டில்வின் சில்வா

டில்வின் சில்வா

மக்கள் எங்களுக்கு ஆறு மாதங்களை இல்லை ஐந்து ஆண்டுகளை தந்திருக்கிறார்கள் – ரில்வின் சில்வா

மக்கள் எங்களுக்கு ஆறு மாதங்களை இல்லை ஐந்து ஆண்டுகளை தந்திருக்கிறார்கள் – ரில்வின் சில்வா

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், இந்த வருடம் ஏப்ரலில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம் என ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை பௌதீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கான முயற்சியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த ரில்வின் சில்வா, நாட்டை மாற்றுவதற்கு மக்கள் 5 வருட ஆணையை வழங்கியுள்ளதாகவும், முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களால் யாரும் கலங்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பௌதீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கான முயற்சியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டை மாற்றுவதற்கு மக்கள் 5 வருட ஆணையை வழங்கியுள்ளனர், முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களால் யாரும் கலங்க வேண்டாம்.

மோசடி மற்றும் ஊழலை தடுக்க முயற்சிக்கும் போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதை எதிர்க்கின்றனர். நாங்கள் வீதி விதிகளை அமுல்படுத்த முயற்சிக்கும்போது, விதிகளை கடைபிடிக்க தயங்குபவர்கள் அதை எதிர்க்கின்றனர் என்றார்.

 

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

“அதிகாரப் பரவலாக்கத்தை மக்களுக்குக் கிட்டவாக கீழ் மட்டம்வரை கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். தமிழ் மக்களோடு கலந்துரையாடி தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வு வரும்வரை மாகாணசபை இயங்கும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட புதிய தீர்வு வந்தால் பழையது இல்லாமல் போகும் தானே” என ஜேவிப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஹிசாம்ஸ் இன்சைட் என்ற சிங்கள காணொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். “இனவாதம், மதவாதம் மிகவும் ஆபத்தானது அதனை இல்லாமல் செய்ய, அதனை எதிர்கொள்ள சட்டம் முழுவீச்சுடன், அதன் உச்ச பலத்துடன் பிரயோகிக்கப்படும்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்த ஜேவிபின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அதனால் தான் ‘இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சமூகவலைப் பதிவுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக நடவடிக்கை எடுத்தோம்’ எனத் தெரிவித்தார். ‘இந்த இனவாதம், மதவாம் என்பது கொலைகளிலும் மோசமானது எனத் தெரிவித்த அவர் அதனை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் கடந்த காலங்களில் இலங்கையில் நடந்தது போலாகி விடும். நாங்கள் தூரநோக்கோடு இந்த நாட்டை இனவாதம், மதவாதம் இல்லாமல் கட்டி எழுப்புகின்றோம். அதனைப் பலவீனப்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என்றார் ரில்வின் சில்வா.

“தமிழ் ஊடகங்கள் நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாங்கள் சொன்னதன் உள்ளடக்கத்துக்குப் புறம்பாகத் திரித்து வெளியிட்டு வருகின்றனர்” எனவும் ரில்வின் சில்வா தனது நேர்காணலில் குற்றம்சாட்டியிருந்தார். “எங்களுக்கு வாக்களித்த மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள், சிங்கள மக்கள் எங்களைப் புரிந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்த ரில்வின் சில்வா, எங்களுடைய வெற்றியை விரும்பாத சிலர், இவ்வாறு உண்மையில்லாத விடயங்களைப் பரப்புகின்றனர் எனத் தெரிவித்தார். வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான ரில்வின் சில்வாவின் பேட்டி தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனை ரில்வின் சில்வாவே தன்னுடைய மொழியில் தெரிவிக்கின்றார்:

நேர்காணலை மேற்கொண்டவர், “நீங்கள் ஒரு நீண்ட காலப் போராளி, கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலம் இருக்கின்றீர்கள். தற்போது உங்களுடைய கட்சி மிகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. நீங்கள் ஏன் பாராளுமன்றம் செல்லவில்லை, அமைச்சராகவில்லை” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ரில்வின் சில்வா, “எனக்கு கட்சிக்குள் பெரிய பொறுப்புகள் இருக்கின்றது, அனுர தோழரின் பொறுப்பு ஜனாதிபதியாக நாட்டை கொண்டு நடத்துவது, பாராளுமன்ற பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைச் செய்கின்றார்கள். நான் மட்டும்மல்ல உங்களுக்கு யார் என்று கூடத் தெரியாத பெரும் தொகையானவர்கள் மாவட்டங்களிலும் கிராம மட்டங்களிலும் சந்தோசமாக தங்கள் கடமையைச் செய்து வருகின்றார்கள். பாராளுமன்றம் வந்துதான் அதனைச் செய்ய வேண்டும் என்று யாரும் கருதவில்லை. தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவந்துள்ளது. எங்கள் கட்சியில் யாரும் அமைச்சுப் பதவி கேட்கவில்லை. தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லவும் கேட்டகவில்லை” எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

சர்வஜன வாக்கெடுப்பினூடாக புதிய அரசியலமைப்பு- ரில்வின் சில்வா!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்….

 

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைப்பது மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை மக்கள் அனுமதியுடன் நிறைவேற்றுவோம். ஆனால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது என்பது சவால் மிக்கதொரு பணி என்பது எமக்கு தெரியும். எனினும் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம். அதே போன்று தேசிய மக்கள் சக்தியிக் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

 

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

 

இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகவே ஐரோப்பாவில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்கள் மீது ஒரு அரசின் அதிகாரத்தை (அரசியலமைப்பு கட்டுப்பாடுகள்) கட்டுப்படுத்தவும், சமத்துவத்துக்கான முழுமையான உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் பெரும்பான்மையினரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கங்களே அவையாகும்.

 

எவ்வாறாயினும், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரச இயந்திரத்தின் தன்னிச்சையான அதிகாரங்களை அதிகரித்ததன் மூலம் நேர்மறையான விடயங்களே இடம்பெற்றுள்ளன. 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளில் அமைச்சர்களின் தன்னிச்சையான அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உகாண்டாவில் ராஜபக்ச க்களின் பணம் தொடர்பில் நாம் கூறவில்லை- டில்வின் சில்வா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி.யின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர்.

எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டை முன்வைத்ததாக எழுந்த கூற்றுகளை மறுத்த டில்வின் சில்வா, அத்தகைய கூற்றுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் தான் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.

கொள்கலன்களில் அமெரிக்க டொலர்கள் இங்கு அச்சிடப்பட்டு உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவே தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பதற்கே IMF நிதி வழங்குகிறது.”- ஜே.வி.பி சாடல் !

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஜே.வி.பி ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பது மாத்திரமே சர்வதேச நாணயநிதியத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது அனுமதியளித்துள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தசாப்த காலப்பகுதியில் அனுபவித்த மிக மோசமான நாணய நெருக்கடி காரணமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்த அமைச்சர்களிற்கு தற்போது  சர்வதேச நாணயநிதியத்தின கடனை தொடர்ந்து புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவோம்.” – ஜே.வி.பி

“தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவோம்.” என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான விவாதத்தைப் பயன்படுத்தி பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை தூண்டிவிடுவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறான கருத்துக்கள் ஒரு பொறி என்றும் இதற்கு மக்கள் பலியாக கூடாது என்றும் கோரியுள்ளார்.

13வது திருத்தம் குறித்து ஜனாதிபதி குறிப்பிட்ட அந்தத் தருணம் வரை இந்த நாட்டில் எவரும் இந்தத் திருத்தம் பற்றிக் கவலைப்பட்டதில்லை என்றும் டில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு மற்றும் விலைவாசி உயர்வை மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமது அரசாங்கம் அமைக்கப்பட்டால், தீர்வு பொறிமுறையுடன் கூடிய புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

மக்கள் வாழ கஷ்டப்பட்டிருக்கும் போது அமைச்சர்கள் விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளக்கு சுற்றுப்பயணம் !

பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ளதால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை தற்போது எதிர்க்கொண்டுள்ளது. தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிர்வாக கொள்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது. சிறந்தவர்களின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதில்லை. நாடு நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் பெறும் சிரமங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு காலையில் இருந்து வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொது மக்கள் அன்றாட வாழ்க்கையினை கடத்துவதற்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது குடும்பத்தாரை காண அமெரிக்கா சென்றுள்ளார்.

மறுபுறம் பல அமைச்சர்கள் விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ள காரணத்தினால் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளார்கள்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.