மாவை.சேனாதிராஜா

மாவை.சேனாதிராஜா

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் மலையகத் தமிழ் பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “இலங்கையின் தமிழ் சமூக தலைவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம். தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி எனும் மூன்று முக்கியத்துவமிக்க அம்சங்களுடனான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலைய தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மலையகத் தமிழர்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலய நிர்மாணம், மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல முக்கிய முயற்சிகளுக்காக இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

 

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து அவர்களை அவமதித்து திருப்பி அனுப்பும் திட்டத்தோடு பா உ சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சர்வதேச பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜ் டெய்லி எப்ரி இணையத்தில் பெப்ரவரி 7இல் எழுதிய கட்டுரையிலும் குற்றம்சாட்டியுள்ளார். பெப்ரவரி 2இல் மாவையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள கறுப்புச்சட்டை அணிந்த கூட்டம் கிளிநொச்சியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 18 பேரைக் குறிவைத்திருந்ததாகவும் டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா உ சிவஞானம் சிறிதரன் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஒரே நிர்வாகத்தின் கீழு; கொண்டு வரும் முயற்சியை தனது கையாட்களை வைத்து குழப்பினார் என்ற குற்றச்சாட்டுக்களை மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகம் முன்வைத்திருந்தது. மேலும் சிறிதரன் சட்டவிரோத சக்திகளை வைத்து கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் பா உ முருகேசு சந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் தற்போது மவையின் இறுதி நிகழ்வை குழப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மாவையின் குடும்பத்தினர் குறிப்பாக மாவையுடைய மனைவி பவானி சேனாதிராஜா, தன்னுடைய கணவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொள்ளும் யாரையும் தடுக்க வேண்டாம் என்று கேட்டிருந்ததாகவும் ஆனால் அதனை இறுதி நிகழ்வு விடயங்களை முன்நின்று நடத்திய பா உ சிறிதரனோ மற்றவர்களோ கருத்தில் கொள்ளவில்லை என்றும் பவானி சேனாதிராஜாவின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் செயற்பட்டதாகவும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மாவையுடைய இறுதிநிகழ்வை வைத்து இலங்கைத் தமழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர்களைப் பழிவாங்க பா உ சிறிதரன் அணி முழு முயற்சி எடுத்தது. குறிப்பாக மத்திய குழுவிலிருந்த 18 பேருக்கு எதிராகவும் அவர்கள் தான் மாவையின் மரணத்துக்குக் காரணம் என்று பொருள்பட தயாரிக்கப்பட்ட பெரும் போஸ்டர்கள் இறுதிநிகழ்வு நடைபெற்ற தச்சன்காடு மயானத்தில் கட்டப்பட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டில் குளிர்காயும் கஜேந்திரகுமார் அணி மற்றுமொரு போஸ்டரை தெல்லிப்பளைச் சந்தியில் கட்டியது.

எம் ஏ சுமந்திரன் குடும்பத்தினர், கறுப்புச்சட்டை அணிந்த வெறிக்குட்டிகள் போதை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்த காலை வேளையில் பவானி சேனாதிராஜாவையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

மாவையின் உடலைப் பொறுப்பேற்று சகல ஆயத்தங்களையும் செய்வித்து தனது அரசியலை ஸ்தீரனப்படுத்த முயன்ற சிறிதரன் கடைசி வரைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் மவையின் உடல் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை. அங்கு நிகழ்த்தப்பட்ட இறுதி உரைகள் கூட தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டது.

