இலங்கை போதைப்பொருள் பாவனை

இலங்கை போதைப்பொருள் பாவனை

 5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !

5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !

 

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்தள்ளது. இவர்களில் குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகின்றனர். இத்தகவல்களை இலங்கை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும் 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக பொலிஸ் அதிகாரிகளும் போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் விற்பனை தொடர்பிலும் கைதாகி வருகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றையதினமும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் தற்போதுவரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் கைதாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் , குற்றச்செயல்கள் தொடர்பாக 30000 பேர் கைது !

போதைப்பொருள் , குற்றச்செயல்கள் தொடர்பாக 30000 பேர் கைது !

 

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளதன்படி,

அத்துடன் இந்த நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 920 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 14,000 பேரும், போதைப்பொருள் குற்றங்களுக்காக 16,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,757 பேருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சுற்றிவளைப்புகளின் போது 197 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவற்றில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் அடங்குகிறது.

போதைப்பொருள் சோதனைகளின் போது, 14 கிலோ கிராம் ஹெராயின், 20 கிலோ கிராம் ஹஷிஷ், 33 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 1,123 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை!

10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

 

2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் ஒவ்வொரு ஆண்டும் 40000 பேர் வரை உயிரிழப்பு!

இந்த நாட்டில் போதைப்பொருள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக ஆபத்தான மருந்துகளின் தேசிய கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் புகையிலை பாவனையினால் சுமார் 20,000 பேரும், மது பாவனையினால் 18,000 பேரும்,மற்ற போதைப்பொருள் பாவனையினால் சுமார் 2,000 பேரும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என அதன் தலைவர் தெரிவித்தார்.

பாரிய போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படை வீரர்கள் உதவி !

பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (30) கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொடரும் யுக்திய – ஒரு லட்சம் பேர் கைது !

பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 03 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை 11 லட்சமாக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை சுமார் பதினொரு இலட்சமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது போன்றே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கொழும்பு மாவட்டத்தில் சுமார் 256 இடங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்தையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேக நபர்களிடமிருந்து 66 கிராம் ஹெரோயின், 232 கிராம் கஞ்சா , 167கிராம் ஐஸ் , 653 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்தும் இலங்கையின் 5 லட்சம் மக்கள்!

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 

இன்று (3) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார இதனை தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு வகையான போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர, புதிய வகையான போதை மாத்திரைகளும் சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் இவ்வாறான போதை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

 

இந்நிலையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 25 வகையான இரசாயனப் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அவற்றினால் புதிய வகையான போதை மாத்திரைகளை தயாரிக்க முடியும். எனவே இந்த இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அனமதி அவசியம் என்றார்.

 

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் !

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைபொருள் கடத்தல்காரர்கள் முற்றாக ஒடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை , போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், சில குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.