யாழ்ப்பாணத்தில் வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதியுங்கள் – மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று முதல் 09 வரையான தனியார் வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி மாவட்ட செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் ஒன்று முதல் 9 வரையான தனியார் வகுப்புகளை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் தீர்மானம் மேற்கொள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *