‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரானுடன் உரையாடல்
‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரானுடன் உரையாடல்
ஜேவிபி – என்பிபி உள்ளுராட்சியோடு நிறுத்திக் கொள்ளுமா ? அல்லது மாகாணசபை ஊடாக தமிழ் மக்களோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமா ?
வடமாகாண அளுநரின் ஆலோசணைக் குழு உறுப்பினர், அரசியல் மற்று சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் அவர்களுடனான கலந்துரையாடல்
உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் – தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட நீதிமன்றம் கட்டளை !
யாழ்.மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளுக்காக தமிழ் மக்கள் கூட்டணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுமாறு உச்ச நீதிமன்றம் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.
சட்டமா அதிபர் அலுவலகத்தில் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இலங்கை தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுக்கும் இடையில் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அக்கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக. ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறும். அவ்வாறு இணைக்கப்பாட்டுக்கு வராத மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
அதேவேளை , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 09 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு !
யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன வழக்கு தொடர்ந்துள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால், தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது என குறிப்பிட்டு, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையில், முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக கொண்டு களமிறங்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு, சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். நீட்சியாக இந்தமுறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம். எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும்
ஈபிஆர்எல்எப் முன்னாள் போராளிஇ சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரானுடன் நேர்காணல்
மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா
உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருடங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லை. ஆனாலும் அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில இடங்களையாவது கைப்பற்றுவதனூடாக மட்டுமே எதிர்கால அரசியல் செயற்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதில் ஈபிடிபி எவ்வளவுதூரம் வெற்றிபெறும் என்பது மே 6இல் தெரியவரும்.
தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !
வரும் உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் தேசியக் கட்சிகளின் வேர்களையே பிடுங்கிவிடுமா ? என்ற அச்சத்தில் தமிழ் தேசியம் தனது இருத்தலுக்கான அச்சுறுத்தலை உணர ஆரம்பித்துள்ளது. மக்களோடு அந்நியப்பட்டுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளனர் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.
தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளாத தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் நிகழும் தங்களுக்கொரு எதிர்காலம் அமையும் என்று முட்டாள்தனமாக நம்பி மிக மோசமான முடிவைச் சந்தித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளாத தமிழ் தேசியம் அவர்களின் பிணங்களில் ஒட்டுண்ணிகளாக வளர்ந்தது. கடந்த 15 வருடங்களாக புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு முந்திய மிதவாதத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எவ்வாறு குறும்தமிழ் தேசியவாத அரசியல் பேசினார்களோ அதேபோல் இன்றைய அரசியல் தலைவர்களும் அதனையே பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றைக்கு எதற்காக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களைச் சுட்டுக்கொன்றார்களோ அதனையே தான் அல்லது அதற்கும் மேல் மோசமான அரசியலையே தமிழீழ விடுதலைப் புலிகளினதும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பெயரிலும் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்கின்றனர். இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அன்றைய சிந்தனையோடு இருந்திருந்தால் பா உறுப்பினர்கள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.
தமிழ் மக்களை வாயால் வடைசுட்டு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற கருதும் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதம் கடந்த காலத்திலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மக்கள் கிளிநொச்சியில் விவசாய இரசாயணங்கள் கலந்த தண்ணீரை குடிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மலசலம் கலந்த கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கின்றனர். அவர்களுக்கு குழாய்நீர் வழங்க நிதி; ஒதுக்கப்பட்டது. பா உ சிறிதரனுக்கு வாக்களித்தவர்களுக்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை. ஆனால் பா உ சிறிதரனுக்கு யாழ் நகரில் ஒரு வீடு கொழும்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். தமிழ் மக்கள் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதிகளின் ஏமாற்று வித்தைகளை நன்கு படித்துவிட்டார்கள்.
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தாங்கள் கைகாட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று கனவு கண்டனர். அதற்குப் பின் நடந்த பொதுத் தேர்தலின் போது கூட தாங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதைக் கூட அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. 10 ஆசனங்கள் தருவார்கள் தாங்கள் தான் தமிழ் பெரும் தேசியக் கட்சி என்று கற்பனைக் கோட்டையில் மிதந்தனர்.
இவர்கள் மீதான நம்பிக்கையீனம் தேசிய மக்கள் சக்தியின் பெரும் முதலீடானது. தேர்தலுக்கு முன்பிருந்தே தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியது. தமிழ் தேசியம் அவழ்த்துவிட்ட வலதுவாரி குறும் தேசியவாத கருத்துகளுக்கு மக்கள் செவிசாயக்கவில்லை. அவர்களின் பாரம்பரிய ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். தேசம்நெற் எதிர்வு கூறியது போல் தேசிய மக்கள் சக்தி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதுடன் வடக்கு கிழக்கில் ஏழுஆசனங்களைப் பெற்றது. தற்போது தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கின் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது.
ஒன்பது கட்சிக் கூட்டணி ஆரம்பத்திலேயே சில்லு சகதிக்குள் சிக்குண்ட நிலையில் நின்ற இடத்திலேயே சில்லுச் சுற்றுகின்றது. அதனைத் தூக்கிவிடக் கூடியவர்கள் யாரும் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, முகவரியற்ற ஆய்வாளர் வி சிவலிங்கத்தின் மொழியில் சொன்னால் உதிரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த ஒன்பது கட்சிக் கூட்டமைப்பில் தனித்துவமும் வாங்கு வங்கியும் உள்ள ஒரே கட்சி சமத்துவக் கட்சி. ஒற்றுமைக்காக அழைக்கும் போது தனித்து நிற்கமுடியாததால் வேறு வழியில்லாமல் இணைந்துள்ளனர். ஏனைய எட்டுக் கட்சிகளின் பாவ மூட்டைகள் கடந்த அரசியல் காலத்தில் செய்த ஊழல் மோசடிகளால் நிறைந்துள்ளது. இதனைத் தனித் தனியாக எழுதினால் அதற்கு தனிக்கட்டுரை எழுத வேண்டும். அதனால் ஏற்கனவே சங்கு களவாடப்பட்டு விட்டது, லைக்கா சுபாஸ்கரன் சங்கூதுகின்றார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் உண்டு. இந்த நிலையில் கொள்கையற்ற உதிரிகள் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உள்ளுராட்சித் தேர்தலில் ஊதுகின்ற சங்கிங்கு மக்கள் காதுகொடுப்பார்களா?
போகின்ற போக்கி உள்ளுராட்சித் தேர்தல் வலதுசாரி குறும்தேசியவாதிகளாகிப் போன தமிழ் தேசியவாதிகளுக்கு ஊதப்படும் கடைச்சிச் சங்காக அமையப் போகின்றது. தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் உள்ளுராட்சி சபைகளை வென்றெடுப்பதைக் காட்டிலும் வடக்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மக்கள் மத்தியில் அதிக பிரசன்னத்தைக் கொண்டிராத தமிழ் தேசியவாதம் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் அதீத பிரசன்னத்தை கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளத்திலும் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை கொண்டிருக்கவில்லை.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் இருந்து தூரமாகவே உள்ளனர். அவர்ளை மக்கள் அணுகக் கூடிய அளவுக்கு ஊடகங்களால் அணுக முடியாத நிலையொன்றுள்ளது. துரதிஸ்டவசமாக தற்போது பாரம்பரிய ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் சொல்லிக் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அதனால் உள்ளுராட்சி சபையில் தேசிய மக்கள் சக்தி அலை வாக்குகளை அள்ளிச் செல்லவே வாய்ப்புள்ளது.
