யாழ்ப்பாண மாவட்ட செயலகம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகம்

யாழ்ப்பாணத்தில் வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதியுங்கள் – மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று முதல் 09 வரையான தனியார் வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி மாவட்ட செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் ஒன்று முதல் 9 வரையான தனியார் வகுப்புகளை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் தீர்மானம் மேற்கொள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

“விஜயதாச ராஜபக்ஷவே வெளியேறு ” – மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் !

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.

இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே தீடீரென மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்துக்குள் உள்நுழைந்தனர்.

நீதி அமைச்சர் அங்கு இல்லாத நிலையிலும் நடமாடும் செயலமர்வு இடம்பெற்றது. பொலிஸார் போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு முயற்சித்த போதும் அது பலனளிக்காத நிலையில் ஒரு மணி நேரம் வரை மாவட்ட செயலக கேட்போர்கூடத்துக்குள் கோஷம் எழுப்பிய போராட்டகாரர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

பின்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நடமாடும் செயலமர்வு அலுவலகத்தின் முன்பாகவும் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒஎம்பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்ஷவே வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.