பாலியல் துஸ்பிரயோகம்

பாலியல் துஸ்பிரயோகம்

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு! தாயகத்தில் வீடுகட்டி பாலியல் குற்றத்தை மறைக்க கோயில் ஆசாமிகள் எத்தனிப்பு!!!

வட்பேர்ட், லண்டனில் வாழும் அறுபது வயதான சபாரட்ணம் அருள்சிகாமணி என்பவர் பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஹாட்போர்ட்செயர் பொலிஸ் பிரிவு மார்ச் 21, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றது. அண்மைக்காலத்தில் நிகழாத பாலியல் துஸ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பிரிவினரே இவ்வழக்கை விசாரித்து குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுத்துள்ளனர். தற்போது பருவ வயதில் உள்ள இப்பெண் 2011ம் ஆண்டு தனக்கு நிகழ்ந்த அநியாயங்களை அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மகளீர் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி வட்பேர்டில் வதியும் சபாரட்ணம் அருள்சிகாமணியின் நண்பரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தனக்கு அருள்சிகாமணியை ஒரு குடும்பபொறுப்பானவராகவே தெரியும் என்றும் ஊரிலிருந்த தன்னுடைய உறவுகளுக்கு உதவிவந்ததாகவும் அவர்களை வெளிநாட்டுக்கும் அழைத்து அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அந்நண்பர் தெரிவித்தார். அந்நண்பர் மேலும் தெரிவிக்கையில் அருள்சிகாமணி இவ்வாறான ஒரு செயலைச் செய்தமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வட்டூர் தமிழர் ஒன்றியம் யூகே இன் செயலாளராக இருந்த அருள்சிகாமணி 2018இல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, அருள்சிகாமணியின் நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அருள்சிகாமணி வட்டுக்கோட்டை வட்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட போதும் அவர் பெரும்பாலும் வாழ்ந்தது வட்டக்கச்சி, கிளிநொச்சியில் என்கிறார் அருள்சிகாமணியின் ஊரவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் திருமணமாகி ஒரு பெண் குழந்தையின் தந்மையுமான அருள்சிகாமணி க்கு வேறொரு பெண்ணோடு உறவு இருந்ததாகவும் தெரிவித்தார். அருள்சிகாமணியின் மகள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்கின்றார். தந்தையரின் இத்தகாத செயல்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் அந்நண்பர்.

இதேபோன்று பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பிள்ளைகளும் மிகுந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானிய ஆலயங்களுடன் நெருங்கிப் பணியாற்றிய பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தண்டனையைக் குறைக்க பிரித்தானிய சைவக் கோயில்கள், பக்தர்கள், அறிவுஜீவிகள் 40க்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி தண்டனையைக் குறைக்கக் கோரிய போதும் அவருக்கு பின் தண்டனை அதிகரிக்கப்பட்டமையை தேசம்நெற் வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்குமாரைத் தொடர்ந்து அவரோடு ஓரே வகுப்பில் கல்வி கற்ற சுப்பிரமணியம் சதானந்தனும் பெண்குழந்தையின் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறைத்தண்டனை பெற்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மூன்று பாலியல் துஸ்பிரயோகக் குற்றவாளிகளும் லண்டனின் ஹரோ – வெம்பிளிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. சபாரட்ணம் அருள்சிகாமணி வட்பேர்ட்டில் தற்போது வாழ்ந்தாலும் இவரும் ஹரோவில் நீண்டகாலம் வாழ்ததாக அவருடைய நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். நேரடியான உடல்ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்கள் நிகழும் அதே சமயம் சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில ஆண்கள் சமூக வலைத்தளங்களை பெண்களுக்கு ஆபத்தானதாக மாற்றியிருப்பது தமிழ் சமூகத்தின் பிரச்சினை என்கிறார் தாயகம் மட்டக்களப்பைச் சேர்ந்த நளினி ரட்னராஜா. மகளீர் தினத்தையொட்டி அவர் தேசம்நெற்குக்கு வழங்கிய நேர்காணலில் நல்ல குடும்பச் சுழலில் இருந்து வராத ஆண்கள், பாலியல் வறட்சி கொண்டவர்கள் அதனால் வக்கிரமொழிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

