ரமலான் நோன்புக் காலத்தில் இஸ்ரேல் மீண்டும் ஹாசாவில் வான்வெளி தாக்குதல் !
இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கிடையிலான முதல் கட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலப்பகுதி முடிவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் மேற்கொண்ட வான்வெளி கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இத்தாக்குதலில் ஹமாஸ் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் இம்மாதத்தில் இஸ்ரேல் வேண்டுமென்றே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு வாரங்களாக ஹாசா பகுதிக்குள் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல மனித உரிமைகள் அமைப்புக்கள் இத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றன. இஸ்ரேலை உடனடியாக போர் நிறுத்தத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.