ஜெனரல் சவேந்திர சில்வா

ஜெனரல் சவேந்திர சில்வா

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி அரசு இல்லை எனத் தெரியவருகின்றது. தமிழ் தேசியத் தலைமைகளின் நண்பனாக எப்போதும் அறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீடித்திருந்தார். ஆனால் தற்போதைய அரசு இவருடைய பதவியை நீடிக்க மாட்டாது எனத் தெரியவருகின்றது. அதனால் ஜெனரல் சர்வேந்திர சில்வா டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் கனடா சென்றுள்ள பா உ எஸ் சிறிதரன், கனடிய அரசு, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தொடர்ந்து நீதி கோரி வருவதற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேற்குலகம் காஸாவில் தொடர்ந்தும் இனப்படுகொலை செய்வதை ஆதரித்துவரும் கனடா, தமிழ் மக்கள் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. கனடாவில் உள்ள 3,00,000 தமிழ் வாக்காளர்களுக்காக கனடா நீலிக் கண்ணீர் வடிக்கின்றதேயல்லாமல் அவர்களுக்கு மனித உரிமை பற்றி எவ்வித அக்கறை கிடையாது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

“யாழ்ப்பாணத்தில் உள்ள 100அடி விகாரையை எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது.” – ஜெனரல் சவேந்திர சில்வா

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என  பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் சவேந்திர சில்வாவிடம் கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.

இனவாத. மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்ட விரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது’ என்று சவேந்திரசில்வா பதிலளித்தார்.