பிரபாகரன்

பிரபாகரன்

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக நடந்தது. பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல. இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா? சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்து

பெரியார் – சீமான் – பிரபாகரன்: சீமான் நாயகனா? நயவஞ்சகனா?

சமூக இலக்கிய ஆர்வலர் அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒரு உரையாடல்

உயிர்த்தெழுந்தார் பிரபாகரன்! கட்டித்தழுவ 60,000 சுவிஸ் !

உயிர்த்தெழுந்தார் பிரபாகரன்! கட்டித்தழுவ 60,000 சுவிஸ். பிராங் – உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு: லண்டன் வரும் பா உ எஸ் சிறிதரன் பிரபாகரனை கட்டித்தழுவுவாரா?

 

“புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” அறிவிக்க தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் கூட்டம்!! இந்தியாவின் இரட்டை வேடம் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் தமிழகத்தில் புலிக்கு மீண்டும் ஆயுதப் பயிற்சி? !!!

இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நல்ல சேதி வருகுது.. நல்ல சேதி வருகுது.. என்று அறிவித்தபடி தமிழக புலித்தேசியவாதத் தலைவர்கள் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளனர் என தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பழ நெடுமாறன், குளத்தூர் மணி, வைக்கோ, கோவை ராமேஸ் என புலித்தேசிய ஆதரவாளர்கள் பலரும் இந்த ஊடகச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்னம் சில மணி நேரங்களில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் பழ நெடுமாறன் “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்றும் “போராட்டம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது” என்றும் தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காசி ஆனந்தன் நேற்று காலையே பயணமாகி விட்டதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகிறது. இந்த மாநாட்டின் பின்னணியில் 2009 இற்குப் பின் புலிகள் பலவாகச் சிதறுண்டதில் ஒரு பிரிவினரான ஐரோப்பாவில் செயற்படும் ரிசிசி அமைப்பிலிருந்த சிலரே இதனைத் தூண்டிவருவதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக கேப்பிரிட்ஜில் உள்ள வரலாற்று மையத்தைச் சேர்ந்த வி ஜெயாத்தன் விடுத்துள்ள அறிக்கையில் இதுவொரு புனைவு மோசடி என்றும் இதற்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது பற்றி ரிசிசி உறுப்பினர் தகவல் தருகையில் தம்மோடு இருந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் இந்நபர்கள் 1990 களுக்கு முன் இந்திய இராணுவத்துடனான தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் வந்தவர்கள் என்றும் சுவிஸ்நாட்டில் தற்போது வதியும் அப்துல்லா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட ஒருவருமாக நால்வர் இவ்விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு புலிகளின் ஆலோசகராக இருந்து இறுதியுத்தத்தில் தமிழகம் வந்து சேர்ந்த பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கலந்துகொள்ளமாட்டார் என்று அவருடைடய அணியில் நிற்கும் தியாகராஜா திபாகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மு திருநாவுக்கரசுவின் கருத்தியலுடன் அதாவது, இந்திய உளவுத்துறையாடு இணைந்து செயற்பட்டு; இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என இத்தரப்பில் உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய நபர்கள் நம்புகின்றனர். இவர்கள் இந்திய உளவுத்துறையோடு வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.

இந்த இந்திய ரோ சார்பு அணியின் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக மு திருநாவுக்கரசுடன் லண்டனைச் சேர்ந்த நிலா தற்போது சிலகலமாக இந்தியாவில் தங்கியுள்ளார், லண்டன் வரலாற்று மையத்தின் ஆயூட்கால உறுப்பினர் திபாகரன் மற்றும் மயூரன் ஆகியோர் உள்ளனர். நிலா தற்போது தமிழக்தில் இருந்தாலும் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏற்படு செய்யும் பழ நெடுமாறன் தலைமையிலான குழவினரும் இந்திய உளவுத்துறையுடன் செயற்படுபவர்களாக இருந்த போதும், முன்னைய குழவினரைப் போல வெளிப்படையாக தங்களை இந்திய உளவுத்துறையினருடன் அடையாளப்படுத்துவதில்லை.

