னேற்றதிற்கும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

    கடந்த வருட ஈதுல் பித்ர் கொண்டாட்டத்தின்போது நாம் கிழக்கு மாகாணத்தையும் அங்கு வாழும் பெருந் தொகையான முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்திருந்தோம். இன்று முழு நாடுமே பயங்கரவாத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு வட மாகாணத்தில் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீளச்சென்று சுதந்திரமாக தமது சமய பாரம்பரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    மினி உலககோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று ஆரம்பம்

    110909-india.jpgமினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 6 வது சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடப்பதாக இருந்தது.

    ஆனால் அங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டு அது இப்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ந் திகதி வரை நடைபெறுகிறது.

    முந்தைய போட்டிகளில் குட்டி அணிகளும் பங்கேற்றன.  ஆனால் தற்போது முதல் முறையாக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்குவதால் ஒவ்வொரு ஆட்டங்களும் விருந்து படைப்பதாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ் தான், நடப்பு சம்பியன் அஸ்திரேலியா, மேற் கிந்திய ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகும்.

    தற்போதைய நிலவரப் படி ரேங்கில் முதல் 3 இடங்களை வகிக்கும் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகளுக்கே கோப்பையை வெல்வதில் முன்னணியில் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் யாருமே எதிர்பார்க்காத பாகிஸ்தான், இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தது போல் மீண்டும் அவை இங்கு அதிசயம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    சமீபத்திய தொடர்களில் அடிப்பட்ட நியூசிலாந்து இதுவரை எந்த ஐ.சி.சி. கோப்பையும் வெல்லாத இங்கிலாந்து ஆகிய அணி கள் ஏதேனும் மாயா ஜாலம் காட்டுமா என்பதை பார்க்கலாம். ஒப்பந்த பிரச்சினை தீர்வு காணப்படாததால் கெய்ல், சர் வான், சந்தர்பால், பிரா வோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாம் 2ம் தர அணியாக களம் இறங்கி உள்ள மேற்கிந்திய அணி யின் நிலைமை மட்டுமே இங்கு பரிதாபமாக உள்ளது. ஆனால் இந்த அணி ஏதேனும் வெற்றி பெற்றாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

    இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமாக உள்ளது.  இதே போல் இந்தியா- அவுஸ்திரேலியா மோதலிலும் அனல் பறக்கும்.

    ஒரு நாள் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பியன்ஸ் போட்டி ஐ.சி.சி. மிகவும் முக்கியமான போட்டியாக கருதுகிறது. இந்தப் போட்டியின் வெற்றி, அதற்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவையே ஒரு நாள் போட்டியின் எதிர்கால தலைவிதியாக அமையும்.

    புரிந்துணர்வு, நட்பு, சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்ப்போம்!- பிரதமர் ரட்னசிறி பெருநாள் வாழ்த்து

    210909ramzan.jpgசமூகங் களுக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, நட்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு இந்தப் புனித மிகு நோன்புப் பெருநாளில் அனைவரும் கைகோர்ப்போமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;

    இலங்கையில் போன்றே உலகவாழ் முஸ்லிம்கள் ஒருமாத காலம் பகல் நேரங்களில் உண்ணாது குடிக்காது உபவாசம் இருந்ததன் பின்னர் கொண்டாடுகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

     இஸ்லாம் என்பது சமாதானத்தைப் பிரதிபலிக்கின்றது. குரோதம், துவேசம் என்பவற்றை அகற்றி ஒரு பொதுவான நோக்கத்தின்பால் ஒன்றுபடுவது முக்கியமானதென இஸ்லாத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த வழியில் சென்று ஒருமாத காலமாக பகல் வேளையில் பசித்திருந்து அனைத்து இனங்களிற்கும் கருணை, இரக்கம் என்பன காட்டி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் இந்த காலத்தை செலவிடுகின்றமை நாம் காணக்கூடிய முக்கிய அம்சமாகும்.

