மாவை.சேனாதிராஜா

மாவை.சேனாதிராஜா

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து அவர்களை அவமதித்து திருப்பி அனுப்பும் திட்டத்தோடு பா உ சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சர்வதேச பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜ் டெய்லி எப்ரி இணையத்தில் பெப்ரவரி 7இல் எழுதிய கட்டுரையிலும் குற்றம்சாட்டியுள்ளார். பெப்ரவரி 2இல் மாவையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள கறுப்புச்சட்டை அணிந்த கூட்டம் கிளிநொச்சியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 18 பேரைக் குறிவைத்திருந்ததாகவும் டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா உ சிவஞானம் சிறிதரன் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஒரே நிர்வாகத்தின் கீழு; கொண்டு வரும் முயற்சியை தனது கையாட்களை வைத்து குழப்பினார் என்ற குற்றச்சாட்டுக்களை மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகம் முன்வைத்திருந்தது. மேலும் சிறிதரன் சட்டவிரோத சக்திகளை வைத்து கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் பா உ முருகேசு சந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் தற்போது மவையின் இறுதி நிகழ்வை குழப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மாவையின் குடும்பத்தினர் குறிப்பாக மாவையுடைய மனைவி பவானி சேனாதிராஜா, தன்னுடைய கணவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொள்ளும் யாரையும் தடுக்க வேண்டாம் என்று கேட்டிருந்ததாகவும் ஆனால் அதனை இறுதி நிகழ்வு விடயங்களை முன்நின்று நடத்திய பா உ சிறிதரனோ மற்றவர்களோ கருத்தில் கொள்ளவில்லை என்றும் பவானி சேனாதிராஜாவின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் செயற்பட்டதாகவும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மாவையுடைய இறுதிநிகழ்வை வைத்து இலங்கைத் தமழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர்களைப் பழிவாங்க பா உ சிறிதரன் அணி முழு முயற்சி எடுத்தது. குறிப்பாக மத்திய குழுவிலிருந்த 18 பேருக்கு எதிராகவும் அவர்கள் தான் மாவையின் மரணத்துக்குக் காரணம் என்று பொருள்பட தயாரிக்கப்பட்ட பெரும் போஸ்டர்கள் இறுதிநிகழ்வு நடைபெற்ற தச்சன்காடு மயானத்தில் கட்டப்பட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டில் குளிர்காயும் கஜேந்திரகுமார் அணி மற்றுமொரு போஸ்டரை தெல்லிப்பளைச் சந்தியில் கட்டியது.

எம் ஏ சுமந்திரன் குடும்பத்தினர், கறுப்புச்சட்டை அணிந்த வெறிக்குட்டிகள் போதை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்த காலை வேளையில் பவானி சேனாதிராஜாவையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

மாவையின் உடலைப் பொறுப்பேற்று சகல ஆயத்தங்களையும் செய்வித்து தனது அரசியலை ஸ்தீரனப்படுத்த முயன்ற சிறிதரன் கடைசி வரைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் மவையின் உடல் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை. அங்கு நிகழ்த்தப்பட்ட இறுதி உரைகள் கூட தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டது.

மரணச் சடங்கிலாவது அத்மாவை அமைதியாக உறங்கவிடுவோம் என்ற மனநிலையில் பா உ சிறிதரன் செயற்படவில்லை. மாவையின் இறுதி நிகழ்வு தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்கான நிகழ்வாக உரைகள் அமைந்தது. மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன், யாழ் பல்கலை விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், மாவையின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் மற்றவர்களை தாக்குகின்ற விமர்சிக்கின்ற உரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஏற்பாடு செய்த பா உ சிறிதரன் இவற்றையெல்லாம் அனுமதித்தார். தடுக்க முயற்சிக்கவில்லை என்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசியல் தலைவருடைய இறுதி நிகழ்வு எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு மாவையுடைய இறுதி நிகழ்வு நல்ல உதாரணம் என சவுதஏசியன் அபயர்ஸ் என்ற இணையத் தளத்திற்கு நேற்று எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

 

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பாதாகை தொடர்பில் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என குறிப்பிடப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே , அது தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது

 

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் ! 

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் !

 

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் தச்சங்காடு மயானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் இரா சம்பந்தனின் மரணமும், அதன் தலைவர் மாசையின் மரணமும் வடக்கு கிழக்கு மக்களால் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனாலும் அதனை வைத்து மேற்கொள்ளப்படும் அரசியலுக்கு குறைவிருக்கவில்லை.

 

இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவரும் போது, தச்சங்காடு மயானத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது பிரிவினரை இலக்கு வைத்து சர்ச்சைக்குரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள் என பெயரிடப்பட்ட பதாகை மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. சுமந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 18 நபர்களின் படங்கள் பெயர்களுடன் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அந்தப் பதாகை சமூக வலைத்தளங்களில் உலாவந்திருந்தது.