“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் சில வாரங்களாகவே ஐரோப்பாவில் உலா வந்துகொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என் போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் 150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர் துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்துவந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.

சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிதி சேகரிப்பை முடுக்கி விடவே முள்ளிவாய்க்கால் முற்றம் கூட்டப்படுகிறது. இதில் “ உலகத் தமிழர்களுக்கு இன்பச் செய்தி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே காத்திருந்ஙகள்… !” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறும்செய்தி அனுப்பி வைக்கின்றது.

பெப்ரவரி 11இல் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபத்தைத் திறந்து வைத்த இந்தியா 48 மணி நேரத்திற்குள்ளாக “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்று தெரிவிக்க உள்ளனர். இந்த அறிவிப்பு ஒன்றும் எழுந்தமானதாக நடைபெறவில்லை. இதற்கு பணம் புரட்டுவது மக்களை ஏமாற்றுவது தான் என்ற காரணமும் இருக்க முடியாது. இது இந்திய உளவுத்தறையான ரோ இன் ஆசீர்வாதம் இல்லாமல் சாத்தியமில்லை. தேசம்நெற்க்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் இந்திய உளவுத்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிலருக்கு ஆயதப் பயிற்சிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் சேர்க்கப்படும் இந்நிதி இலங்கையில் தேவைப்படும் போது வன்முறையைத் தூண்டி இந்திய அரசின் ஆளுமையை மேலும் ஸ்தீரணப்படுத்த பயன்படும் எனத் தெரியவருகின்றது. ஈஸ்ரர் குண்டுவெடிப்புக் கூட பயிற்சிகள் தொடர்புகள் எல்லாமே இந்திய மண்ணிலேயே நடந்துள்ளது. எங்கு எப்போது வெடிக்கும் என்பதனைக்கூட இந்தியா தெரிந்துவைத்திருந்தது.

எண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றிய தமிழரசுக் கட்சி தனக்கேற்பட்ட தோல்வியில் இருந்து மீள தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்த தமிழீழக் கோரிக்கையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. ஆனால் அந்தச் சீட்டை அதன் பின் இந்தியாவே மிகத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி சிங்களவர்களைப் படுகொலை செய்ய (அனுராதபுரம், கொக்கிளாய், நாயாறு படுகொலைகள்) புலிகளைத் தூண்டி இனமுரண்பாட்டை திட்டமிட்டுத் தூண்டியது. ஆயத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து போராட்ட களத்தில் இறக்கியது ஒன்றும் தமிழர்களின் மீதான கரிசனையினால் அல்ல என்பதை காலமும் நிரூபித்துவிட்டது.

அன்றையைக்காட்டிலும் இன்று இலங்கையின் அமைவிடம் உலக வர்த்தகப் போக்குவரத்தில் முக்கியத்துவமானதாக உள்ளது. அதனால் சீனாவும் இந்தியாவும் இலங்கையை ஆளுமை செலுத்துவதில் கங்கணம் கட்டி உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா கலாச்சார மையத்தையும் கட்டித்தரும், தேவைப்பட்டால் அதனைக் குண்டு வைத்தும் தகர்க்கும். இந்தியாவுக்கு செம்பு தூக்குவதற்கு நான் முந்தி நீ முந்தி என்று அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு களமிறங்கிவிட்டனர். இப்போது இவர்களோடு ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் என்று ஒரு பெரும் கூட்டமே அள்ளுப்படுகின்றது.

அடுத்த முறை அண்ணாமலை மோடியின் சிறுநீரைக் கொண்டு வந்து கோமயம் என்று தெளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அன்று இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிட்ட இந்தியா இன்று மத வன்முறையையும் தூண்டிவருகின்றது. சமூக வலைத்தளங்களிலும் வாய்வார்த்தைகளிலும் என்றுமிலாத அளவுக்கு மதவாத நாற்றம் மோடியின் கோமயத்தின் நாற்றத்தையும் மிஞ்சி நிற்கின்றது.

