சட்டத்தரணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

சட்டத்தரணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அடிமைசாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களாக இருக்கின்ற தேசிய கீதம், தேசிய கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து தெரிவித்த விடுதலை புலிகள் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வேர்கள் புலனாய்வு அமைப்பின் புலனாய்வாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராகவுள்ள கஜேந்திரகுமார் தமிழ்தேசியம் – தனிநாடு என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது வெளிநாட்டு படிப்பு, சுகபோக வாழ்க்கை என இருந்த கஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இப்போது திலீபனுக்கு பேரணி வேறு செய்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது முதல் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் உறுதிப்பிரமாணத்தில் இந்த நாட்டிற்குள் இன்னுமொரு நாட்டையோ பிரிவையோ உருவாக்க மாட்டேன் என கையெழுத்திட்டு பாராளுமன்ற அமர்வில் இணையும் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு தமிழ் மக்களிடம் தனிநாடு பெற்றுத் தருவோம் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஊடகங்களிலும் தேசியக்கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்த போதும் அதற்குக் கட்டுப்பட்டே பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றுமொரு சட்டத்தரணி சுகாஸ் தாங்கள் தேசியக் கொடிக்கு அருகிலேயே செல்வதில்லை என்று ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதனால் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பி சங்கடப்படுத்த வேண்டாம் என அவருக்கும் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வாக்களிக்கவில்லை.

 “நான் கடைப்பாறையுடன் ரெடி ! நீங்கள் அலவாங்கோடு ரெடியா ? தையிட்டி விகாரை உடைக்கலாம்” கஜா அணிக்கு சவாலாக மாறும் பா உ அர்ச்சுனாவின் குசும்பு

“நான் கடைப்பாறையுடன் ரெடி ! நீங்கள் அலவாங்கோடு ரெடியா ? தையிட்டி விகாரை உடைக்கலாம்” கஜா அணிக்கு சவாலாக மாறும் பா உ அர்ச்சுனாவின் குசும்பு

 

“தையிட்டி விகாரையை நாங்களே போய் இடிப்பம். மக்களைக் கூப்பிட்டு பலி ஆடுகள் ஆக்க வேண்டாம். நான் கடைப்பாறையுடன் ரெடி, நீங்கள் சட்டத்தரணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சட்டத்தரணி சுகாஸ், செல்வராஜா கஜேந்திரன் அலவாங்கோடு ரெடியா?” என குசும்பு விட்டு, தையிட்டி விகாரைப் பிரச்சினையின் சூட்சுமத்தை உடைத்தார், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா. கட்டி முடிக்கப்பட்ட எந்த மத வழிபாட்டுத் தலத்தையும் கோவிலையும் இடிப்பது முறையில்லை என்பதைத் தெளிவாக சனிக்கிழமை இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முன்வைத்து, தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பா உ இராமநாதன் அர்ச்சுனா எச்சரித்திருந்தமை தெரிந்ததே.

யாருக்கும் புரியாத புதிராக தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் 100வது நாள் நெருங்கும் வரையில் தன்னை நோக்கி ஊடகங்களை திசை திருப்பியவாறே அர்ச்சுனா தனது அரசியலை முன்னெடுக்கின்றார். தமிழ் தேசியவாதிகள் பேசுகின்ற அதே மொழியைப் பேசி அவர்களை பந்தாடிவரும் அர்ச்சுனா பா உ சிறிதரன் போன்றவர்களை கத்தரித்தோட்டத்து வெருளிகள் என விமர்சிக்கின்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் இருந்து வந்த முறுகல் நிலை, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அர்ச்சுனா தையிட்டி விகாரை தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொதிப்படைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணி சுகாஸ் வருமாறு எதிர்வினையாற்றியுள்ளார்:

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், முன்னான் பா உ செல்வராஜா கஜேந்திரன், மற்றும் பா உ சட்டத்தணி பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ‘மொக்கு சாம்பிராணிகள்’ என்றும் பா உ அர்ச்சுனா சொல்லம்புகளால் தாக்கியுள்ளார்.

அயோத்தியில் பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டுவேன் என்று சொல்லி பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு பிஜேபி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்ததும் இடிக்கப்பட்ட பள்ளிவாசலில் ராமர் கோயில் கட்டப்பட்டது.

அதேபோல் தையிட்டியில் கட்டி முடிக்கப்பட்ட விகாரையை இடித்து இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை தன்பக்கம் ஈர்க்க முடியும் என மனப்பால் குடிக்கின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான். கஜேந்திரகுமார் போன்று இனவாதத்தைத் தூண்டிவிடும் சக்திகள் தெற்கிலும் பரவாலாக உள்ளனர். இங்கு விகாரை உடைத்தால் அங்கு கோயில்கள் உடைக்கப்படும். தெற்கில் மீண்டும் கஜேந்திரகுமார் பரம்பரையின் கூட்டாளிகளான இனவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள். இவர்களுடைய அரசியல் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் என்கிறார் சோலையூரான்.

தனக்கு அருகில் இருந்து கொண்டு அமைச்சர் ஹர்ச நாணயக்கரவிடம் ‘மச்சான்’ உறவு கொண்டாடி தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை கேட்டு தீர்த்துக்கொள்ளும் பொன்னம்பலம் பரம்பரையில் வந்தவர்கள் அன்றும் இன்றும் தங்களுடைய பிரச்சினைகளை ஆளுபவர்களுடன் ‘மச்சான் உறவுகொண்டாடித் தீர்த்துக்கொள்கின்றனர்’ என்று சுட்டிக்காட்டுகின்றார் பா உ அர்ச்சுனா. ஆனால் இவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் தையிட்டி விகாரையை உடைப்பம் என்று மக்களைத் தூண்டி விடுகின்றனர்.

இந்தப் பரம்பரைப் புத்தியை இவர்கள் இன்னமும் கைவிடவில்லை. இப்படித்தான் கஜேந்திரகுமாருடைய பாட்டன் ஐக்கியதேசியக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமையைப் பறித்தார். இவர்கள் இப்போது பா உ அர்ச்சுனாவுக்கு துரோகிப் பட்டம் கட்டுகின்றனர்.

இராமநாதன் அர்ச்சுனா தங்களுடைய வாக்கு வங்கியை தட்டிப் பறித்துவிட்டார் என்ற கோபம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது. வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்ச்சுனாவின் அணியும் தேர்தலில் குதிக்கும் மீண்டும் மக்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.