தேசம் திரை காணொளி

தேசம் திரை காணொளி

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்?

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்? முதல் வழங்கப்பட்ட உறுதிமொழி மீண்டும் வழங்கப்பட்டது?
தம்பி தம்பிராஜா V ஊசி அர்ச்சுனா

சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? – தேசம் திரை காணொளி!

இலங்கை தமிழர் அரசியல் பரப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.சிறீதரன் எதைச் சாதிக்க போகிறார்..? என்பது குறித்தும் தமிழர் அரசியலில் எப்படியான மாற்றங்களை இது ஏற்படுத்தப்போகிறது என்பது தொடர்பிலும் தேசம் திரை YouTubeஇல் வெளியான இந்த காணொளி பேசுகிறது.

இலங்கை தமிழரசு கட்சி தலைவர் தெரிவு– தேசம் திரை பார்வை.

 

 

மேற்கின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது..? – பெத்லகேம் பாதிரியார் முன்தார் ஐசாக் [Thesam thirai YouTube]

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில் , மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார் .

 

மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர் , பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் . டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது .

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம் . வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை . ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை . இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது .

இதன் தொடர்ச்சியான தேசம் திரை காணொளியை காண கீழை உள்ள YouTubeபக்கத்துக்கான Link ஐ Clickசெய்யுங்கள்..!

 

 

 

வெள்ளை வேன் கடத்தல் ஊகங்களும் – ஊடகங்கள் கிளப்பி விட்ட புரளிகளும் – YouTube வீடியோ !

அண்மைய நாட்களில் இலங்கையின் பல பகுதிகளிலும் இருக்கக்கூடிய சிறுவர்களையும் – அவர்களின் பெற்றோரையும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தகவலாக மாறியுள்ளது வெள்ளை வான் கடத்தல் தொடர்பான செய்திகளாகும். அப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றதா..? நடைபெறவில்லையா..? உண்மையிலேயே அது கடத்தல் தானா ..? போன்றவற்றின் உண்மைத்தன்மையை தேசம் திரை இந்த காணொளியில் ஆராய்கிறது.

கடத்தல் தொடர்பான செய்திகள் முதன் முதலில் ஆரம்பித்தது மன்னார் மாவட்டத்தில் இருந்தே. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல் அவர்கள் மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் அவை சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதே நேரம் மன்னாரில் சிறுவர்களை கடத்த ஒரு குழு முயற்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடத்த முற்பட்டோர் கைதாகிய நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்தே இது தொடர்பான உண்மைகளும் – வதந்திகளும் சமூக வலைத்தளங்களிலும் – வாட்ஸ் அப் குழுமங்களிலும் அதிகம் பகிரப்பட்டது. இந்த இடத்தில் மக்களை இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் ஆகும். சாதாரணமாக காணாமல் போன செய்திகளை கூட கடத்தல் செய்திகளாக ஊடகங்கள் மாற்றி தங்களுக்கான பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டன. அதிலும் சில தனியார் யூடியூப் பக்கங்கள் சம்பவத்தை நேரடியாகவே பார்த்தது போலவும் புரளிகளை கிளப்பி விட ஆரம்பித்திருந்தனர்.

இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள link ஐ Click செய்யவும்..!