லண்டன் ஹரோ வெம்பிளி பகுதியில் வாழ்கின்ற பார் உரிமையாளர் ரரின் கொன்ஸ்ரன்ரைன், புலிகளின் கோயிலாக இருந்ததை வெற்றிகொண்ட வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் போன்றோர் தங்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பெண்களைப் பற்றிய அவதூறுகளை பரப்புவதுடன் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் பாலியல் உறுப்புகள் பற்றியும் இவர்கள் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் அங்கம்பெறும் சமூகவலைத்தளங்களிலேயே இதனைச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்ததாகவும் சொல்லி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு புலத்திலும் தாயகத்திலும் நெருக்கடிகளை உண்டுபண்ணும் வகையில் பதிவுகளை கடந்த சிலமாதங்களாகவே பகிர்த்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்கிறீர்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணியின் பாலியல் துஸ்பிரயோகத்தை விசாரணை செய்த புலனாய்வுக்குப் பொறுப்பான சார்ஜன்ட் மார்க் வில்மோர் இவ்வழக்குப் பற்றிக் குறிப்பிடுகையில்: “எனது குழு அண்மைக்காலத்தில் நடக்காத பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கின்றோம். சம்பவம் நடந்த போது பல்வேறு காரணங்களுக்காக அன்று அவர்கள் தங்களுக்கு நடந்ததை பொலிஸாருக்கு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம், குற்றம் எப்போது நடந்திருந்தாலும் என்ன மாதிரியான சூழ்நிலையில் நடந்திருந்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளைத் தீர விசாரிப்போம். பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாவது என்பது ஒரு போதும் உங்களுடைய தவறு அல்ல. நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இந்த விசாரணைக் காலகட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தாலோ அவ்வாறாக பாதிக்கப்பட்டது பற்றி அறிந்திருந்தாலோ பொலிஸ்க்கு உடனடியாகத் தொடர்புகொள்ளவும். “ எனக் கேட்டுக்கொண்டார்.

இதே லண்டன் ஹரோ – வற்போர்ட் பகுதியில் மற்றுமொரு போலிச்சாமியாரின் பாலியல் துஸ்பிரயோக வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. லைக்கா சாமியார் என்று லண்டனில் பிரபல்யமான லைக்கா துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமியின் ஆதரவு பெற்ற ஓம் சரவணபவ என்ற கேரளாவைச் சேர்ந்த புலிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற ஆசாமி லண்டனில் தமிழர்களின் பணத்தை உண்டியல் இல்லாமலே அள்ளி எடுத்தார். அவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாத பூஜை செய்தால் அந்த வீட்டு நட்புகள், உறவுகள் எல்லாம் வந்து பணத்தை விசுக்க ஒரு விசிற்றுக்கு ஓரிரு மணித்தியாலத்தில் இலங்கை ரூபாயில் ஒரு கோடி வசூலாகும். பாத பூஜை என்ற பெயரில் இந்த ஆசாமியின் காலைக் கழுவிக்குடிக்கும் பழக்கத்தை தற்போது தாயகத்திலும் பழக்கியுள்ளனர். இந்தப் போலி ஆசாமியை நைநாதீவுக்கு அழைத்து வந்து காலைக் கழுவிக்கு குடிக்க வைத்த கஜன் தற்போது மீண்டும் தாயகம் வந்தள்ளார்.

