::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

தென் மாகாண தேர்தல்; தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி 28 வரை நீடிப்பு

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது.

தென் மாகாண சபைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க ஊழியர்கள் பொலிஸார் மற்றும் முப்படையினர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக

விண்ணப்பிப்பதற்கு 17 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மேலும் பலருக்கு விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்குவதற்காக இந்தக் காலக்கெடுவை நீடித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் சலிப்பு – வாக்களிப்பு வீத வீழ்ச்சிக்கு ஐ.தே.க. கூறும் காரணம்

அரசு தொடர்ந்து பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்திவருவதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலிப்புத் தன்மையினால் வாக்களிக்கும் வீதம் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.தே.க., இதுவே பாரிய நிதி விரயத்துக்கும் காரணமாகியுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்;

பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தே நாம் தேர்தல்களை எதிர்கொண்டோம். அரசாங்கம் தனது அரச பலம் மற்றும் வளங்களை பாவித்து பிரசாரங்களை முன்னெடுத்தது. இது குறித்து நாம் தெரியப்படுத்தி வந்த நிலையில், தேர்தல் ஆணையாளரிடமும் முறையிட்டோம். இந்நிலையில், எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தேர்தல்களை நாம் நோக்குகின்ற போது வாக்களிப்பதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 80 வீதவாக்களிப்பு இடம்பெறாதுள்ள அதேசமயம், வவுனியாவில் 50 வீதமும் ஊவாவில் 30 முதல் 35 வீதமானவர்களும் வாக்களிக்க வில்லை.

இதற்கு காரணம், அரசாங்கம் தனது லாபத்துக்காக பகுதி பகுதியாக பிரித்து தேர்தலை நடத்தும் அதேவேளை, அரசவளங்கம் மற்றும் பலத்தினை பயன்படுத்துவதேயாகும். இதனாலேயே இத்தகைய தேர்தல் பெறுபேறுகளை அரசு பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முதல் பிரித்து பிரித்து நடத்தப்பட்ட தேர்தல்களில் வாக்களிக்காதோர் தொகை அதிகரித்திருப்பதை காணலாம். கடந்த ஒன்றரை வருடமாக அமைச்சர்கள், ஆலோசகர்கள் வேறு எந்த வேலையும் செய்யாது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அதேசமயம், அரச வளங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒன்றாக நடத்தாது பிரித்து பிரித்து நடத்துவதாலும் பெருமளவு மக்கள் பணம் அநியாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தென்மாகாணம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த அதிகாரத்தை பலப்படுத்தும் விளையாட்டை நிறுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இனியாவது முன்வரவேண்டும். குறிப்பாக மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க முன்வர வேண்டும். மாகாண சபை ஆரம்பம் முதல் அக்காலப்பகுதியில் உள்ள அரசாங்கம் வெற்றி பெற்றதை நாம் காணலாம். 89 முதல் 94 வரையும் 94 முதல் 2002 வரையும் ஆட்சியில் உள்ள அரசாங்கம் மாகாண சபைகளை கைப்பற்றியது. இந்நிலையில், இம்முறை முடிவுகள் வழமையானதே. ஊவா மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவராக உபாலி சமரவீரவை நியமிக்க கட்சிதீர்மானித்துள்ளது

தென் மாகாணசபைத் தேர்தல் வேட்பு மனு 21 முதல் 28 வரை தாக்கல்

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்ட செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

2008 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பில் உள்ள வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காலி மாவட்டத்தில்

7 இலட்சத்து 68 ஆயிரத்து 801 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 856 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 இலட்சத்து 21 ஆயிரத்து 156 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை, தென் மாகாண சபையில் போட்டியிடும் அரச தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் தமது பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

“எப்படியும் வெற்றிபெறுவதை’ அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது – மாவை சேனாதிராஜா

election000.jpgயாழ்ப் பாணத்தில் 80 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதும் ஆனால், “எப்படியும் வெற்றி பெறும்’ என்ற அறிவிப்பை அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ள நிலையில், வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்குகளே பதியப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து நாலாயிரம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. இராணுவத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளே இருந்துள்ளன. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. 81.74 வீத மக்கள் இத்தேர்தலில் பங்குபற்றவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

கரையோரப் பகுதி மக்கள் இராணுவத்தினால் அன்றைய தினம் காலை கடலுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு வாக்களிக்க அனுப்பப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தேர்தலில் 18.26 வீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதியப்பட்டமைக்கு மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம், பீதி மட்டுமல்ல மனவிரக்தியும் அதனால் ஏற்பட்ட தேர்தலில் ஈடுபாடற்ற தன்மையும் ஒரு காரணமாகும்.

அரசின் அதிகார பலம், இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னமும் நடமாட்டமும், அமைச்சர்கள் தொடர்ச்சியாகத் தேர்தல் காலங்களில் யாழ்ப்பாணம் வந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகம் முதலான பல துறைசார் அரச ஊழியர், மாணவர்களை நிர்ப்பந்தமாக அழைத்து நடத்திய கூட்டங்களில் சலுகைகளை அறிவித்து வந்தமை, தேர்தலில் அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுமென அறிவுறுத்தப்பட்ட அச்சம் மற்றும் அரசாங்கத்தில் முழு வளங்களும் இத்தேர்தலில் பாவிக்கப்பட்டுள்ளமை, அதற்கும் மேலாகப் புத்தளம் போன்ற இடங்களில் இடம்பெயர்ந்த மக்களில் 47 வீதமான வாக்குகள் பதியப்பட்டமையும், அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,600 வாக்குகளைப் பெறுவதற்கு காரணிகளாகும். அத்துடன் தேர்தலில் அரசு வெற்றி பெறாவிட்டால் தமக்கு ஆபத்து ஏற்படுமென மக்கள் அச்சமுற வைக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்கம் திட்டமிட்டவாறு, எதிர்பார்த்தவாறு தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படை. எப்படியும் அரசு வெற்றிபெறும் என்ற அறிவிப்பை அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், உண்மையில் அரசு எதிர்பார்த்த அளவுக்குத் தமிழ் மக்களிடம் வெற்றி பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்களிப்பையும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்று ஆளுங்கட்சிக் கூட்டமைப்பு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டமையும் தமிழ் மக்களிடம் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதை நிரூபிப்பதாயுள்ளது.

எவ்வாறெனினும் வவுனியா நகர சபைத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்களும் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தமைக்காக அங்குள்ள மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதியப்பட்டுள்ளன. பல இடங்களில் எமது மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாது வாக்களிக்காமல் இருந்தமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இத்தனை மனிதப் பேரவலம், அடக்கு முறைச் சூழல், அச்சம் நிலவிய போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யாழ் மாநகரசபைக்கு ஐந்து முஸ்லிம்கள்

election000.jpgயாழ் மாநகரசபைக்கு ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.  சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இதன்படி முஸ்லிம்கள் ஐவர் யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கு அ. இ. மு.கா. சார்பாக போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன், வவுனியா நகர சபைக்கும் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இதன்படி,  வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்கு 2270 ஆகும்.

யாழ். மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள முஹம்மது மீரா சாஹிப் முஹம்மது ரமீஸ் 1338 விருப்பு வாக்குகளையும்,  முஹம்மது மீராசாஹிப் முஸ்தபா 1029 விருப்பு வாக்குகளையும், பதூர்தீன் அஸ்கர் ரூமி 979 விருப்பு வாக்குகளையும்,  அஜ்மயின் அஸ்பர் 960 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை வவுனியா நகர சபைக்கு மு. கா. உறுப்பினர் ஒருவரும் தெரிவாகியுள்ளார். 587 வாக்குகளை மாத்திரமே பெற்ற மு. கா வுக்கு இந்த ஒரு  ஆசனம் கிடைத்துள்ளது.

யாழ். மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். யாழ். மாநகர சபைக்கு வாக்களிக்க தகுதி பெற்றிருந்த சுமார் 6000 இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களில் 70 வீதமானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர

ஊவா மாகாணத்தில் ஆளும் கட்சிக்கு வரலாற்று வெற்றி : ஆளும் கட்சிக்கு 25ஆசனங்கள் எதிர்கட்சிகளுக்கு 09ஆசனங்கள் மட்டுமே. – அமீன்

upfa-1.jpgஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 814 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 23 கட்சிகளிலும், ஏழு சுயேச்சைக் குழுக்களிலுமாக 600 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இதில் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

பதுளை மாவட்டத்தில் 5,75,814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இந்த மாவட்டத்தில் 14 கட்சிகளும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாக 432 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுள் 21 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர்.

மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். நான்கு கட்சிகளிலும்இ இரண்டு சுயே ச்சைக் குழுக்களிலுமாக 168 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஊவா மாகண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 418,906 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பில் 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 129,144 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகளை பெற்றுள்ளதுடன்,மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது

விரிவான தேர்தல் முடிவு வருமாறு:

Badulla District

Mahiyangana Polling Division

United People’s Freedom Alliance 39909 73.68%
United National Party 12013 22.28%
People’s Liberation Front 1943 3.59%
Sri Lanka Muslim Congress 86 0.16%

Valid 54,168 95.39%
Rejected 2,615 4.61%
Polled 56,783 0.00%
Electors 85,562

Wiyaluwa Polling Division

United People’s Freedom Alliance 20433 70.30%
United National Party 7437 25.59%
People’s Liberation Front 564 1.94%
Up-Country Peoples Front 398 1.37%

Valid 29,065 92.44%
Rejected 2,378 7.56%
Polled 31,443 0.00%
Electors 48,231

Passara Polling Division

United People’s Freedom Alliance 23959 65.06%
United National Party 9736 26.44%
Up-Country Peoples Front 1855 5.04%
People’s Liberation Front 540 1.47%
Sri Lanka Muslim Congress 458 1.24%

Valid 36,825 92.11%
Rejected 3,156 7.89%
Polled 39,981 0.00%
Electors 60,002

Badulla Polling Division

United People’s Freedom Alliance 21386 60.89%
United National Party 12084 34.40%
People’s Liberation Front 628 1.79%
Up-Country Peoples Front 570 1.62%
Sri Lanka Muslim Congress 279 0.79%

Valid 35,125 95.88%
Rejected 1,508 4.12%
Polled 36,633 0.00%
Electors 51,468

Haliela Polling Division

United People’s Freedom Alliance 27088 67.32%
United National Party 10653 26.47%
Up-Country Peoples Front 1206 3.00%
People’s Liberation Front 728 1.81%
Democratic Unity Alliance 204 0.51%
Sri Lanka Muslim Congress 178 0.44%

Valid 40,240 93.05%
Rejected 3,006 6.95%
Polled 43,246 0.00%
Electors 63,124

Uva-Paranagama Polling Division

United People’s Freedom Alliance 24569 63.37%
United National Party 12036 31.50%
People’s Liberation Front 1525 3.93%
Up-Country Peoples Front 346 0.89%
Sri Lanka Muslim Congress 121 0.31%

Valid 38,768 94.31%
Rejected 2,337 5.69%
Polled 41,105 0.00%
Electors 59,472

Welimada Polling Division

United People’s Freedom Alliance 29431 65.93%
United National Party 11862 26.57%
Sri Lanka Muslim Congress 1840 4.12%
People’s Liberation Front 1114 2.50%
Up-Country Peoples Front 204 0.46%

Valid 44,643 94.55%
Rejected 2,572 5.45%
Polled 47,215 0.00%
Electors 68,937

Bandarawela Polling Division

United People’s Freedom Alliance 33702 67.21%
United National Party 12821 25.57%
Up-Country Peoples Front 1759 3.51%
People’s Liberation Front 819 1.63%
Sri Lanka Muslim Congress 766 1.53%

Valid 50,147 93.81%
Rejected 3,311 6.19%
Polled 53,458 0.00%
Electors 77,312

Haputale Polling Division

United People’s Freedom Alliance 26471 69.42%
United National Party 7765 20.36%
Up-Country Peoples Front 2760 7.24%
People’s Liberation Front 603 1.58%
Sri Lanka Muslim Congress 351 0.92%

Valid 38,130 92.11%
Rejected 3,268 7.89%
Polled 41,398 0.00%
Electors 60,706

Postal Votes – Badulla District

United People’s Freedom Alliance 12121 80.54%
United National Party 2228 14.80%
People’s Liberation Front 543 3.61%
Up-Country Peoples Front 107 0.71%
Sri Lanka Muslim Congress 29 0.19%

Valid 15,049 98.02%
Rejected 304 1.98%
Polled 15,353
Electors 16,043

Moneragala District

Bibila Polling Division

United People’s Freedom Alliance 36499 81.37%
United National Party 6503 14.50%
People’s Liberation Front 1699 3.79%

44,857 94.65%
Rejected 2,533 5.35%
Polled 47,390 0.00%
Electors 74,692

Moneragala Polling Division

United People’s Freedom Alliance 49420 82.35%
United National Party 9187 15.31%
People’s Liberation Front 1208 2.01%

Valid 60,015 94.84%
Rejected 3,268 5.16%
Polled 63,283 0.00%
Electors 96,386

Wellawaya Polling Division

United People’s Freedom Alliance 66842 79.98%
United National Party 14026 16.78%
People’s Liberation Front 2491 2.98%

Valid 83,570 95.52%
Rejected 3,922 4.48%
Polled 87,492 0.00%
Electors 129,564

Postal Votes – Moneragala District

United People’s Freedom Alliance 7076 87.28%
United National Party 793 9.78%
People’s Liberation Front 234 2.89%