    முப்பது ஆண்டுகளின் பின்னர் நாட்டு மக்கள் அச்சம், பயமின்றி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு இடத்திலும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளமையால் இம்முறை நோன்புப் பெருநாளை நாடு முழுவதிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம் மக்கள் மனம் விரும்பியவாறு கொண்டாடுவதற்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

    ‘ஈதுல் பித்ர்’ (நோன்புப் பெருநாள்) தாற்பரியங்களின் பிரகாரம் சமூகத்திலே எந்தவொரு பிரிவினரையும் தனிமைப்படுத்தாது சகல சமூகங்களுக்கிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, நடப்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்வோமென புனிதமிகு நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    கடைசி ஆட்டத்தில் மானம்காத்த இங்கிலாந்து

    200909eng-cr-team.bmpஇங்கி லாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான  7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில்  அவுஸ்திரேலியா முதல் 6 போட்டிகளிலும்  வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்று நடைபெற்ற 7 வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தனது மானத்தை ஓரளவு காத்துக்கொண்டது.

    இந்த தோல்வியின் மூலம் அவுஸ்திரேலியா 7 போட்டி கொண்ட தொடரில் 6-1 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வவைத்து வந்தமை தெரிந்ததே.

    Australia 176 (45.5 ov)
    England 177/6 (40.0 ov)
    England won by 4 wickets (with 60 balls remaining)
    NatWest Series [Australia in England] – 7th ODI

    Played at Riverside Ground, Chester-le-Street
    20 September 2009 (50-over match)
           
     Australia innings (50 overs maximum)
     SR Watson  c Swann b Anderson  0
     TD Paine†  c †Prior b Onions  4 
     RT Ponting*  c Collingwood b Swann  53 
     MJ Clarke  run out (Morgan/Collingwood)  38 
     MEK Hussey  c Denly b Bresnan  49 
     CL White  b Swann  1
     JR Hopes  c & b Swann  11 
     MG Johnson  c Anderson b Swann  10 
     NM Hauritz  c & b Shah  3
     B Lee  b Swann  0 
     BW Hilfenhaus  not out  2
     Extras (lb 1, w 4) 5     
          
    Total (all out; 45.5 overs) 176 (3.84 runs per over)

    Fall of wickets1-0 (Watson, 0.4 ov), 2-17 (Paine, 3.4 ov), 3-96 (Ponting, 24.5 ov), 4-110 (Clarke, 27.6 ov), 5-112 (White, 28.5 ov), 6-138 (Hopes, 36.3 ov), 7-158 (Johnson, 40.4 ov), 8-158 (Lee, 40.6 ov), 9-163 (Hauritz, 43.1 ov), 10-176 (Hussey, 45.5 ov) 
            
     Bowling
     JM Anderson 7 0 36 1
     G Onions 9 1 28 1
     TT Bresnan 6.5 0 25 1
     PD Collingwood 7 0 37 0
     GP Swann 10 1 28 5
     RS Bopara 1 0 7 0 
     OA Shah 5 1 14 1

    England innings (target: 177 runs from 50 overs)
     AJ Strauss*  c Hilfenhaus b Hauritz  47 
     JL Denly  run out (†Paine/Ponting)  53 
     RS Bopara  lbw b Watson  13 
     OA Shah  c †Paine b Hopes  7
     PD Collingwood  not out  13
     EJG Morgan  c †Paine b Lee  2
     MJ Prior†  c Ponting b Hilfenhaus  11
     TT Bresnan  not out  10  
     Extras (b 4, lb 2, w 6, nb 9) 21     
          
    Total (6 wickets; 40 overs) 177 (4.42 runs per over)
    Did not bat GP Swann, JM Anderson, G Onions 
    Fall of wickets1-106 (Strauss, 20.4 ov), 2-129 (Denly, 27.1 ov), 3-133 (Bopara, 28.6 ov), 4-137 (Shah, 29.2 ov), 5-141 (Morgan, 31.4 ov), 6-162 (Prior, 36.2 ov) 
            
     Bowling O M R W Econ  
     B Lee 10 3 33 1 
     BW Hilfenhaus 6 1 38 1
     MG Johnson 5 0 29 0  
     NM Hauritz 8 0 30 1
     JR Hopes 6 1 29 1
     SR Watson 5 0 12 1 

    Match details
    Toss England, who chose to field
    Series Australia won the 7-match series 6-1