படலந்த வதைமுகாம் போல யாழ் நூலக எரிப்பு தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஆளுங்கட்சி எம்.பி இளங்குமரன் !
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.பி.பி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மிக நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ் தேசியக் கட்சிகளின் எம்பிக்கள் இவ்விடயத்தில் எதுவும் தெரியாதவர்கள் கேளாதவர்கள் போன்றே இருந்து வந்தனர். மேலும் என்பிபி யை வீழ்த்த சஜித், ரணில் ஆகியோருடன் இணைவதற்கு நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய அவர், மழைக்காலத்தில் கத்தித் தானாகவே இறக்கும் தவளை போல வேட்புமனுவை சரியாக நிரப்பத் தெரியாமல் விலக்கப்பட்ட அர்ச்சுனா அணியினர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் இது தொடர்பில் தெளிவான அறிவுறுத்தல்களை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்