Valid 8,107 97.05%
Rejected 246 2.95%
Polled 8,353
Electors 8,899

Final District Result – Moneragala District

United People’s Freedom Alliance 159837 81.32% 9
United National Party 30509 15.52% 2
People’s Liberation Front 5632 2.87% 0
Jathika Sangwardena Peramuna 226 0.11% 0
United Socialist Party 153 0.08% 0
Eksath Lanka Maha Sabha 62 0.03% 0
Independent Group 3 55 0.03% 0
Independent Group 1 22 0.01% 0
Patriotic National Front 20 0.01% 0
Independent Group 2 13 0.01% 0
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya 10 0.01% 0
Sri Lanka Progressive Front 10 0.01% 0

Valid 196,549 95.17%
Rejected 9,969 4.83%
Polled 206,518 0.00%
Electors 300,642

Elections to Provincial Councils in Uva Province Council Results
Badulla & Moneragala

Party Name Votes % Seats
United People’s Freedom Alliance 418906 72.39%25*
United National Party 129144 22.32%7
People’s Liberation Front 14639 2.53% 1
Up-Country Peoples Front 9227 1.59% 1
Sri Lanka Muslim Congress 4150 0.72% 0
United National Alliance 503 0.09% 0
Democratic Unity Alliance 481 0.08% 0
Jathika Sangwardena Peramuna 473 0.08% 0
United Socialist Party 429 0.07% 0
Independent Group 4 – Badulla 158 0.03% 0
Eksath Lanka Maha Sabha 118 0.02% 0
Independent Group 3 – Badulla 89 0.02% 0
Jana Setha Peramuna 67 0.01% 0
Patriotic National Front 64 0.01% 0
Independent Group 3 – Moneragala 55 0.01% 0
Independent Group 2 – Badulla 51 0.01% 0
Sri Lanka Progressive Front 41 0.01% 0
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya 40 0.01% 0
Independent Group 1 – Badulla 39 0.00% 0
Independent Group 1 – Moneragala 22 0.00% 0
Independent Group 2 – Moneragala 13 0.00% 0

Valid 578,709 94.39%
Rejected 34,424 5.61%
Polled 613,133 0.00%
Electors 875,456

 

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியும் வவுனியாவில் ரிஎன்எயும் வெற்றி

election000.jpg யாழ்ப்பாணத்தில் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியாகவும் தேர்தல் நடைபெற்ற போதிலும் வாக்களித்தவர்களின் பங்களிப்பு குறைவானதாகவே காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியினர் முழுமையான வெற்றி பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படியும் அமைதியாகவும் நடைபெற்றதாகவும் வவுனியாவில் ரிஎன்ஏ 148 வாக்குகளால் 7ஆசனங்களையும், புளொட் 3 ஆசனங்களையும், இதர கட்சிகள் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

வவுனியாவில் அளிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளில் ரிஎன்ஏ 86 வாக்குகளையும், புளொட் 65 வாக்குகளையும், அரசஆதரவு கட்சிகளின் கூட்டணி 25 வாக்குகளையும், முஸ்லீம் காங்கிரஸ் 2 வாக்குகளையும் பெற்றிருந்தது தெரிந்ததே. இதே விகிதாசாரத்தில் மக்கள் வாக்களித்துள்ளதும்; மக்கள் அரசை திட்டவட்டமாக புறம்தள்ளியே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளததுமாக மக்கள் பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

Jaffna Municipal Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     United People’s Freedom Alliance  10602      50.67%      13
 
     Ilankai Tamil Arasu Kachchi  8008      38.28%     8
 
     Independent Group 1  1175       5.62%      1
 
     Tamil United Liberation Front  1007       4.81%     1
 
     United National Party  83       0.40%      0
 
     Independent Group 2     47   0.22%      0
 
Valid 20,922     93.90%
Rejected 1,358        6.10%
Polled 22,280        0.00%
Electors      100,417

Vavuniya Urban Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     Ilankai Tamil Arasu Kachchi    4279     34.81%      5 *
 
     Democratic People’s Liberation Front     4136     33.65%     3
 
     United People’s Freedom Alliance     3045    24.77%      2
 
     Sri Lanka Muslim Congress      587     4.78%         1
 
     United National Party     228     1.85% 0
 
     Sri Lanka Progressive Front  10     0.08%     0
 
     Independent Group 1      6        0.05% 0
 
     Independent Group 3     1       0.01% 0
 
     Independent Group 2      0     0.00% 0
 
Valid 12,292       95.66%
Rejected 558       4.34%
Polled 12,850      0.00%
Electors 24,626

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பு

election000.jpgவவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், நண்பகல் வரையில் 35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காலை முதல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சீராக நடைபெற்றதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், பட்டாணிச்சூர், புளியங்குளம், தாண்டிக்குளம், கற்குழி உட்பட்ட சில பகுதிகளில் மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்களிடையே சிறுசிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், சில கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஒன்றில் தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் ரீ.சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஊவா, யாழ்., வவுனியாவில் இன்று தேர்தல்

election000.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் இன்று (08) நடைபெறுகின்றன.

