பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

 

பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்படும் எனவும் எதிர்வரும் தேர்தல் வரை அது இழுத்தடிக்கப்பட மாட்டாது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.

தற்போது பாதாள உலகத்தவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 17 பேரில் 15 பேர் பாதாள உலகத்தோடு தொடர்பானவர்கள் இருவர் மட்டுமே தமிழர்கள்.

 

2.3: இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரங்களிடம் சொல்லி நான் உங்களுக்கு பிச்சை போடுகிறேன் எனப் பாராளுமன்றத்தில் குவினார் அர்ச்சுனா. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காதபடியால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தாகத் தெரிவித்தார் பொன்னம்பலம் கஜேந்திர குமார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனும் இக்கோரிக்கையை வைத்தார். உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முன்னுக்குத் தள்ளுகின்றனர் தமிழ் தேசியவாதிகள்.

 

2.4: இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது, அரசாங்கமானது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் அதனையே குறிப்பிடுகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்தடிப்புச் செய்யப்பட மாட்டாது என்றார்.

இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இனிமேல் அனுமதிக்கப்படாது. அதேவேளை, புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மேற்கொள்ளப்படுகின்றபோது கூட் இவ்வளவு ஆக்ரோசமாக அதனை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பெருமளவில் பாதாள குழுக்களுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டிருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரும் கொள்கைப் பிடிப்போடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரர்கள் உங்களுக்குப் பிச்சை போடுவார்கள் என்று பா உ அர்ச்சுனா முழங்கினார். பொன்னம்பலம் கஜேந்திர குமார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்திருந்தார். பாதாள குழுக்களின் மனித உரிமைகள் மீது தமிழ் தேசியத்துக்கு ரொம்பவும் கருணைதான் என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.

அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 “பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத் 

“பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத்

 

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து, மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை. மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் காலாவாதியடைந்துள்ள இந்த அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு அமைய இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும். அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !

விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறுத்தவதாகக் கோரி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்தப் பயங்கரவாத்த தடைச்சட்டம் முன்னாள் போராளிகளாகிய எங்களை விடாது துரத்துகின்றது என முன்னாள் போராளி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “நாங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்களை திருப்பித் திருப்பி விசாரணைக்கு அழைக்கின்றார்கள். என்னை ஒன்பது தரம் அழைத்துவிட்டார்கள். விசாரணை செய்வதை எங்கள் மாவட்டத்திலேயே வைத்துச் செய்யாமல் கொழும்புக்கு அழைக்கின்றனர். நான் கொழும்புக்கு சென்று வருவது என்றால் எனக்கு தங்குமிடம் போக்குவரத்து என 25,000 ரூபாய் தேவைப்படும். எல்லா மாவட்டங்களிலும் பொலிஸ் நிலையங்கள் புலனாய்வு பிரிவுகள் உள்ளது தானே. அங்கே வைத்ததே விசாரக்க முடியும் தானே. ஏன் எங்களை கொழும்புக்கு வரச் சொல்லிக் கேட்கிறார்கள்” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

@jeevan0508

♬ original sound – jeevan0508 – jeevan0508