அல் ஜசீரா

அல் ஜசீரா

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஔிபரப்பான Head to Head நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் பெரும் சலசலப்பை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 88 தொடக்கம் 90 காலப்பகுதியில் இடம்பெற்ற பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் மீள சமூக வலைத்தளங்களில் தூசுதட்டப்பட்டு வருகிறது.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்றோர் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இஸ்ரேலால் முடக்கப்பட்டது சர்வதேச ஊடகமான அல் ஹசீனா !

ஹமாஸுடனான போருக்கு மத்தியில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் பணியகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அந்நாட்டின் அரசாங்க செய்தி தொடர்பாளர் அயூப் காரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“அல் ஜசீரா அலுவலகங்களை மூடுவதற்கும் அவர்களின் வேலையைத் தடைசெய்வதற்கும் அரபு நாடுகளின் நடவடிக்கையின் அடிப்படையில் எங்கள் முடிவை மேற்கொண்டுள்ளோம்.

 

வன்முறையை மேற்கொள்ளும் முகமாக இந்த ஊடகம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை, அந்நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.