போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !

மினுவாங்கொட பன்சில்கொடயில் இயங்கிய வந்த தனியார் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான இளைஞன் சந்தேகத்திற்கிடமான வகையில் மருத்துவமனையில் இறந்துள்ளார். இறந்த இளைஞன் கைகளில் விலங்கும் கால்களில் இரும்புச் சங்கிலியும் அணிவித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கிலும் புனர்வாழ்வு மையங்களின் அவசியத்தை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி பவானந்தராஜா பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் ப்பாணத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் இந்த இல்லங்களை நடத்துகின்றனர். அவர்கள் இவ்விடயங்களில் பயற்சி பெற்றவர்களா என்பதும் கேள்விக்குறியே. மேலும் வடக்கில் போதைப்பொருள் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் பிரேரணையை யாழ் பா உ ரஜீவன் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த வீட்டின் மீது திடீர் சுற்றிவளைப்பை நேற்று 4ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதேபகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் தமிழக மீனவக் கிராமங்கள் நுழைவாயில் ! இந்திய மத்திய உளவுத்துறை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் தமிழக மீனவக் கிராமங்கள் நுழைவாயில் ! இந்திய மத்திய உளவுத்துறை

 

இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க மட்டும் வருவதில்லை. அவர்கள் அங்கிருந்து போதைப்பொருட்களையும் பெருமளவில் கொண்டுவருகின்றனர் என்பதை இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. வட இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து இருப்பதற்கு எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பவர்களும், அவர்களுடைய ஏஜென்டுகளாகச் செயற்படும் எம்மவர்களும் காரணமாக உள்ளனர். சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள மீனவக் கிராமங்கள் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலுக்கான நுழைவாயிலாக மாறியிருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு வடக்கு இளைஞர்கள் அடிமையாகி, தங்கள் இளமையையும் வாழ்வையும் தொலைப்பது பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகவே உள்ளனர். இந்திய மீனவர்கள் மூலமே பெரும்தொகையான போதைப்பொருள் யாழ் வருகின்றமையை மூடிமறைத்து, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தான் போதைப்பொருட்களை திட்டமிட்டு தமிழ் இளைஞர் மத்தியில் பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டிவிட்டு பொலிஸாரும் படையினரும் தான் இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்களுடைய அரசியல் பிரச்சாராத்திற்காக இதனைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் இளைய சமூகம் சீரழிந்தது தான் மிச்சம்.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள மீனவக் கிராமங்களைக் கண்காணிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பின்பு அங்கிருந்து மண்டபம் முகாமுக்கு வந்து தமிழக மீனவக் கிராமங்களிலும் அவர்களுடைய படகுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது என தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜீவால் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தமிழக மீனவக் கிராமங்களில் கண்காணிப்புக் குழக்களை அமைக்க காவத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

போதைப்பொருள் கடத்தல் குற்றம் – குவைத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை !

குவைத் இராச்சியத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.