முல்லைத்தீவு

முல்லைத்தீவு

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடபகுதி எங்கும் புதுவிதமான பல போதைப்பொருட்கள் பெருகிவருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகு, கடந்தகால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர் .

தற்போதும் பெரியவர்கள் முதல் இளையோர் வரை பெருமளவானோர் போதைப்பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசிடம் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

ஆட்டை கடித்த நாய் ஒன்றை பெண் ஒருவர் தூக்கிலிட்டு கொலைசெய்த சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

சம்பவம் தொடர்பில் தேசம்நெட் அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பெண் ஒருவருக்குச் சொந்தமான ஆட்டை, அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இது தொடர்பில் அயல்வீட்டாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குறித்த பிரச்சினை அப்பகுதி மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாயை வளர்க்கும் பெண்ணின் வறுமையை கவனத்தில் கொண்டு இணக்க சபையினர், இறந்த ஆட்டுக்கான இழப்பீட்டை அந்தப் பெண்ணால் முடியாது என தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுக்கு பதிலாக குறித்த நாயை வழங்குமாறு ஆட்டின் உரிமையாளர் கோரியிருந்துள்ளார்.

இணக்கசபையினரும் நாயை வழங்குமாறு கூறிய நிலையில் நாயை பெற்றுக்கொண்ட பெண் அதனை சுருக்கிட்டு கொலை செய்துள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை சில சமூக வலைத்தள கணக்குகளில் இணக்கசபையினர் நாயை தூக்கிட்டு கொலை செய்யுமாறு கட்டளையிட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இது பற்றி கருத்துப் பதிவு செய்துள்ள சமூக அரசியல் செயற்பாட்டளர் தம்பையா சோதிலிங்கம், “சமூகத்தின் சிந்தனை முறையில் வன்முறை – எதிர்ப்பு – வெறுப்பு எவ்வளவு வெறுப்பு வேரூன்றியிருக்கின்றது என்பதை இச்செயல் எடுத்துக் காட்டுகின்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் குதிரை தூக்கில் தொங்குவது காட்சிப்படுத்தப்பட்டது. அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஆனால் உயிரோடு இருந்த வாய்பேச முடியாத பிராணியை தூக்கிட்ட மனநிலை பலரையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது. வடக்கில் மாதம் 3 படுகொலைகள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சகிப்புத்தன்மையற்ற மனநிலை படுகொலைகளை நோக்கியே மனிதர்களை நகர்த்துகிறது.