நாங்கள் ஏன் ஆயுதம் ஏந்தினோம் ..? டில்வின் சில்வா விளக்கம் !
ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் படுகொலையைச் செய்துள்ளது என கூறுகிறார்கள். அறுபதாயிரம் பேரைக் கொன்று, எங்கள் கட்சியைத் தடை செய்தவர்களுக்கு எதிராகவே நாங்கள் போராடினோம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா, ஆயுதங்களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது நாங்கள் ஆயுதங்களை எடுத்தோம். ஜனநாயக அரசியலை மேற்கொண்ட எங்கள் கட்சி, 1983 கருப்பு ஜூலை மற்றும் ஐ.தே.க. தொடங்கிய கருப்பு ஜூலையை அடிப்படையாகக் கொண்டு, அநீதியான மற்றும் சட்டவிரோத தடையை அடிப்படையாகக் கொண்டு கட்சியைத் தடை செய்தது. மேலும் எங்களை அடக்கத் தொடங்கினார்கள். மறுபுறம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நாங்கள் அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். அன்று நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தேசம்நெற் க்குத் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஈபிஆர்எல்எப் போராளியும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான பாரிஸில் வாழும் சோலையூரான்இ சமூக விடுதலைப் போராட்டங்களில் அப்போராட்ட அமைப்புகள் மேற்கொண்ட படுகொலைகளையும் அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தை தக்க வைக்க மேற்கொள்ளும் படுகொலைகளையும் ஒரே தளத்தில் பார்க்க முடியாது எனத் தெரிவித்தார். ரில்வின் சில்வாவின் கருத்தை அவர் பிரதிபலித்திருந்தார்.
தமிழ் ஆயுத அமைப்புகள் மத்தியிலும் இவ்விதமான படுகொலைகள் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டிய சோலையூரான் தமிழ் அமைப்புகள் மத்தியிலிருந்த கொலைக் கலாச்சாரத்தை கடுமையாகச் சாடினார்.