மரணச் சடங்கிலாவது அத்மாவை அமைதியாக உறங்கவிடுவோம் என்ற மனநிலையில் பா உ சிறிதரன் செயற்படவில்லை. மாவையின் இறுதி நிகழ்வு தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்கான நிகழ்வாக உரைகள் அமைந்தது. மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன், யாழ் பல்கலை விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், மாவையின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் மற்றவர்களை தாக்குகின்ற விமர்சிக்கின்ற உரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஏற்பாடு செய்த பா உ சிறிதரன் இவற்றையெல்லாம் அனுமதித்தார். தடுக்க முயற்சிக்கவில்லை என்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசியல் தலைவருடைய இறுதி நிகழ்வு எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு மாவையுடைய இறுதி நிகழ்வு நல்ல உதாரணம் என சவுதஏசியன் அபயர்ஸ் என்ற இணையத் தளத்திற்கு நேற்று எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

 

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பாதாகை தொடர்பில் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என குறிப்பிடப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே , அது தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது

 

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் ! 

மாவைக்கு மரணத்திலும் RIP – நிம்மதியில்லை: மாவையின் மரணத்திலும் அரசியல் இறுதிக்கிரியைகளிலும் அரசியல் !

 

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் தச்சங்காடு மயானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் இரா சம்பந்தனின் மரணமும், அதன் தலைவர் மாசையின் மரணமும் வடக்கு கிழக்கு மக்களால் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனாலும் அதனை வைத்து மேற்கொள்ளப்படும் அரசியலுக்கு குறைவிருக்கவில்லை.

 

இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவரும் போது, தச்சங்காடு மயானத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது பிரிவினரை இலக்கு வைத்து சர்ச்சைக்குரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள் என பெயரிடப்பட்ட பதாகை மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. சுமந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 18 நபர்களின் படங்கள் பெயர்களுடன் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அந்தப் பதாகை சமூக வலைத்தளங்களில் உலாவந்திருந்தது.

தமிழரசுக்கட்சிக்குள் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிலிருந்தே சுமந்திரன் ஆதரவு அணி – சிறிதரன் ஆதரவு அணி என்று இருகூராக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் மாவை சேனாதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை அங்கேயே தரித்து நின்ற பா.உ சிறிதரன் மீது ஊடகங்களின் பார்வை குவிந்திருந்ததுடன் – வழமை போல் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை துரோகிகள் பட்டியலில் சேர்த்து மரணச்சடங்கிலும் தமிழ்தேசியம் என்ற பெயரில் மிகப்பெரிய ஓர் அரசியல் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என தமிழர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

தக்கன பிழைக்கும், மாவை ஒரு அரசியல் விலங்கு !

தக்கன பிழைக்கும், மாவை ஒரு அரசியல் விலங்கு !

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 வயதில் காலமானார். இவர் ஜனவரி 28 இல் செவ்வாய்க்கிழமை வீட்டில் தவறி விழுந்தமையால் , தலையில் நரம்பு வெடிப்பு ஏற்ப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 29 ஆம் திகதி புதன்கிழமை ஜனவரி இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறப்புச் செய்தி கேள்விப்பட்டதும் கட்சி பேதமின்றி என்பிபி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உட்பட்ட தமிழரசுக்கட்சியின் முன்னாள் மற்றும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியினரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தந்திருந்தனர். மாவை சேனாதிராஜாவின் விருப்பத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனும் அஞ்சலி செலுத்த ஓடி வந்திருந்தார்.

சோமசுந்தரம் சேனாதிராஜா 1942 ஒக்டோபர் 27 இல் மாவிட்டபுரத்தில் பிறந்தார். அதனாலேயே அவர் மாவை என்ற அடைமொழியோடு மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டு வந்தார். யாழ். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றுக்கொண்டார்.

மாவை தனது அரசியல் பயணத்தை 1960 களில் ஆரம்பித்தார். 1962 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்த இவர் 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றியிருந்தார். சத்தியாக்கிரப் போராட்டங்களிலில் பங்குபற்றிய மாவை இலங்கை அரசாங்கங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு மொத்தமாக ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். இதுவே அரசியலில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவரை அரசியலில் தக்க வைத்ததும் இதுவே.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் செயற்பட்டார். 1989 இல் முதன்முதலில் யாழ்ப்பாணப் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1989 இல் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது அவரினுடைய இடத்திற்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார். அதேமாதிரி மீண்டும் 1999 இல் நீலன் திருச்செல்வம் கொலைசெய்யப்பட்ட போது தேசியப் பட்டியல் மூலம் இரண்டாவது முறையாக பாராளுமன்றம் சென்றார். பெரும்பாலும் படுகொலைகளினால் வெற்றிடங்கள் வந்தபோது அதனூடாக மேலே வந்தவர் மாவை சேனாதிராஜா.

