பிரதமர் ஹரிணி அமரசூரிய

பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஐந்து அம்சங்கள் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை விரைவில் – கல்வி அமைச்சர் ஹரிணி !

ஐந்து அம்சங்கள் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை விரைவில் – கல்வி அமைச்சர் ஹரிணி !

 

புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், அதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்கள் ஐந்து முக்கிய தூண்களின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பொது மக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் சரியான மதிப்பீடு ஆகிய முக்கிய தூண்களின் கீழ் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்யுள்ளார்.

இந்த நிலையில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு 2026 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

 

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்யவும் தவறுகளை திருத்திக்கொள்ளவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள், மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களும் முன்வர வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மகளிர் பேரவை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, “நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நாம் சரியான இடத்தை வந்தடைந்துள்ளோம். பெண்களை பொருளாதாரத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதற்கான தடைகளை படிப்படியாக குறைத்து வருகிறோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பெண்கள் தங்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்கின்ற அதேநேரம் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் பாலர்ண பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்துவருகிறோம்” என்றார்.

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயமளித்த பிரதர் ஹரினி அமரசூரிய வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுழிபுரம் கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தையும் பார்வையிட்டதுடன் அவரின் துணைவியாரையும் சந்தித்து நலன் விசாரித்தார்.

தோழர் கே ஏ சுப்பிரமணியம் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர்.அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர். 1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று சமூகத்துடன் ஊடாடினார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றுக் காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு மதியம் சமூகமளித்த பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சுழிபுரம் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்

லசந்தவிற்கு நீதி: அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி !

லசந்தவிற்கு நீதி: அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி !

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் அவரது மகளால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்றையதினம் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, “இவ்விடயம் தொடர்பில் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். இதற்கு முன்னரும் நாம் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம். தற்போதும் இந்நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். அகிங்சாவின் கவலையும், அவருக்கு இவ்வேளையில் ஏற்படும் வேதனையையும் என்னால் நன்கு உணர முடிகின்றது.

 

7.3: இவ்விடயம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் இயலுமான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுவோம் என அவருக்கு உறுதியளிக்கின்றேன். சட்டமா அதிபர் திணைக்களத்திற்குத் தேவையான சுயாதீனத்தை வழங்கி, உரிய சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு, நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என பிரதமர் தெரிவித்தார்

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் கோருகிறார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் கோருகிறார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்கிறார்கள் ஆனால் அதற்கு முன்னர் ஐந்தாம் தர பரீட்சையினை ஏன் நடத்தக் காரணம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அதற்கு பாடசாலைகளுக்கு மத்தியில் உள்ள வேறுபாடுதான் எனத் தெரிவித்திருந்தார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும்.

பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படலாம். இவ்வாறான நிலைமைகளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண்டும். முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம், இது அரசியல்வாதியோ, அமைச்சரோ அல்லது செயலாளரோ தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறிமுறையை அமைக்க முயற்சிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் ஹரினிக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு

பிரதமர் ஹரினிக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு

ருஹூனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக முன்னாள் உபவேந்தர் சுஜீவ அமரசேன உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் இதுவொரு அரசியல் பழிவாங்கல் எனவும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபரை நியமிப்பது தொடர்பில் வழமையாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ் அடிப்படை உரிமை மீறல் வழக்கில் கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்வி அபிவிருத்தி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் சந்திப்பு!

கல்வி அபிவிருத்தி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் சந்திப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ரக்கபுமி கண்டோனோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவை டிசம்பர் 22இல் சந்தித்தார். இலங்கையின் கல்விக் கொள்கையில் பாரிய மாற்றங்களை கொண்டுவரத்திட்டமிட்டுள்ள பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இச்சந்திப்பில், இலங்கையின் தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

தங்களுடைய அரசு கொண்டுவரவுள்ள சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கு பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் மதிப்பீட்டு பொறிமுறையை மேம்படுத்தல் தொடர்பில் இவற்றுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதே இச்சந்திப்பின் நோக்காக இருந்துள்ளது. தற்போதுள்ள பிரித்தானியாவின் காலனித்தவக் கல்வி முறையை மாற்றி அமைக்க தேசிய மக்கள் சக்தி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் 18.12.2024 சமர்ப்பித்து கருத்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, எனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.தாம் ஒருபோதும் பொய்யான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

தனது கல்வித் தகுதி உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விசாரித்து உறுதி செய்ய முடியும். தனது வெளிநாட்டுப் படிப்பிற்குப் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

அங்கு சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அப்போது விரிவுரையாளராக இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வகுப்புகளில் கூட கலந்து கொண்டேன்” என்றார்.

திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி தேடுகிறார்கள் – பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

17.12.2024 பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கங்களின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி தேடப்பட்டதாக தெரிவித்தார்.

“எங்கள் அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் கொலிபிகேஷன் தொடர்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கே இருக்கும் நம் பலரின் கொலிபிகேஷனை தேடுகின்றனர். கொலிபிகேஷனை கேட்கிறார்கள், அதை கேட்கிறார்கள்… இதை கேட்கிறார்கள்.

மிகவும் ஆர்வமாக உள்ளனர். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கங்கத்தில் உள்ளவர்களின் கல்வித் தகுதிகள் தேடப்படவில்லை என்பது ஒருபுறம் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்களின் திருட்டையே தேடினார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.