விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறுத்தவதாகக் கோரி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்தப் பயங்கரவாத்த தடைச்சட்டம் முன்னாள் போராளிகளாகிய எங்களை விடாது துரத்துகின்றது என முன்னாள் போராளி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “நாங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்களை திருப்பித் திருப்பி விசாரணைக்கு அழைக்கின்றார்கள். என்னை ஒன்பது தரம் அழைத்துவிட்டார்கள். விசாரணை செய்வதை எங்கள் மாவட்டத்திலேயே வைத்துச் செய்யாமல் கொழும்புக்கு அழைக்கின்றனர். நான் கொழும்புக்கு சென்று வருவது என்றால் எனக்கு தங்குமிடம் போக்குவரத்து என 25,000 ரூபாய் தேவைப்படும். எல்லா மாவட்டங்களிலும் பொலிஸ் நிலையங்கள் புலனாய்வு பிரிவுகள் உள்ளது தானே. அங்கே வைத்ததே விசாரக்க முடியும் தானே. ஏன் எங்களை கொழும்புக்கு வரச் சொல்லிக் கேட்கிறார்கள்” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
@jeevan0508