சிவசேனை

சிவசேனை

பசுவதை தடைச்சட்டத்தினை இயற்றுங்கள் – ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுக்கு மறவன்புலவுசச்சிதானந்தம் மகஜர் !

இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் சமயரீதியான பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் மண்டவத்தில், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவுசச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் ஆலோசனை கலந்துரையாடலில், வடமாகாணத்தில் சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் 05 விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் கேட்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தில் கொண்டுசேர்த்து அதனை அரசியலமைப்பினை உள்வாங்கவேண்டும், அதனைஎதிர்வரும் 06.01.2024 அன்று யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவர்களிடம் மகஜரும் கையளிக்கயுள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவுசச்சிதானந்தம் தெரிவித்தார்.

அந்த 05 அம்சகோரிக்கையில்,

01.பல்லாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு கொண்ட இலங்கையின் இந்து சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும்

02.மதங்களின் மதமாற்ற முயற்சியைத்தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் மதமற்ற தடைச்சட்டத்தினை இயற்றுக.

03.இந்துமதங்களும், பெளத்தமதங்களுக்கும் தெய்வமாக போற்றப்படும் பசுக்களை எவறும் கொல்லக்கூடாது?பசுவதை தடைச்சட்டத்தினை இயற்றுக.

04.ஒவ்வொரு ஆலயங்களில் நித்தியபூஜை வழிபாட்டில் பசுவினை பூஜைகள் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.

05.ஆரம்பமுன்பள்ளி பருவத்தில் உள்ள சிறார்களின் பசுவினை பாதிப்பது பற்றிய நூல்கள் அறிமுகம் செயற்படுத்தவேண்டும். என்றவாறு காணப்படுகின்றது

இராமலிங்கேஸ்வர் அமைப்பின் செயற்பாட்டாளர் தி.சுந்தரேஸ்சன், சிவநேனை அமைப்பின் உறுப்பினர் த.புவனேந்தீரன், உருத்திரசேனை உறுப்பினர் சுஜீபன், இந்து தன்னார்ந்த தொண்டு சங்கம் தலைவர் வ.சாரகனான்,திரிலங்கா புரி ஆதீனம் தி.விபுலாந்த அடியார்,கோவிற்கடை ஜயப்பன் ஆலயத்தலைவர் த.கலாசாதக்குருக்கள், பசுவதை தடுக்கும் சமூக மன்ற தலைவர் ம.சிவலோகதேசிகசர்மா ஞானசீலன், உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

தமிழர் பகுதி ஆலயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசியல் தலையீடே காரணம் – பொலிஸார்

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்றையதினம் (22) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைவு பெற்றுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதோடு, குறித்த ஆலயத்தில் புதிய அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் குறித்த ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்றையதினம் குறித்த வழக்கானது வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கூறுகையில்,

வெடுக்கு நாறிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகம் அளித்திருந்தார்கள். சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக ஆஜராகியிருந்தார்கள். குறித்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸாரை விசாரணைக்குட்படுத்தப்பட்டது. அதில் பொலிஸ் சாஜனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.

அத்தோடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் குறித்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும் , இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை வருகின்ற 13.10.2022 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு எமது ஆலயங்களில் சில அரசியல் நடத்துவதே குறித்த பிரச்சினைக்கான காரணம். எமது ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும் அதற்கு எந்த தடையும் இல்லை அபிவிருத்தி பணிகளை செய்வதற்கே தடை செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பரப் பலகை இதையே கூறுகின்றது எனவும் கூறியிருந்தார்.