வாக்கெடுப்பு இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடைபெறும். முதலாவது முடிவு நள்ளிரவுக்குப் பின்னர் வெளிவரும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதிபெற்றுள்ளனர். 23 கட்சிகளிலும், ஏழு சுயாதீனக் குழுக்களிலுமாக 600 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இவர்களுள் 30 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 814 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். 14 கட்சிகளிலும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 432 வேட்பாளர்களுள் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும், இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 168 வேட்பாளர்களில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 412 பேர் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாக 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

யாழ். மாநகர சபைத் தேர்தல் இறுதியாகக் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாநகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் 1997 மே மாதம் 17ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாகத் தேர்தல் நடைபெறுகிறது.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கென 16 வாக்குச் சாவடிகள் அடங்கலாக மொத்தம் 86 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், அநுராதபுரம் ஆகிய இடங்களில் 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

யாழ். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 75 பேர் வாக்களிக்க அரியாலை பார்வதி வித்தியாலயத்திலும் வாக்குச்சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநகர சபைக்கு வெளியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுள் கொழும்பில் 285 பேரும், கம்பஹாவில் 871 பேரும், களுத்துறையில் 249 பேரும், புத்தளம் 4418 பேரும், அநுராதபுரத்தில் 132 பேரும் யாழ்ப்பாணத்தில் 75 பேருமாக 6030 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4978 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

வவுனியா நகர சபைக்கான தேர்தல் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தடவை இங்கு வாக்களிக்கவென 24 ஆயிரத்து 624 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார். 6 அரசியல் கட்சிகளிலும், 3 சுயேச்சைக் குழுக்களிலுமாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் பணிகளுக்கென 638 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைதியான தேர்தலை நடத்துவதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் எவ்வித பதற்றமும் இன்றி மிகவும் சுமுகமான நிலைமை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களிலும் சுமுகமான நிலை இருப்பதால் நீதி, நேர்மையான தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாக அவர் கூறினார்.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை வன்முறைகள் மிகவும் குறைவாக இருக்கிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென 638 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

மோசடி இடம்பெறும் வாக்குச் சாவடிகளின் வாக்குகள் கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படும் – மீள்தேர்தலின் பின்பே இறுதி முடிவு அறிவிக்கப்படும்

election000.jpgஏதாவ தொரு வாக்குச் சாவடியில் மோசடிகள், குளறுபடிகள் இடம்பெற்றது நிரூபிக்கப்படுமாயின் அவ்வாக்குச் சாவடி வாக்குகள் கணக்கெடுக்கப்படுவதிலிருந்து நீக்கப்படுவதுடன் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதும் நிறுத்தப்படும் என்று தேர்தல் செயலகம் நேற்றுத் தெரிவித்தது.இவ்வாறு இரத்து செய்யப்படும் வாக்குச் சாவடிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.

இதேநேரம் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் இய க்கத்திற்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் செயலக உயரதிகாரியொருவர் கூறினார்.

அவ்வதிகாரி மேலும் கூறுகையில் ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. தேர்தல் பிரசார பணிகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளன. திட்டமிட்டபடி நாளை மறுதினம் 8 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். வன்முறைகளின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேரும், யாழ். மாநகரசபைக்கென ஒரு இலட்சத்து 417 பேரும், வவுனியா நகர சபைக்கென 24 ஆயிரத்து 621 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென பதுளை மாவட்டத்தில் 507 வாக்கு சாவடிகளும், மொனராகலை மாவட்டத்தில் 307 வாக்குச் சாவடிகளும், யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச் சாவடிகளும், வவுனியாவில் 18 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட விருக்கின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ளவர்கள் வாக்களிக்கவென புத்தளத்தில் 6 வாக்குச் சாவடிளும், அனுராதபுரத்தில் 4 வாக்குச் சாவடிகளும், கொழும்பில் இரு வாக்குச் சாவடிகளும், கம்பஹாவில் இரு வாக்குச் சாவடிகளும் களுத்துறையில் ஒரு வாக்குச்சாவடியும் என்றபடி விசேட வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவிருக்கின்றன என்றார்.