ஆனால் அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நீண்டகாலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் அணுகவும் கேள்வி கேட்கவும் வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிராந்திய ஊடகங்களும் அணுகும் வழிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைக்காவிட்டால், நாட்டின் அத்தியாவசிய செலவுகளுக்காக கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலையில் எதிர்வரும் தேர்தலுக்கான செலவுகளுக்கு சரியான வரவு செலவு திட்டத்தை வழங்குமாறு நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம், மேலும் எங்கள் செலவினங்களை கவனமாக திட்டமிட வேண்டும். ஆண்டு முழுவதும் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. எனவே தற்காலிக அடிப்படையில் நிதியை விடுவிக்க முடியாது. எதிர்பார்த்தபடி மார்ச் மாதத்தில் IMF கிடைக்காத பட்சத்தில் நாம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் செலவு குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. தேர்தல் கமிஷன் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிட்டது, ஆனால் 6 பில்லியன் ரூபாய் கேட்டது. எங்களால் தற்காலிகமாக பணம் செலுத்த முடியாது, எனவே அவற்றை ஆய்வு செய்து சரியான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
எங்களிடம் தேவையான அனைத்து பணமும் இல்லை, எனவே முன்னுரிமைகளுக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும். 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் திவால்நிலையை எதிர்கொள்ளும் சிறு தொழில்களுக்கு நிவாரணம் வழங்க 20 பில்லியன் ஒதுக்கியுள்ளோம். இந்தக் கொடுப்பனவுகளைத் தாமதப்படுத்த வேண்டுமானால் பாராளுமன்றம் எனக்குத் தெரிவிக்கலாம்.
பொருளாதாரம் எனது முன்னுரிமை. பொருளாதாரம் மேம்படாவிட்டால் நமக்கு நாடு இருக்காது. நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை ஒன்று உள்ளது. நாட்டை இழந்து அரசியலமைப்பை வைத்துக் கொள்ளலாமா? நாட்டைப் பாதுகாத்தால்தான் அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும்” என்றார்.
வாக்கெடுப்பு நடத்தும் போது ஏற்படும் கணிசமான செலவைக் குறைத்தல் உட்பட பல்வேறு வழிகளில் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், விரைவில் டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தேர்தல் செலவு மற்றும் தேர்தல் பணியாளர்களின் தேவையை வெகுவாகக் குறைக்கும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கத்தின் அழைப்பாளர் அமண்டா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்குவதை ஒரு செலவாக கருதாமல் எதிர்கால முதலீடாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் மக்களின் மேலாதிக்கத்தை மதிக்கும் பட்சத்தில் அரசியல் சாதக பாதகங்கள் பற்றி சிந்திக்காமல் டிஜிட்டல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
“தேவையான திகதியில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சடித்து ஒப்படைக்க முடியாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படும் என கூறப்படுகிறது. பிரிண்டிங் பில் கோடிக்கணக்கில் உள்ளது. நாம் ஏன் டிஜிட்டல் முறைக்கு செல்ல முடியாது? டிஜிட்டல் வாக்களிப்பு மூலம் போக்குவரத்து, ஊழியர்களுக்கு பணம் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் செலவிடப்படும் கணிசமான தொகை மிச்சமாகும்,” என்றார்.
2048 ஆம் ஆண்டிற்குள் இந்த நாட்டை செழிப்பாக மாற்ற அரசாங்கம் எண்ணுகிறது. அதற்கு பொது சேவையை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம். அந்த வகையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிரேஷ்ட குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு, கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்தியா 2021 இல் மொபைல் அடிப்படையிலான மின்-வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இது ஒரு முன்னோடி திட்டம் மற்றும் இது 95 சதவீதம் வெற்றி பெற்றது. அதே சமயம், 1989 முதல் வாக்குச் சாவடிகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்துகிறது. இந்தியாவால் அதைச் செய்ய முடிந்தால், 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் ஏன் அதைச் செய்ய முடியாது? எனவும் அவர் கேட்டுள்ளார்.
மின்னணு தபால் மூலம் வாக்களிக்கும் முறை, தொலைபேசி மூலம் வாக்களிக்கும் முறை அல்லது இணையவழி வாக்களிப்பு முறைக்கு செல்லுமாறு சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நகரங்களில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குவதே எங்கள் முன்மொழிவு. மின்னணு வாக்குப்பதிவுக்கு இடமளிக்க தேவையான சட்டங்களை மாற்றவும். வாக்களிப்பது மட்டுமல்ல, அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.