இளம்பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு லைக்கா பிரேமின் பெயிலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள புலிக்கள் முரளிகிருஸ்ணன் கோஸ்டி தாயகத்தில் வீடுகட்டிக் கொடுக்கிறோம் என்ற பாணியில் புது லைன் ஓடுகின்றனர். லண்டன் வற்போர்டில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நடக்க இருக்கின்ற சமயம் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி லண்டன் வறட்போர்டில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள இந்த பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட ஆசாமி புலிக்கள் முரளிகிருஷ்ணனை வீட்டின் முகப்புச் சுவரில் பதித்து அந்த ஆசாமியைக் கடவுளாக்கும் கைங்கரியத்தை கஜன் என்பவரும் அவரது நண்பரும் மேற்கொள்கின்றார்கள். இந்தப் போலிக்கடவுளர்கள் பணம் கொடுத்தாலென்ன, வீடுகள் கட்டிக்கொடுத்தாலென்ன அதனை மறுக்காமல் தாயக மக்கள் வாங்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுடைய சொந்தப் பணம் கிடையாது. பிரித்தானியத் தமிழர்களிடம் இருந்து ஏமாற்றிக் கொள்ளையிட்ட பணம். அது தாயக மக்களுக்குச் சேரவேண்டிய பணம். ஆனால் அந்த வீடுகளில் உள்ள பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஆசாமியின் உருவப் படத்தை மாட்டாதீர்கள். அதனை உடைத்துவிட்டு உங்கள் மதிப்புக்குரியவர்களின் உருவப்படத்தை பதித்துவிடுங்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணிக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டதுடன் ஆயுள் காலத்துக்கும் அவர் பாலியல் குற்றவாளி என்ற பட்டியலிலும் இவரது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு விரைவில் பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைப்பது போல் புலம்பெயர்நாடுகளில் கோயில்கள் என்ற பெயரில் பெரும் உண்டியல் வியாபாரம் நடைபெறுகின்றது. கோயில்களை வைத்து வீடுகட்டுகிறோம் என்று சொல்லி படத்துக்கும் யூரியூப்புக்கும் எவ்விதிகுறைவுமில்லை. உண்டியல் பணத்தில் சாத்திரத்துக்கு வீடும் மிகுதியில் காம விடுதிகளும் அந்தப்புரங்களும் கட்டப்படுகிறது. இவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலேயே பெண்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை. இனி தாயகத்தில் கேட்கவா வேண்டும். கோயில் ஆசாமிகள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.

பெண்ணொருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை !

பெண்ணொருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை, தொரமடலாவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 47 வயதுடைய நபர் ஒருவரை மிஹிந்தலை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

தனது தாயுடன் வசித்து வரும் குறித்த பெண், நேற்றையதினம் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அந்தசமயம் வீட்டினுள் நுழைந்த பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த நபர் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

வெளியில் சென்று வீடு திரும்பிய குறித்த பெண்ணின் தாய், ​​மகள் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதையும், பிறிதொரு நபர் வீட்டில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அவசர நோயாளார் காவுவண்டியை வரவழைக்கப்பட்டுள்ளது, பின்னர் அங்கு வந்து மருத்துவ உதவியாளர்கள் அந்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவும், சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இரு குழந்தைகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன்!

லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன் (62) ஒரு வீட்டில் பெண் குழந்தையும் மற்றுமொரு வீட்டில் ஆண் குழந்தையையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை மார்ச் 21 லண்டன் ஜஸ்ல்வேர்த் கிரவுண் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. லண்டனில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பாலியல் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குள் மற்றுமொரு பாலியல் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் சதானத்திற்கான தண்டனைக்கான நீதிமன்ற அமர்வு யூன் 16 நடைபெற இருக்கின்றது.

பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னும் கலாநிதி நித்தியானந்தன், ஆச்சுவே உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் உட்பட உட்பட சைவ ஆலயங்களில் முக்கிய உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கி சமூகத்தில் தங்களை அம்பலப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் லாகுர்னேயில் சிவாலயம் நடத்துகின்ற ஜெயந்திரன் வெற்றிவேலு யாழ்ப்பாணத்தில் இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுக்கு போதையூட்டி சமூகச் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றார். போதைப்பொருள் தொடர்பில் அவர் மீதும் நல்லூரடியில் உள்ள அவருடைய லகஸ் ஹெட்டல் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. லாக்கூர்னே சிவன் கோவிலில் இருந்து பெறப்படும் பணத்திலேயே ஜெயந்திரன் என்ற குடுமிஜெயா சமூகச் சீரழிவு வேலைகளைச் செய்து வருகின்றார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இவர் தற்போது சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ்ப்பாணத்தின் முக்கிய வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் சதானந்தனின் செயற்பாடுகள் பற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது குடும்பங்களோடு நெருங்கிப் பழகிய சதானந்தன் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று அப்பிள்ளைகளை பாலிஸ் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பெண் பிள்ளையை அவர் பன்னிரெண்டு வயதாக இருக்கின்ற போது தன்னுடைய வியாபாரம் சம்பந்தமாக சில ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி கணணியைப் பயன்படுத்த என்று சொல்லி அப்பிள்ளையின் படுக்கைஅறைக்கு சென்றுள்ளார். அங்கு ‘இது வேறொருவருக்கும் தெரியத் தேவையில்லை. இது எனக்கும் உங்களுக்கும் உள்ள ரகசியம்’ என்று சொல்லி அப்பிள்ளையை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

அதேசமயம் மற்றைய வீட்டிலும் நம்பிக்கையின் அடிப்படையில் அவ்வீட்டிற்குச் சென்று அந்த ஆண் பிள்ளையையும் ஒன்பது வயது முதல் 13 வயதுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
ஏப்ரல் 27, 2019இல் சுப்பிரமணியம் சதானந்தத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சும்பிரமணியம் சதானந்தன் மே 10, 2019இல் கைது செய்யப்பட்டார்.

அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரேமகுமார் ஆனந்தராஜா கைது செய்யப்பட்டிருந்தார். இரு குற்றவாளிகளுமே ஆரம்பத்தில் இருந்து தாங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தே வந்தனர்.
சுப்பிரமணியம் சதானிற்கு எதிராக எட்டு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளும் இரண்டு சிறுவர்களோடு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளுமாக பத்துக் குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இவ்வழக்குத் தொடர்பில் கருத்து வெளியிட்ட மெற் பொலிஸின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரி நில் சிமித்சன் “நானும் எனது குழுவும் பாதிக்கப்பட்ட இருவரும் முன்வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட்டதை வரவேற்கிறோம். அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க, நாங்கள் அவர்களுக்கான உதவியையும் ஒத்துழைப்பையும் விசாரணை முழுவதும் வழங்கி இருந்தோம்.

பாலியல் துன்புறுத்தல்கள் அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால் என்ன இப்போது நடந்துகொண்டிருந்தால் என்ன, யார் வந்து எங்களிடம் முறையிட்டாலும் நாங்கள் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்போம் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் உங்களை நம்புவோம்” என்று தெரிவித்து இருந்தார்.

பெண் பிள்ளை வளர்ந்து பல்கலைக்கழகம் சென்ற பின்னரேயே ஸ்கைப் மூலமாக தனது பெற்றோருக்கு இச்சம்பவத்தை தெரியப்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆண் பிள்ளையும் தனக்கு நிகழ்ந்ததை வெளிப்படுத்தி இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட இந்தக் கொடிய அனுபவம் பிரேமகுமார் ஆனந்தராஜயாவினால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையின் அனுபவமும் ஓரே மாதிரியானதாகவே உள்ளது. குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகி, நம்பிக்கையை உருவாக்கி அதன் பின் பிள்ளைகள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பாலியல் குற்றவாளிகளான பிரேமகுமார் ஆனந்தராஜாவும் சுப்பிரமணியம் சதானந்தனும் ஒரு சில மைல் தூர வித்தியாசத்திலேயே வாழ்பவர்கள். இவர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களா என்பதை இச்செய்தி பிரசுரிக்கும் வரை உறுதிப்படுத்த முடியவில்லை.

பல்கலைக்கழக மாணவியை சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆனந்தம் கிரியேசன் ஆனந்தராஜவுக்கு 30 மாதங்கள் சிறை!!!

பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.

அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.