“பிரபாகரன் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழி தோண்டிவிட்டான்.” – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் !

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை.  மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அழிவுகள், இழப்புக்கள், இடம்பெயர்வுகள் எமக்கு வந்திருக்காது. மேலும் பல மடங்கு முன்னுற்றகரமான வாழ்க்கையில் நாங்கள் இருந்திருப்போம். கெடுகுடி சொற்கேளாது என்பது போல அது அப்படியே போய்விட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும்கூட சந்திரகுமார் எம்மோடு சேர்ந்து கேட்டிருந்தால் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவருடன் சேர்ந்து கேட்டால் இங்கு வாக்கு விழாது என யாரோ கூறியிருந்த நிலையில் அவர் அதற்கு எடுபட்டு போய்விட்டார். அது அவருடைய விதி. அந்த விதியை மதியால் வெல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அவருக்கு அது முடியாமல் போய்விட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் தொழிலோடு சம்மந்தப்பட்டது மாத்திரமல்லாது, சமுர்த்தி உள்ளடங்கிய சகல வேலைகளையும் மேற்பார்வை செய்யவும், அதனை கண்காணிக்கவும் வழிநடத்தவும் விரும்புகின்றேன். அது எனக்குரிய சட்ட கடமைகளாகவும் இருக்கலாம். எனக்குரிய அரசியல் கடமைகளாகவும் இருக்கலாம்.

உங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் முன்னேறியது போல, தொடர்ச்சியாக மக்கள் இந்த சமுர்த்தி உதவி திட்டங்களில் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய கால்களில் தங்கியிருக்க வேண்டும். பிரதமரின் பிறந்தநாள், ஜனாதிபதியின் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் இடம்பெற்ற மத நிகழ்வுகளை மக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

துரதிஸ்டவசமாக எங்களுடைய தமிழ் அரசியல் எங்களுடைய பிரதேசங்கள் எல்லாவற்றையும் சூனியமாக்கப்பட்டுள்ளது. எனக்கும் அரசுக்கும் உள்ள புரிந்துணர்வுக்கூடாகதான் இவ்வாறான வாய்ப்புக்களை உங்களிற்கு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் இவ்வாறான மக்கள் கடமைகளை முன்னெடுப்பதற்கு, நீங்கள் எனக்கு பக்க பலமாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும்.

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை. என்னை எத்தனையோ தடவை கொலை செய்ய முற்பட்டவன். என்னுடன் இருந்தவர்களை கொன்றவன். என்னுடன் இருந்தவர்களை காயப்படுத்தியதுடன், துரத்தியவன், கடத்தியவன். அவன் இறந்த முறை சம்மந்தமாக எனக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. இவ்வாறு அவர் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழிதோண்டிவிட்டான் என பரிதாபம் ஏற்பட்டது.

நான் உங்களிடம் எதிர்பார்ப்பது சட்ட கடமைகள், மக்கள் கடமைகளை மாத்திரமே. நீங்கள் எல்லோரும் பெரும்பாலும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக.மாத்திரமல்ல, ஏனைய அமைச்சர்களுடைய வேலைத்திட்டங்களுடன் சேர்த்து நான் அதை மேற்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைய கலந்துரையாடலிற்கு சில உத்தியோகத்தர்கள் வருகை தரவில்லை. அவர்கள் வருகை தராமைக்கான காரணத்தை விளக்கமாக பெற்று தர வேண்டும். எனக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும் வீம்பு பண்ணினால் நான் அவர்களை இடம் மாற்ற வேண்டி வரும். இது எனது சட்டபூர்வமான மக்கள் கடமை.

பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. கோபத்தில் சும்மா கதைப்பதேயன்றி மற்றபடி எனக்கு அந்த நோக்கம் இல்லை. நீங்கள் எந்தளவுக்கு எந்தளவு முன்வந்து பங்களிக்கின்றீர்களோ, அந்தளவு தூரம் இந்த சமூகத்தை முன்னோக்கி கொண்டு வரலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.