தொடர்ந்து 2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு 2001,2004,2010 மற்றும் 2015 ஆகிய நான்கு தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தூண்டுதலால் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தில் பின்னணியிலிருந்து செயற்பட்டிருந்தார். இதன்போது சம்பந்தர் – மாவை அணியோடு வி ஆனந்தசங்கரி மிகக் கடுமையாக முரண்பட்டார். வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க மறுத்துவிட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரா சம்பந்தனுக்குக் கிடைத்தது. அதனால் மாவையும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். 2014இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து 10 வருடங்கள் தலைவராக செயற்பட்டு வந்தார்.

இதற்கிடையே 2024 பொதுத்தேர்தலின் பின்னர் மாவை தானாகவே தலைவர் பதவியிலிருந்து விலகி ஜனநாயக ரீதியாக தெரிவான சிறிதரன் சிவஞானத்தை தலைவராக செயற்பட கேட்டுக்கொண்டார்.

மாவையின் இராஜினாமாவை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒரு அணியான சுமந்திரன் தரப்பு, மற்றைய அணியான சிறிதரன் தரப்பும், சிறிதரனும் மாவையையே தலைவராக தொடர கேட்டுக் கொண்டனர்.

இந்த விவகாரத்தில் தமிழரசுக் கட்சியினர் குழாயடிச் சண்டை போட்டதும் இந்த விவகாரம் ஊடகங்களில் தூற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜனவரி 21, 2024 இல் திருகோணமலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளை எடுத்து அப்பதவிக்கு போட்டியிட்ட எம். ஏ. சுமந்திரனை தோற்கடித்து தமிழரசுக் கட்சிக்கு தலைவராகினார். ஆனால் அத்தெரிவானது முறையாக இடம்பெறவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாவை 2024 டிசம்பர் 28 இல் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்றவில்லை. அவருடைய தலைமைப் பதவிக்கு பதில் தலைமையாக சி. வி. கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் குழு தலைவர்பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. மாவை இலங்கை தமிழரசுக்கட்சி தலைவராக மட்டுமல்ல 2004 முதல் 2014 வரை பத்து வருடங்கள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். அந்த வகையில் ஒரு முழுநேர அரசியல்வாதியான மாவை யாழ்ப்பாண மேட்டுக்குடியை பிரதிநிதிவப்படுத்தியிருந்தார்.

அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சமீப நாட்களில் அவர் மாறி மாறி அரசியல் ரீதியாக வெளியிட்ட அறிக்கைகளும் தெரிவித்த கருத்துக்களும் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தன. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டமை. மறுநாள் அதனை மறந்து சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக கூறியமை என குழப்பாகவே இருந்தார். பல சந்தர்ப்பங்களில் மாவையின் ஞாபகசக்தி தொடர்பிலும் சந்தேகம் எழுந்திருந்தது. எவ்வாறெனினும் மாவை சேனாதிராஜா ஈழத்தமிழர் அரசியல் தளத்தில் மணல் தடத்தைப் பதித்து சென்றுள்ளார்.

அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார் மாவை சேனாதிராஜா !

தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா , தான் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கி உள்ளதாகவும் உறுப்புரிமையில் மாத்திரம் தமிழரசுக் கட்சியில் இருப்பேன் எனவும் தெரிவித்ததோடு கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்திடள் இது தொடர்பில் கேட்டபோது, எனக்கு எவ்விதமான கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்தது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது – கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது.

குறித்த தீர்மானம் தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

அதேவேளை,இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

இன்றையதினம் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தற்கு  சஜித் பிரேமதாச தனது நன்றியை தன்னுடையX தளப்பதிவில்  தெரிவித்துள்ளார்.