தமிழரசுக்கட்சிக்குள் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிலிருந்தே சுமந்திரன் ஆதரவு அணி – சிறிதரன் ஆதரவு அணி என்று இருகூராக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் மாவை சேனாதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அங்கேயே தரித்து நின்ற பா.உ சிறிதரன் மீது ஊடகங்களின் பார்வை குவிந்திருந்ததுடன் – வழமை போல் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை துரோகிகள் பட்டியலில் சேர்த்து மரணச்சடங்கிலும் தமிழ்தேசியம் என்ற பெயரில் மிகப்பெரிய ஓர் அரசியல் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என தமிழர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

தக்கன பிழைக்கும், மாவை ஒரு அரசியல் விலங்கு !

தக்கன பிழைக்கும், மாவை ஒரு அரசியல் விலங்கு !

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 வயதில் காலமானார். இவர் ஜனவரி 28 இல் செவ்வாய்க்கிழமை வீட்டில் தவறி விழுந்தமையால் , தலையில் நரம்பு வெடிப்பு ஏற்ப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 29 ஆம் திகதி புதன்கிழமை ஜனவரி இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறப்புச் செய்தி கேள்விப்பட்டதும் கட்சி பேதமின்றி என்பிபி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உட்பட்ட தமிழரசுக்கட்சியின் முன்னாள் மற்றும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியினரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தந்திருந்தனர். மாவை சேனாதிராஜாவின் விருப்பத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனும் அஞ்சலி செலுத்த ஓடி வந்திருந்தார்.

சோமசுந்தரம் சேனாதிராஜா 1942 ஒக்டோபர் 27 இல் மாவிட்டபுரத்தில் பிறந்தார். அதனாலேயே அவர் மாவை என்ற அடைமொழியோடு மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டு வந்தார். யாழ். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றுக்கொண்டார்.

மாவை தனது அரசியல் பயணத்தை 1960 களில் ஆரம்பித்தார். 1962 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்த இவர் 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றியிருந்தார். சத்தியாக்கிரப் போராட்டங்களிலில் பங்குபற்றிய மாவை இலங்கை அரசாங்கங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு மொத்தமாக ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். இதுவே அரசியலில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவரை அரசியலில் தக்க வைத்ததும் இதுவே.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் செயற்பட்டார். 1989 இல் முதன்முதலில் யாழ்ப்பாணப் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1989 இல் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது அவரினுடைய இடத்திற்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார். அதேமாதிரி மீண்டும் 1999 இல் நீலன் திருச்செல்வம் கொலைசெய்யப்பட்ட போது தேசியப் பட்டியல் மூலம் இரண்டாவது முறையாக பாராளுமன்றம் சென்றார். பெரும்பாலும் படுகொலைகளினால் வெற்றிடங்கள் வந்தபோது அதனூடாக மேலே வந்தவர் மாவை சேனாதிராஜா.

தொடர்ந்து 2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு 2001,2004,2010 மற்றும் 2015 ஆகிய நான்கு தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தூண்டுதலால் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தில் பின்னணியிலிருந்து செயற்பட்டிருந்தார். இதன்போது சம்பந்தர் – மாவை அணியோடு வி ஆனந்தசங்கரி மிகக் கடுமையாக முரண்பட்டார். வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க மறுத்துவிட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரா சம்பந்தனுக்குக் கிடைத்தது. அதனால் மாவையும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். 2014இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து 10 வருடங்கள் தலைவராக செயற்பட்டு வந்தார்.

இதற்கிடையே 2024 பொதுத்தேர்தலின் பின்னர் மாவை தானாகவே தலைவர் பதவியிலிருந்து விலகி ஜனநாயக ரீதியாக தெரிவான சிறிதரன் சிவஞானத்தை தலைவராக செயற்பட கேட்டுக்கொண்டார்.

மாவையின் இராஜினாமாவை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒரு அணியான சுமந்திரன் தரப்பு, மற்றைய அணியான சிறிதரன் தரப்பும், சிறிதரனும் மாவையையே தலைவராக தொடர கேட்டுக் கொண்டனர்.

இந்த விவகாரத்தில் தமிழரசுக் கட்சியினர் குழாயடிச் சண்டை போட்டதும் இந்த விவகாரம் ஊடகங்களில் தூற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜனவரி 21, 2024 இல் திருகோணமலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளை எடுத்து அப்பதவிக்கு போட்டியிட்ட எம். ஏ. சுமந்திரனை தோற்கடித்து தமிழரசுக் கட்சிக்கு தலைவராகினார். ஆனால் அத்தெரிவானது முறையாக இடம்பெறவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாவை 2024 டிசம்பர் 28 இல் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்றவில்லை. அவருடைய தலைமைப் பதவிக்கு பதில் தலைமையாக சி. வி. கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் குழு தலைவர்பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. மாவை இலங்கை தமிழரசுக்கட்சி தலைவராக மட்டுமல்ல 2004 முதல் 2014 வரை பத்து வருடங்கள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். அந்த வகையில் ஒரு முழுநேர அரசியல்வாதியான மாவை யாழ்ப்பாண மேட்டுக்குடியை பிரதிநிதிவப்படுத்தியிருந்தார்.

அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சமீப நாட்களில் அவர் மாறி மாறி அரசியல் ரீதியாக வெளியிட்ட அறிக்கைகளும் தெரிவித்த கருத்துக்களும் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தன. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டமை. மறுநாள் அதனை மறந்து சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக கூறியமை என குழப்பாகவே இருந்தார். பல சந்தர்ப்பங்களில் மாவையின் ஞாபகசக்தி தொடர்பிலும் சந்தேகம் எழுந்திருந்தது. எவ்வாறெனினும் மாவை சேனாதிராஜா ஈழத்தமிழர் அரசியல் தளத்தில் மணல் தடத்தைப் பதித்து சென்றுள்ளார்.

அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார் மாவை சேனாதிராஜா !

தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா , தான் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கி உள்ளதாகவும் உறுப்புரிமையில் மாத்திரம் தமிழரசுக் கட்சியில் இருப்பேன் எனவும் தெரிவித்ததோடு கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்திடள் இது தொடர்பில் கேட்டபோது, எனக்கு எவ்விதமான கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்தது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது – கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது.

குறித்த தீர்மானம் தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

அதேவேளை,இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

இன்றையதினம் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தற்கு  சஜித் பிரேமதாச தனது நன்றியை தன்னுடையX தளப்பதிவில்  தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பிலான வழக்கில் கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபட்டுள்ளது – சுமந்திரன் குற்றச்சாட்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பிலான வழக்கில் கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனும் , மாவை சேனாதிராஜாவும்  வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறான கருத்து நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

‘கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரு நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம்.

மீதமுள்ள 4 பேரும் இரு தரப்பாக பிரிந்து வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டு செயற்படுகின்றனர் எனவும், இதனை மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுத்துரைத்தேன். கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள் யாப்பை தெரியாதது போல் நடந்துகொள்வது தொடர்பிலும் விளக்கமளித்தேன்.” எனவும் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

நாம் தந்திரமாவே பிரிந்து நிற்கிறோம் – மாவை சேனாதிராஜா

இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையிலேயே தந்திரமாக போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தேர்தலிற்காக நிதி ஒதுக்கப்பட்ட போதும் அதனை விடுவிக்காமல் இருப்பது குறித்து கடும் கரிசனையும் வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் அனைவரும் பிரிந்தே பலமாக ஒன்றிணையத்தான்.” – மாவை.சேனாதிராஜா விளக்கம்!

“வாக்குகளை அதிகமாக பெறுவதற்காகவே நாங்கள் பிரிந்து தேர்தலை எதிர்கொள்கின்றேம், எங்களுடைய திட்டம் அணைவரும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது.” என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு, மக்களின் பொறுப்பு தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். இத்தேர்தல் பல அரசியல் அமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடு இடம் பெற வேண்டும்.

இத்தேர்தல் ஏற்கனவே உள்ள நடைமுறையோடு, மக்கள் மத்தியில் பல குறைபாடுகள், ஆட்சி நடத்த முடியாத நிலை,வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவிற்கு ஆளும் தரப்பு,எதிர் தரப்பு என்ற வகையில்,ஆளும் தரப்பில் வெற்றி பெற்றிருந்தது பதவியை பெற்றிருந்தாலும் எதிர் தரப்பில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆட்சியை நடாத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

 

இதில் இன்னும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் கூறிய போதும் அதற்கான திருத்தங்கள் இன்னும் கொண்டு வரவில்லை.

தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் செயற்குழுவில் பல வகையான கேள்விகள் எழுப்பப்பட்டு, சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முன்னால் அந்த செயற் குழுவில் வரைந்த மாதிரி ஒரு சிபாரிசை நாங்கள் வரைந்து இருக்கின்றோம்.

ஏற்கனவே பெற்ற பெறுமானங்களின் அடிப்படையில் அதை வைத்து ஆட்சியை நடத்த முடியாத அடிப்படையில் தேசிய கூட்டமைப்பு பல வெற்றிகளை பெற்றிருந்த போதும் அந்த அனுபவங்களை பெற்றிருந்த போதிலும் இப்பொழுது தமிழரசுக்கட்சியின் சிபாரிசு ஒரு புதிய நடைமுறை வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான, கூடிய ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடைமுறை பற்றி பிரேரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட்,ரெலோ கட்சிகளுடன் தமிழரசுக்கட்சியின் சிபாரிசுக்கு பின்னர் நாங்கள் விவாதித்து இருக்கின்றோம்.

 

வாக்குகளை அதிகமாக பெறுவதற்காகவே நாங்கள் பிரிந்து தேர்தலை எதிர்கொள்கின்றேம், எங்களுடைய திட்டம் அணைவரும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது” என அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் விக்கி தரப்பு..?

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தமிழ்தேசிய கட்சிகள் இன்னமும் ஒரு உறுதியான முடிவுக்கு வராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனினும் தமது கட்சி இணைவது தொடர்பில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சிக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கையின் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த மாவை சேனாதிராஜா, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அணியாக போட்டியிடுமெனவும், ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் தேர்தல் கூட்டணி தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.