பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது.
8.2 இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகளை தாய்மார்களை கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை பாலஸ்தீன சுதந்திர இயக்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.