தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயமளித்த பிரதர் ஹரினி அமரசூரிய வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுழிபுரம் கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தையும் பார்வையிட்டதுடன் அவரின் துணைவியாரையும் சந்தித்து நலன் விசாரித்தார்.

தோழர் கே ஏ சுப்பிரமணியம் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர்.அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர். 1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *