ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

பாராளுமன்றச் சலுகைகள் அமைச்சுச் சலுகைகள் குறைக்கப்படுகின்றது !

பாராளுமன்றச் சலுகைகள் அமைச்சுச் சலுகைகள் குறைக்கப்படுகின்றது !

 

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம். அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 1 மில்லியன் ரூபாய் காப்பீட்டு இழப்பீட்டை 25 இலட்சமாக குறைக்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.

சட்டத்தின் ஆட்சி மூலம் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அனுர !

சட்டத்தின் ஆட்சி மூலம் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அனுர !

 

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை நிலைநாட்டாமல் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது என்றார் .

பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ஜனாதிபதி அநுர உருக்கம் ! 

பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ஜனாதிபதி அநுர உருக்கம் !

 

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கும். சர்வதேச தூதுவர்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் தொழில் முயற்சியாளர்கள் பிரவேசிப்பதற்கான வலுவான திட்டத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஷங்கரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. முதலீட்டாளர்கள் எந்தவிதமான தரகுப்பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாகக் கருதி பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

 

அனுரகுமார திசநாயக்க அதிகாரத்திற்கு வந்ததை தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதை ஒரு அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றமாக கருத முடியாது என சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நூல் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. அனுரகுமார திசநாயக்க ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒரு வர்க்க மாற்றம் ஏற்படும் என்ற அனுமானத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது. இடதுசாரி நட்சத்திரம் என ஏகேடியை குறிப்பிட்டுள்ளார்கள்.மாவோ குறித்து ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சீன வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என குறிப்பிட்டிருந்தார். அனுரகுமார திசநாயக்க ஒரு வர்க்கரீதியான புரட்சி மூலம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றவில்லை.

அரகலயவின் போது பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும், காணாமல்போனோர் விவகாரம் உட்பட பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் ஊடாக ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தது, அந்த சமூக மாற்றத்தை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

அனுரகுமாரதிசநாயக்க தன்னை ஒரு இடதுசாரியாக எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தவில்லை, தேசிய மக்கள் சக்தி ஒரு இடதுசாரி கட்சி என எந்த மேடையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டினார்.

படைகளின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைக்கப்படும் ! ஜனாதிபதி அனுரா; வடக்கு கிழக்கில் காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும் !

படைகளின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைக்கப்படும் ! ஜனாதிபதி அனுரா; வடக்கு கிழக்கில் காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும் !

 

இலங்கை பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும், வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்டும், பாதைகள் திறக்கப்படும் என்பதை இவ்வாண்டு முற்பகுதியில் தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது. இதனை ஜனாதிபதி அனுரா உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதிகள் ஊடாக ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் மூன்றாவது மீளாய்வு அறிக்கையை இன்றைய தினம் குறித்த நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று மாலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். இதனூடாக சாதகமான பிரதிபலன்கள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் ஸ்திரமான பொருளாதாரத்துடன் நாடு பயணிப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடிகள் ஊடாக அதிகாரத்தை கட்டியெழுப்பு நீங்கள் சிந்திப்பதாயின் அது இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன. பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது கனவு மாத்திரமே. அது ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

இதேவேளை, பொருளாதாரம் இப்போது நிலையாக உள்ளது. பயங்கரவாதமும் இனவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவத்தின் பணியாளர்கள் 100,000 ஆகவும், இலங்கை கடற்படை 40,000 ஆகவும், இலங்கை விமானப்படை 18,000 ஆகவும் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரச பணியாளர்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்துள்ளது. இந்த அரச பணியாளர்களில் படையினரும் கணிசமான பங்கினர். இலங்கையின் சனத்தொகைக்கு இலங்கையில் உள்ள படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த அடிப்படையில் படைகளை 1,00,000 கக் குறைக்க வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் தேசிய மக்கள் சக்தியாலும் முன்னெடுக்கபடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகின்றது. பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் – பொதுத் தேர்தலுக்கு முன் வடக்கு கிழக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும். மேலும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது அவர்களுக்கு காணிகளும் அவசியமில்லாமல் போகும். இந்தப் பின்னணியில் இப்போதே காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதையும் பாதைகள் திறக்கப்படுவதையும் காணலாம்.

இது பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பிரித்தானிய போன்ற மேற்குநாடுகள் போல் தேசிய மக்கள் சக்தி அரசும் தன்னுடைய இராணுவத்தை வினைத்திறன் மிக்க இராணுவமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து வினைத்திறன் மிக்க ‘ஸ்மாட்’ படையணிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஓய்வுபெற்ற வைஸ் மார்சல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் 28இல் திருகோணமலையில் உள்ள நவல் அன் மரிரைம் அக்கடமியின் அணிவகுப்பை ஏற்று டிசம்பர் 31இல் ஓய்வுபெற்ற இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை கொமான்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்களே ஓய்வெடுக்கிறார்

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்களே ஓய்வெடுக்கிறார்

 

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி முன்னுதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதாகவும், அதற்கேற்ப அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அந்த முன்னுதாரணத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது புலனாய்வு !

 

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

இதன் விளைவாக, தொடர்புடைய பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

 

“தமிழர்களுக்கு அனுர குமார பிச்சை போடத் தேவையில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் நாங்கள் பிச்சை தருகிறோம் உங்களுக்கு” தனது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத்திலேயே ஆரம்பித்து விட்டார் பா. உ அர்ச்சுனா. வடக்குக்குகான நிதி ஒதுக்கீட்டை வரவேற்றுப் பேசிய அர்ச்சுனா நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தடாலடியாக பல்டி அடித்து எங்களுக்கு பிச்சை வேண்டாம், உங்களுக்கு நாங்கள் பிச்சை போடுகிறோம் என்றார்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கினால் நாட்டிற்கு பில்லியன் கணக்கான முதலீடுகளை எமது சகோதரர்கள் கொண்டு வருவார்கள் என நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மொத்த மூலதனச் செலவில் வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 0.1 வீதம் மட்டுமே ஆகும். இது அநுர அரசாங்கம் தமிழர்களுக்கு போட்ட பிச்சை. 45,000 தமிழர்களை கொன்றுவிட்டு இதுவே எங்களுக்கு போடும் பிச்சை.

இதேவேளை, சுகாதாரத் துறையில் வடக்கிற்கு 0.6 வீதமும் கிழக்கிற்கு 0.8 வீதமும் ஒதுக்கியுள்ளீர்கள். முடிந்தால் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குங்கள். பில்லியன் கணக்கான பணத்தை நாம் நாட்டிற்குள் கொண்டு வருகின்றோம். நான் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.

அடிக்கடி நிறம்மாறும் அர்ச்சுனா விழுகின்ற பக்கம் குறிவைக்கிறார் என்கிறார் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம். பா உ அர்ச்சுனா வெளியிடும் புள்ளிவிபரங்கள் அவர்களுக்கு ஏற்றவகையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் 2009 மே 17 வரை சர்வதேச அளவில் புலி உறுப்பினர்களிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் இருந்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் வருமானம் வந்தகொண்டிருந்தது. அனால் 2009 மே18 இல் தலைவர் வந்து கேட்டால் தான் தருவோம் என்று பா உ அர்ச்சுனா குறிப்பிடும் சகோதரர்கள் அறிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கிய அத்தனை பில்லியன் சொத்துக்களும் ஒரே இரவில் காணாமல் போனது என்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் ஆய்வாளர் சோலையூரான். முடிந்தால் அர்ச்சுனா வேறு யாருக்கும் பிச்சை போட வேண்டாம் அவர் நேசிக்கும் தலைவனுடைய பாசறையில் வழந்தவர்கள் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு 15 வருடங்கள் துன்பத்தில் உளல்கின்றார்கள் அவர்களுக் உதவட்டும். அர்ச்சுனா தன்னுடைய சகோதரர்களைக் கேட்டு உதவச் சொல்வாரா? எனக் கேள்வி எழுப்புகின்றார் பாரிஸில் வாழும் சோலையூரான்.

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

 

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன. சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில்  நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

உலகில் எந்த நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான அக்கரையும் அதன் மீதான தாக்கமும் எமது நாட்டு மக்களுக்கு என்றும் இருக்கும்.  எமது மக்கள் பண்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, மாற்றத்தை விரும்பும் ஒரு சமூக அமைப்பாகவும் காணப்படுகிறார்கள்.  உலகிலேயே அதிக கண் தானம் செய்யும் நாடு என்ன என்று இணையத்தில் நீங்கள் தேடினால், இலங்கையின் பெயர்தான் பதிலாக வரும்.

வறுமையான நாடுகளில் 60 வீதமான நாடுகள் இன்று கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளன.  சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன், வளர்ந்துவரும் உலகுக்கு ஏற்ற வகையில், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இலஞ்ச – ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி நாம்  பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.  எமது நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டால், எமது நாட்டை சூழவுள்ள கடலை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

,துப்பாக்கித் தோட்டா மற்றும் விமானத்தில் வெடிக்கும் வெடி குண்டைவிடவும் சமகாலத்தில் சைபர் தாக்குதலால் அதிக அழிவுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய யுத்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேச ரீதியாக சட்டத்திட்டங்கள் காணப்பட்டாலும், சைபர் யுத்தங்களிலிருந்து மக்களை காக்க எந்தவொரு சட்டமும் கிடையாது. இதனால், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு ஒன்று அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

யாழ்ப்பாண விஜயத்தின்போது எதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க 12 மணிநேரத்தை வீதியில் வீணாக்கினார் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07.02.25) கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்பவர் ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஹெலிகாப்டர் இருக்கும்போது எதற்காக அவர் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? இது நவீன உலகம். நான் பிரதமருக்கும் அதையே பரிந்துரைக்கின்றேன். தனிப்பட்ட ரீதியில் ஹரிணி அமரசூரிய என்று இல்லாமல் நாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருக்கும் போது ஏன் நீங்கள் இதை பாவிக்கின்றீர்கள் இல்லை? இது ஒரு இழப்பு இல்லை. நீங்கள் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழித்து இழக்கும் பணமே நாட்டுக்கு வீண்விரயமானது. எதிர்க்கட்சியாக நான் இதை முன்மொழிகிறேன். இவ்வாறானவை தேவையற்ற செலவீனங்கள் இல்லை. இதுதான் நீங்கள் நாட்டை முன்னேற்றும் வழி” என்றார்.

ரவி கருணாநாயக்கவின் கருத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி உட்பட்ட முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் தம்முடைய நேரம் தொடர்பில் அதீத கவனம் எடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளை இன்னொரு சாரார் வான்வழியால் பயணித்தால் நாட்டின் தலைவரால் மக்களின் நிறைகுறைகளை அறியமுடியாது என்றும், இவ்வாறான பயணங்களின் ஊடாக அனுர சாமான்ய மக்களின் நிலையை அவதானிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.